முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு பரிசோதனை சென்னையில் துவக்கம்

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு பரிசோதனை சென்னையில் துவங்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. 

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவில் கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்டு உள்ளது. 

இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டு அவர்களுடைய உடல்நிலையை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்தசூழலில், இங்கிலாந்தில் இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களில் ஒருவருக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து இங்கிலாந்தில் அஸ்ட்ரா ஜெனேகா சோதனைகள் மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானது என்று கூறி அனுமதி அளித்ததையடுத்து, அஸ்ட்ரா ஜெனகே நிறுவனம் பரிசோதனையை தொடங்கியது.

இதனையடுத்து ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்று சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு பரிசோதனை சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் தனியார் மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலை. உருவாக்கியுள்ள கோவிஷீல்டு மருந்து, இந்தியாவில் 16 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து