எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பொது விநியோக திட்டத்தை மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி நியாயவிலை கடைகள் மூலம் பொருட்களை வழங்கி வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தான் விலையில்லா அரிசி அல்லது கோதுமை குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகிய பொருட்களும் மானிய விலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 2 கோடியே 20 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருப்பது அனைவருக்குமான பொது வினியோகத் திட்டம். அதே சமயத்தில் மற்ற மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கு சார்ந்த பொது வினியோகத் திட்டம். இதன்படி, முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் ஒரு நபருக்கு, ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ அரிசி மூன்று ரூபாய் என்ற விதத்தில் ஐந்து கிலோ அரிசி பெறத்தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் இந்த சட்டத்தின்படி மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை ஊரக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் செல்லக்கூடாது. இதன் அடிப்படையில் தான் தமிழ்நாட்டிற்கு அரிசியை மத்திய அரசு வழங்குகிறது. இந்த அரிசி போதுமானதாக இல்லை என்பதால், தமிழக அரசு வெளிச்சந்தையிலிருந்து தனது சொந்த நிதி மூலமாக அதிக விலை கொடுத்து வாங்கி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
இந்தத் திட்டத்தில் உள்ள பயனாளிகளை குறைக்கும் பொருட்டு, வருமான வரி விவரங்களை தமிழ்நாடு அரசின் உணவுத்துறை கேட்கிறதோ என்ற எண்ணம் தற்போது மக்கள் மத்தியில் நிலவுகிறது. ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ என்ற திட்டத்தை எதிர்த்தவர் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர், தற்போதைய முதல்வர். அவ்வாறு எதிர்த்ததற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று அனைவருக்குமான பொது வினியோகத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதுதான்.
ஏனெனில் பிற மாநிலங்களில் இலக்கு சார்ந்த பொது வினியோகத் திட்டம் தான் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் முன்னுரிமை பெற்றவர்கள் மட்டுமே பயனடைய முடியும். ஆனால் தற்போது அரசின் உணவுத்துறை எடுக்கும் நடவடிக்கையை பார்த்தால், ஒரு வேளை தமிழ்நாடு அரசு அனைவருக்குமான பொது வினியோகத் திட்டம் என்ற நோக்கத்தில் இருந்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கு சார்ந்த பொது வினியோகத் திட்டத்திற்கு திசை மாறுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பொதுவான வேண்டுகோளின் அடிப்படையில் வசதி படைத்தவர்கள் தாமாக முன்வந்து ரேஷன் பொருட்களை விட்டுத்தர முன்வந்தால் அதில் யாருக்கும் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில் வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து அனைவருக்குமான பொது வினியோகத் திட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால் அதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, அனைவருக்குமான பொது வினியோகத் திட்டம் என்பது தொடர்ந்து செயல்படுத்தப்படுவதையும், அரசின் செலவினத்தை மிச்சப்படுத்துவதற்காக பயனாளிகளின் எண்ணிக்கையை வருமானத்தின் அடிப்படையில் குறைத்து இலக்கு சார்ந்த பொது வினியோகத் திட்டமாக மாற்றும் முயற்சி தடுத்து நிறுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்