எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் தருமபுரி வீடு உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெரகோட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.அன்பழகன். இவர் தருமபுரி மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளராகவும், பாலக்கோடு தொகுதியின் எம்எல்ஏவாகவும் உள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் இவர் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 13(2), 13(1) சட்டப்பிரிவுகளின் கீழ் பல்வேறு குற்றச்சாட்டுகள் கே.பி.அன்பழகன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் 62 வயதாகும் கே.பி.அன்பழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது மனைவி மல்லிகா 2-வது குற்றவாளியாகவும், 2-வது மகன் சசிமோகன் 3-வது குற்றவாளியாகவும், மூத்த மகன் சந்திரமோகன் 4-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். சந்திரமோகன் மனைவி வைஷ்ணவி 5-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
கெரகோட அள்ளியில் உள்ள கே.பி.அன்பழகனின் வீடு, அருகிலுள்ள பூலாப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அவரது மகள் வித்யா ரவிசங்கர் வீடு, பெரியாம்பட்டி மற்றும் பொன்னேரி பகுதிகளில் இயங்கும் அமைச்சருக்குச் சொந்தமான கிரஷர் குவாரி, கெரகோட அள்ளியைச் சேர்ந்த, அமைச்சரின் உறவினர் கே.டி.கோவிந்தன், முன்னாள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் சந்திரசேகர், தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி மற்றும் அவரது சகோதரர் வீடு ஆகிய இடங்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று (20-ம் தேதி) காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
தருமபுரி அடுத்த அன்னசாகரத்தில் உள்ள தருமபுரி நகர அதிமுக செயலாளர் பூக்கடை ரவியின் வீடு, கே.பி.அன்பழகனின் உதவியாளரான தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகில் வசிக்கும் பொன்னுவேல் வீடு, பென்னாகாரம் அடுத்த தாளப்பள்ளத்தில் உள்ள தருமபுரி ஆவின் ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், ஆந்திர மாநிலத்திலும் உள்ள, முன்னாள் அமைச்சருக்கு தொடர்புடைய சில இடங்கள் உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த சோதனை சம்பவம் தருமபுரி மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது.,
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையிலேயே உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன் மீது வழக்கு போடப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குமா..? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
15 Feb 2026முனிச், அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தப்படி ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமா அல்லது தொடந்து வாங்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "எண்ணெய் நிறுவனங்கள
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
15 Feb 2026தஞ்சை, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.
-
40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
15 Feb 2026சென்னை, 40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார
-
மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார்
15 Feb 2026புதுடெல்லி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி மேடம் பிரகிட் மேக்ரான் ஆகியோர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகின்றனர்.
-
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
15 Feb 2026ஈரோட்டு, தினமும் தி.மு.க. காங்கிரஸ் வார்த்தைப்போர் நடக்கிறது என்றும் தி.மு.க.
-
தமிழ்நாட்டில் பிப். 23-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
15 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க. அரசு செயல்படுகிறது அனைத்துலக வள்ளலார் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Feb 2026சென்னை, அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க.
-
ஜெர்மனி, முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜெலன்ஸ்கி - ரூபியோ முக்கிய பேச்சுவார்த்தை
15 Feb 2026முனிச், ஜெர்மனியில் நடைபெறும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து முக்கிய பேச


