முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மே மாதத்தில் தினசரி பாதிப்பு 19 ஆயிரத்தை எட்டலாம் : மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு மே மாதத்தில் 19 ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குநர் மருத்துவர் பிரப்தீப் கவுர் தெரிவித் துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ்தொற்றின் 2-வது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி, இரவு நேர ஊரடங்கு என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. 

இதனிடையே, தமிழக அரசின் மருத்துவ நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) கீழ் செயல்படும் தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் 1.3 சதவீதமாக உள்ள கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மே மாதத்தில் தினசரிபாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை எட்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினால் தொற்று பரவல் போக்கை மாற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து