தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மதுரை மாவட்டத்தில் ரூ. 51 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ. 49 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 67,831 பயனாளிகளுக்கு 219 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 41 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 தளங்களைக் கொண்ட கல்வியியல் கூடம் மற்றும் 5 தளங்களை கொண்ட குடியிருப்புக் கட்டிடம், மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ. 5 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடம், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் ரூ. 2 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, வரவேற்பு அறை மற்றும் இதர கட்டிடங்கள்,
பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ. 2 கோடியே 11 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், நூலகங்கள், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ரூ. 29 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் பாப்பாப்பட்டி, கருப்பட்டி, அரசப்பட்டி ஆகிய பஞ்சாயத்திற்குட்பட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் என மொத்தம் ரூ. 51 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 16 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் மூன்று இடங்களில் கட்டப்படவுள்ள நகர பொது நல ஆய்வகங்கள் மற்றும் 62 நகர்ப்புர நல மற்றும் நோய் எதிர்ப்பு மையங்கள், மதுரை மாநகராட்சி அலுவலகம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ரூ. 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அறிஞர் அண்ணா மாளிகை புதுப்பிக்கும் பணி மற்றும் மதுரை காந்தி மியூசியம் அருகில் ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகக் கட்டிடம், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ. 2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சலவைக் கூடங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடம்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தோப்பூரில் அமைந்துள்ள தொழுநோய்க்கான அரசு மருத்துவமனையில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தொற்று நோய்க்கான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் சிறப்பு மருத்துவமனை, மேலூர் அரசு மருத்துவமனையில் ரூ. 9 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அவசர சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த கட்டிடம், சமயநல்லூரில் அமைந்துள்ள ANM பயிற்சி பள்ளியில் ரூ. ஒரு கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தங்கும் விடுதிக் கட்டிடம்,
சமயநல்லூரில் அமைந்துள்ள சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மைய இரண்டாவது தளத்தில் ரூ. ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் பயிற்சிக் கட்டிடம், சமயநல்லூரில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மைய கட்டடத்தில் ரூ. ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அவசர சிகிச்சைக்கான கட்டிடம்,
வில்லாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்கப் பணி; அவனியாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடம் என மொத்தம் ரூ. 49 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
மேலும் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 67,831 பயனாளிகளுக்கு ரூ. 219 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து அமைச்சர் கே.என். நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, காணொலிக் காட்சி வாயிலாக மதுரையிலிருந்து அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.வெங்கடேசன், மு.பூமிநாதன், கோ.தளபதி, மதுரை மாவட்ட கலெக்டர் மருத்துவர் எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூர்யகலா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 23-05-2022
23 May 2022 -
காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி : இலங்கை எம்.பி. மனோ.கணேசன் உருக்கம்
23 May 2022இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு- அதிபர் ஜெலன்ஸ்கி கவலை
23 May 2022உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
-
குரங்கு காய்ச்சல் - 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் பாதிப்பு
23 May 2022ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
23 May 2022குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்
23 May 2022கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக பதவியேற்றார் அந்தோணி அல்பானீஸ்
23 May 2022கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
23 May 2022முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்: பயிர் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை அடைய இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 May 2022பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
23 May 2022புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
கொரோனா அச்சுறுத்தல் இருந்தும் மாஸ்க் அணியாமல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் 'கிம்'
23 May 2022தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
-
போர்க் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷிய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை உக்ரைன் கோர்ட்டு தீர்ப்பு
23 May 2022ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
-
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை
23 May 2022கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
-
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன ராஜஸ்தான், மகாராஷ்டிரா
23 May 2022கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி தாக்கல் செய்தார்
23 May 2022விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு: ஜப்பான் தொழில் துறையினரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு
23 May 2022டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும் அதிபர் ஜோ பைடன் சூளுரை
23 May 2022தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்து பேசுகிறார் : அண்ணாமலை மீது செந்தில்பாலாஜி விமர்சனம்
23 May 2022கரூர் : பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை.
-
போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாததால் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடல் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்: அரசு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் : ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை
23 May 2022சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
-
12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்
23 May 2022மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.