எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 9 புதிய மாவட்டங்களுக்கு உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படாது என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளாட்சித் தேர்தல் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட், கடந்த 6-ம் தேதி வழங்கிய ஆணையின்படி தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காஞ்சிபுரம் , செங்கல்பட்டு வேலூர் , திருப்பத்தூர் , ராணிபேட்டை , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான தேர்தல் அறிவிக்கை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நாளை (9-ம் தேதி) வெளியிடப்படும். நாளை காலை 10 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் துவங்கும். தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.
ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 91, 975 பதவியிடங்களை நிரப்பிட நேரடித் தேர்தல் நடைபெறும். இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 9,624 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும். கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட போராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.
முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இரண்டாம் கட்டத்தில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 38, 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வரும் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் , ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், 4 விதமான வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும், பிரிதொரு வார்டிற்கு இள நீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
இத்தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவில் 24,680 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 25,008 வாக்குச்சாவடிகளிலும் மொத்தம் 49,688 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது . வாக்காளர்கள் - சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களை ( data base ) கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து ஆன்லைன் முறையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரித்துள்ளது .
இத்தேர்தலில் ஒரு கோடியே 28 லட்சத்து 25 ஆயிரத்து 778 ஆண் வாக்காளர்களும், ஒரு கோடியே 30 லட்சத்து 43 ஆயிரத்து 528 பெண் வாக்காளர்களும், 1,635 முன்றாம் பாலின வாக்காளர்களும் என ஆக மொத்தம் 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் முதல் கட்டத் தேர்தலில் ஒரு கோடியே முப்பது லட்சம் வாக்காளர்களும், இரண்டாம் கட்டத் தேர்தலில் ஒரு கோடியே இருபத்து எட்டு லட்சம் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். ஊராட்சித் தேர்தலுக்காக 702 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 13,062 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் தமார் 4,02,195 அலுவலர்கள் வாக்குப்பதிவுப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பதவியிடங்களைத் தவிர்த்து ஏனைய பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவிற்கு சுமார் 1,83,959 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நான்கு பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இதனை ஒரு முன்னோடி திட்டமாகக் கொண்டு 114 வாக்குச்சாவடிகளில் செயல்படுத்த உள்ளது .
தேர்தல் பார்வையாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ( IAS ) ஒருவர் விதம் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோர். மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடங்கள் - 27, மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் பதவியிடங்கள் - 27, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியிடங்கள் - 314, ஊராட்சி ஒன்றியத் துணைத்தலைவர் பதவியிடங்கள்- 314, கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவியிடங்கள்- 9,624 என மொத்தம் 10 ஆயிரத்து 306 பதவியிடங்களுக்கு மறைமுகத்தேர்தல் நடைபெறும்.
தேர்தல் நடத்தை விதிகள் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நடத்தை விதிகள் தொடரும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தற்போது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கல் பரிசு வழங்க தடையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் அட்டவணை:-
வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்:- 9.12.2019
மனு தாக்கல் செய்ய கடைசிநாள்:- 16.12.2019
வேட்பு மனுக்கள் பரிசீலனை:- 17.12.2019
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்:- 19.12.2019
முதல் கட்ட வாக்குப்பதிவு- 27.12.2019
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு- 30.12.2019
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்:- ஜனவரி. 02
தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும் நாள்:- ஜனவரி. 04
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
2 நாட்களில் முடிவுக்கு வந்த ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி., கிரிக்கெட் வாரியத்திறகு 60.59 கோடி ரூபாய் நஷ்டம்
28 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.60.59கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது
-
விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் பேரணி
28 Dec 2025சென்னை, தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க.வினர் பேரணி நடத்தினர்.
-
கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி மீட்பு
28 Dec 2025பெங்களூரு, கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்டார்.
-
விஜய்யின் அரசியல் பயணம்: இலங்கை முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து
28 Dec 2025கொழும்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்
-
சேலத்தில் ராமதாஸ் தரப்பில் இன்று பொதுக்குழுக் கூட்டம்
28 Dec 2025சென்னை, சேலத்தில் இன்று ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
-
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
28 Dec 2025பல்லடம், பல்லடத்தில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க.
-
மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு புகழஞ்சலி: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
28 Dec 2025சென்னை, மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு என் புகழஞ்சலி என்று த.வெ.க. தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
-
தர்மத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும் இறுதியில் அறம்தான் வெல்லும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
28 Dec 2025மதுரை, தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் தேர
-
அன்புமணி பின்னால் சென்றவர்கள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்: ஜி.கே.மணி பேட்டி
28 Dec 2025சேலம், சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.
-
கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று அவரது நினைவு நாளில் அ.தி.மு.க.
-
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியத்தின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Dec 2025சென்னை, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது இஸ்ரோ
28 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
-
துணை துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
28 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று முக்கிய நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் பொதுத்தேர்தல்
28 Dec 2025மியான்மர், மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கி நடைபெற
-
பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரம்: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை
28 Dec 2025பெங்களூரு, பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.
-
தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்
28 Dec 2025சென்னை, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச
-
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் ஜனாதிபதி முர்மு
28 Dec 2025பெங்களூரு, கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.
-
தயவுசெய்து மீண்டும் நடியுங்கள்: விஜய்க்கு நடிகர் நாசர் கோரிக்கை
28 Dec 2025சென்னை, நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க.-விடம் உண்மை இல்லை: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
28 Dec 2025டெல்லி, இன்று, பா.ஜ.க.-விடம் அதிகாரம் இருக்கிறது.
-
சம வேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
28 Dec 2025சென்னை, 3-வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்ப
-
2-ம் ஆண்டு குருபூஜை: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க.
-
த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
28 Dec 2025சென்னை, த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
விஜயகாந்த் 2-ம் நினைவு நாள்: பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினர்.
-
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: அஸ்ஸாமில் 10.56 லட்சம் போ் நீக்கம்
28 Dec 2025திஸ்பூர், அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைத் தொடா்ந்து, அந்தப் பட்டியலில் இருந்து 10.56 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.
-
அரசியலில் துணிவோடு செயல்பட்டவர்: விஜயகாந்திற்கு கனிமொழி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, அரசியலில் துணிவோடு செயல்பட்டவர் என்று விஜயகாந்திற்கு கனிமொழி எம்.பி. புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.



