முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு: இன்று விசாரணை

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      தமிழகம்
Image Unavailable

கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும். கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜிராம் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், 

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகள், தடுப்பூசி மருந்துகளை 90 சதவீத மக்களுக்கு இலவசமாக வழங்கும் நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள், மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், பொதுமக்களுக்கு 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 135 கோடி மக்கள் தொகையில் 2 முதல் 5 சதவீதம் மக்களுக்கே இந்தத் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகின்றன.  கொரோனா பரவலைத் தடுக்க, தமிழகத்தில் மேலும் 2 ஆயிரம் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். செங்கல்பட்டில், 100 ஏக்கர் பரப்பில் மத்திய அரசால் 2012-ல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி நிறுவனத்துக்கு ஏற்கெனவே 904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் உள்ளது. 58.5 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தைத் தயாரிக்கும் திறன் பெற்ற இந்த ஆலையில் உற்பத்தியைத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 

கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும். கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், 

தமிழகத்தில் மேலும் 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 12,49,292 ஆக அதிகரித்துள்ளது.   தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 19,112 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 11,09,450 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.   தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 14,612 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 89 பேரும், தனியார் மருத்துவமனையில் 48 பேரும் உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் நேற்று ஒரே நாளில் 6228 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 358573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   தமிழகத்தில் இதுவரை 2,32,38,475 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 1,40,512 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 1,25,230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நேற்று மட்டும் 12,450 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று மட்டும் 8,778 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 266 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 69 அரசு மையங்களும், 197 தனியார் மையங்களும் அடங்கும்.  வெளிமாநிலங்களில் இருந்து நேற்று தமிழகம் வந்த 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து வந்த 6 பேருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த 13 பேருக்கும், பீகாரில் இருந்து வந்த 7 பேருக்கும், ஜார்கண்டில் இருந்து வந்த 4 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த 3 பேருக்கும், புதுச்சேரியில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  வெளிநாடுகளில் இருந்து நேற்று தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து