எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளில் தற்போது அதிகபட்ச விலை மதிப்புள்ள அணியைவிட, 15 மடங்கு கூடுதல் விலைக்கு புதிய அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. பில்லியன் டாலர் பணம் கொழிக்கும் ஐ.பி.எல் புதிய அணிகளின் பண விளையாட்டு குறித்து தெரிந்துகொள்வோம்.
ஜி தொலைகாட்சி...
கடந்த 2006-ஆம் ஆண்டு, இந்தியாவில் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற முயன்று Zee தொலைக்காட்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து நாமே ஏன் ஒரு கிரிக்கெட் தொடரை நடத்தக் கூடாது என தொடங்கியதுதான் Indian Cricket League எனப்படும் ICL தொடர். 2 ஆண்டுகள் மட்டுமே நடைபெற்ற தொடருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகாரம் வழங்கவில்லை. மேலும், ஐசிஎல் தொடரால் கிடைக்கும் வருமானத்தை கவனத்தில் கொண்ட பிசிசிஐ, நாமே ஏன் ஒரு தொடரை உருவாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உதித்ததுதான் ஐ.பி.எல் எனப்படும் இந்தியன் பிரிமீயர் லீக்.
மும்பை அணி...
2008-ஆம் ஆண்டு அணிகள் ஏலம் விடப்பட்டபோது, மும்பை அணியை அதிகபட்சமாக 467 கோடிக்கு ஏலம் எடுத்தார் முகேஷ் அம்பானி. 13 ஆண்டுகளில் அது கிட்டத்தட்ட 15 மடங்காக அதிகரித்துள்ளது. துபாயில் நடைபெற்ற ஏலத்தில் லக்னோவை மையமாகக் கொண்ட அணியை, ஆர்பிஎஸ்ஜி குழுமம் 7,090 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இந்த முதலீடு குறித்து ஆர்பிஎஸ்ஜி குழும உரிமையாளர் கோயங்கா கூறுகையில், தங்களது முதலீட்டுக்குரிய மதிப்பு வருங்காலங்களில் அதிகரிக்கும் என்றும், 10 ஆண்டுகளில் பல மடங்காக உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி...
ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் தொலைக்காட்சி கடந்த 2018-ஆம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு 16 ஆயிரத்து 347 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இந்த தொகையிலிருந்து சுமார் 60 முதல் 70 விழுக்காடு வரையிலான பங்கு அணி உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது 10 அணிகள் விளையாடும் நிலையில், 2023 ஆம் ஆண்டு ஒளிபரப்பு உரிமை ஏலம் விடப்படும்போது, எவ்வளவு தொகைக்கு போகும் என்றே கணிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், ஐ.பி.எல் Title Sponser, டிக்கெட் விற்பனை மூலம் அணிகளுக்கான பங்கை பிசிசிஐ வழங்குகிறது.
விளம்பரங்கள்...
இவைதவிர ஒவ்வொரு அணியும் தங்களது நகரை மையமாகக் கொண்டு தங்களை மிகப்பெரிய வணிக நிறுவனமாகவே மாற்றிவிடுகின்றன. வீரர்கள் அணியும் உடையில் அச்சிடப்படும் விளம்பரங்கள் மூலம் வருவாயை குவிக்கின்றன. மேலும், ஒவ்வொரு தீவிர ரசிகரையும் தங்களது வருமானகவே பார்க்கின்றன ஐ.பி.எல் அணிகள்.
வர்த்தக ரீதியில்...
ஓர் அணியின் T-Shirt 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தொப்பி ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. சிகை அலங்காரம் தொடங்கி செருப்பு விற்பனை வரை விளம்பரதாரர் நிறுவனங்கள் வருவாயை ஐ.பி.எல்-லுக்கு கொடுக்கின்றன. 10 விநாடி விளம்பரத்துக்கு 14 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. ஐ.பி.எல் அணிக்கான முதலீடு என்பது, முதலுக்கு மோசம் இல்லாத பெரும் வர்த்தக விளையாட்டவே நீடிக்கிறது.
ஐ.பி.எல். அணிகளின் மதிப்பு
- 1) மும்பை இந்தியன்ஸ் - ரூ.447.6 கோடி.
- 2) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ.446 கோடி.
- 3) டெக்கான் சார்ஜர்ஸ் - ரூ.428 கோடி.
- 4) சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.364 கோடி
- 5) டெல்லி கேப்பிட்டல்ஸ் - ரூ.336 கோடி
- 6) பஞ்சாப் கிங்ஸ் - ரூ.304 கோடி.
- 7) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.300 கோடி
- 8) ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.268 கோடி
- 9) கொச்சி டஸ்கர்ஸ் - ரூ.1,533 கோடி.
- 10) சாஹாரா வாரியர்ஸ் புனே - ரூ.1,702 கோடி.
- 11) சிவிசி கேப்பிட்டல்ஸ் - ரூ.5,600 கோடி.
- 12) ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் - ரூ.7,090 கோடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
இந்தியாவில் பார்வையற்றோருக்கான மகளிர் டி-20 உலகக்கோப்பை நடக்கிறது
16 Sep 2025மும்பை : பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி: 2 இந்திய முன்னாள் வீரர்களுக்கு சம்மன்
16 Sep 2025புதுடெல்லி : ‘ஓன்எக்ஸ்பெட்’ என்ற பந்தய செயலியுடன் தொடர்புடைய வழக்கின் விசாரணையின் பகுதியாக அமலாக்க இயக்குநரகம் இவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இறுதி முடிவு 24-ம் தேதி வெளியீடு
17 Sep 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 24-ம் தேதி வரை நடக்கிறது.