எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருச்சி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறக்கூடும் என்பதால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடலோரம் மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. காலையிலும் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
அதிகபட்சமாக திருச்சி மாநகரில் திருச்சி டவுன், திருச்சி ஜங்சன், ஏர்போர்ட் மற்றும் பொன்மலை பகுதிகளில் 206.5 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் மாநகரில் எங்கு பார்த்தாலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய வண்ணம் உள்ளது. மீண்டும் கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
லால்குடி-51.80, நந்தியாறு அணைக்கட்டு-66.20, புள்ளம் பாடி-57.80, தேவிமங்கலம்-16.40, சமயபுரம்-37.40, சிறுகுடி-20, வாத்தலை அணைக்கட்டு-31, மணப்பாறை-57.40, பொன்னணியாறு அணை-45.80, கோவில்பட்டி-54.20, மருங்காபுரி-75.40, முசிறி- 15, புலிவலம்-32, தா.பேட்டை- 34, நவலூர் கொட்டப்பட்டு- 60.60, துவாக்குடி-57, கொட்டம்பட்டி-42, தென்பறநாடு- 49, துறையூர்-46.
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பச்சமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் துறையூரில் உள்ள 285 ஏக்கர் பெரிய ஏரி நள்ளிரவில் நிரம்பி கடை நீர் வழிந்தது.
கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது ஏரி நிரம்பியதால், அப்பகுதி மக்கள் நள்ளிரவிலும் கடைக்கால் வழியும் செச்சை முனீஸ்வரர் கோவிலில் கூடி வழிபாடு செய்து, பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
இதற்கிடையில் செல்லிபாளையம், சிக்கத்தம்பூர், கீரம்பூர் பகுதி ஏரிகள் ஏற்கனவே நிரம்பி இருந்த நிலையில், நேற்று பெய்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. மேலும் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் அப்பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டது. வெள்ளநீர் மற்றும் மின்சாரம் துண்டிப்பு ஆகியவற்றால் அப்பகுதி மக்கள் வீதிகளில் தவிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம், மீமிசல், ஆவுடையார்கோவில், விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் நேற்று முன் தினம் மாலை தொடங்கிய பலத்த மழை நேற்றும் தொடர்ந்தது.
இந்த மழையால் புதுக்கோட்டை நகர் பகுதியில் ஆங்காங்கே குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.
திருச்சியில் கனமழை
திருச்சியில் பெய்து வரும் கனமழையால் கோரையாற்றில ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குழுமணி சாலையில் உள்ள செல்வநகர், அரவிந்த் நகர், சீதாலட்சுமி நகரில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே தீயணைப்பு படையினர் அப்பகுதியில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.
திருச்சியை சுற்றி பெய்துவந்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோரையாற்றின் இரண்டு கரையும தொட்டுக்கொண்டு வெள்ளநீர் சீறிப் பாய்ந்து செல்கிறது. மேலும், திருச்சியிலிருந்து மணப்பாறை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கருமண்டபம் பகுதியில் மழைநீரில் கடந்து செல்வதற்கு மிகவுள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
கரூர் நெரிசல் சம்பவத்தை எடுத்த அ.தி.மு.க.வினர்: துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்கள்
15 Oct 2025சென்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசியதாவல் அ.தி.மு.க.வினர் வெளிநாடப்பு செய்தனர்.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
15 Oct 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையானது.
-
ஒருநாள் - டி-20 போட்டி தொடர்: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி
15 Oct 2025மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி-202 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.
-
விளையாட்டு பல்கலை. சட்ட மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
15 Oct 2025புதுடெல்லி : உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தொடர்பாக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு த
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அ.தி.மு.க.விற்கு முதல்வர் பாராட்டு
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அதே இடத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
15 Oct 2025சென்னை : செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு த.வெ.க.
-
கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்
15 Oct 2025திருவனந்தபுரம் : கென்யா முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா கேரளாவில் மரணம் அடைந்தார்.
-
தண்ணீரிலும், தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்கப்படும் : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
15 Oct 2025சென்னை : தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ள
-
தமிழக அரசின் நடவடிக்கையால் ஆம்னி பஸ் கட்டணம் குறைப்பு
15 Oct 2025சென்னை : 4 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம் தமிழக அரசின் நடவடிக்கையால் குறைக்கப்பட்டுள்ளது.
-
எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி : சட்டசபையில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
15 Oct 2025சென்னை : எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி கொடுத்தனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாக கூறினார்.
-
த.வெ.க. சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவு
15 Oct 2025சென்னை : கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆறு பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவால் சுட்டுக்கொலை
15 Oct 2025காசா சிட்டி : இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றனர்.
-
முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வடமாநில பயணிகள் மீது நடவடிக்கை : தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
15 Oct 2025சென்னை : முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் பயணிப்பதையடுத்து அவர்களுக்கு தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி
15 Oct 2025டாக்கா : வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
15 Oct 2025தென்காசி : குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி ரூபாயை தாண்ட வாய்ப்பு
15 Oct 2025சென்னை : தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழ்நாடு அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி முதல் துணை மதிப்பீடு : சட்டசபையில் அமைச்சர் தாக்கல்
15 Oct 2025சென்னை : 2025-2026ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,915 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
தீபாவளிக்கு பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசுகளை விற்பதற்கு, வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
15 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
-
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு அபராதம்
15 Oct 2025துபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி
-
ஆந்திர மாநிலத்தில் ரூ.13,430 கோடியில் திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்
15 Oct 2025ஆந்திரா, பிரதமர் மோடி இன்று ஆந்திராவில் ரூ.13,430 கோடி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
-
கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள்
15 Oct 2025சென்னை : சட்டசபை கூட்டத்திற்கு நேற்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர்.
-
பாக்ஸ்கான் நிறுவன முதலீடு விவகாரம்: தமிழக அரசுக்கு அ.தி.மு.க. கண்டனம்
15 Oct 2025சென்னை : தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் முதலீடு தொடர்பாக முதல்வருக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
-
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா
15 Oct 2025நியூயார்க் : ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
-
உலக கோப்பையில் தொடர் தோல்வி: உஜ்ஜைனி கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்திய அணி
15 Oct 2025உஜ்ஜைனி : உலக கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய