முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் மாவட்டங்களை 25 ஆக பிரிக்க அமைச்சரவை ஒப்புதல்

வியாழக்கிழமை, 16 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களை 25 மாவட்டங்களாக பிரிக்க ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆந்திர மாநிலம் அமராவதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு நிர்வாக திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர் நானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், தற்போது உள்ள 13 மாவட்டங்களை 25 மாவட்டங்களாக பிரிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மார்ச் 31-ம் தேதிக்குள் புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணிகளை முடிக்க வேண்டும். மாவட்டங்களை பிரிக்க தனியாக ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒய்.எஸ்.ஆர் சேயுதா திட்டத்தின் மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் மாத ஓய்வூதியத்தை ரூ.3,000 வரை உயர்த்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. விதவைகள் மற்றும் தனியாக வாழும் பெண்களுக்கும் அரசாங்கம் ஓய்வூதியம் அளித்து வருகிறது. தற்போதைய திட்டத்தின்மூலம் 8.21 லட்சம் பெண்கள் பயன் பெறுவார்கள். 10,000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏற்றுமதி கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மின்சாரம் செலவு மற்றும் அரசாங்கத்தின் மீதான சுமையை குறைக்கும் வகையில் நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து