முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை உயர்வு: 3.50 லட்சத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு: ஒமைக்ரானும் 9,692 ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் கடந்த 235 நாட்களில் இல்லாத அளவாக கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.47 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் பாதிப்பும் 9,692 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 85 லட்சத்து 66 ஆயிரத்து 27 ஆக ஆதிகரித்துள்ளது.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 235 நாட்களில் இல்லாத அளவாக 20 லட்சத்து 18 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 703 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 88 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 5.23 சதவீதமாகவும், குணமடைந்தோர் 93.50 சதவீதமாகவும் குறைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 94,774 பேர் புதிதாக சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 777 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 19 லட்சத்து 35 ஆயிரத்து 912 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. 2020-ம் ஆண்டிலிருந்து இதுவரை 71.15 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 160.43 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன'' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 405 பேருக்கு புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பில் இருந்து 4.36 சதவிகிதம் அதிகமாகும். இதனால், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து