முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வங்கத்தில் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்: அமித்ஷா

வியாழக்கிழமை, 5 நவம்பர் 2020      அரசியல்
Image Unavailable

மம்தாவுக்கு எதிராக மக்கள் கோபத்தில் உள்ளனர். பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் அடுத்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பா.ஜனதா மூத்த தலைவர் பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிக பெரும்பான்மையுடன் மேற்கு வங்காளத்தில் அடுத்த அரசை பா.ஜனதா அமைக்கும். மத்திய திட்டங்களின் நன்மைகள் ஏழைகளுக்கு செல்வதைத் தடுக்க முதல்வர்  தடைகளை உருவாக்கி வருகிறார். நான் மேற்கு வங்காளத்தில் இருக்கிறேன், மம்தா பானர்ஜி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கோபத்தை உணர முடிகிறது. மோடியின் தலைமையில் மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம்.மேற்கு வங்கத்தில் பா.ஜனதா தொண்டர்கள்  தாக்கி கொலை செய்யப்படுகிறார்கள். இவ்வாறு அமித்ஷா கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து