எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழ் இருக்கைக்கு தலைமைப் பேராசிரியராக மார்த்தா ஆன் செல்பி (Martha Ann Selby) நியமிக்கப்பட்டுள்ளார். இவர், திலிப்குமார் எழுதிய தமிழ்ச் சிறுகதை தொகுப்பினை ஆங்கிலத்தில் ‘கேட் இன் தி அக்ரஹாரம்’ அண்ட் அதர் ஸ்டோரீஸ்’ (Cat in the Agraharam and other stories என்னும் தலைப்பில் சமீபத்தில் மொழி பெயர்த்துள்ளார். சங்க இலக்கிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் 380 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியச் சிறப்பும் கொண்டது ஹார்வர்டு. அதில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கும் பணி கடந்த 2019- ஆண்டு இறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அதற்குத் தலைமைப் பேராசிரியரைத் தேர்வு செய்யும் பணியைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வந்தது. தற்போது, அப்பணிக்கு மார்த்தா ஆன் செல்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைக் கனடா வாழ்த் தமிழ் எழுத்தாளரும் ஹார்வர்டு மற்றும் டொரண்டோ பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கும் பணியில் பங்காற்றி வருபவருமான அ.முத்துலிங்கம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மார்த்தா ஆன் செல்பி வரும் செப்டம்பர் 1-ம் தேதி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைத் துறையில் ‘Sangam Professor of South Asian Studies’ என்கிற புதிய கல்விப் புலப் பணியில் இணையவிருப்பதாக முத்துலிங்கம் குறிப்பிட்டுள்ளார். மார்த்தா ஆன் செல்பி, ஆஸ்டின் நகரில் அமைந்துள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ‘சௌத் ஏசியன் ஸ்டடீஸ்’ துறையில் இணைப்பேராசியராகப் பணியாற்றி வருபவர். அங்கு அவர், இந்திய இலக்கியம், இந்து, பௌத்த மதக் கல்வி, இந்திய மருத்துவ முறை அறிமுகக் கல்வி உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளைப் பயிற்றுவித்து வருகிறார்.
இவர், 1994-ல், தமிழ் - சமஸ்கிருத இலக்கியங்களை ஆய்வு செய்து, சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சங்க இலக்கியத்தில் தொடர் ஆய்வுகளைச் செய்துவரும் இவருடைய நூல்கள், ஆக்ஸ்ஃபோர்டு, கொலம்பியா பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?
29 Dec 2025புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி: அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை.!
29 Dec 2025திருவனந்தபுரம், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி - பலர் காயம்
29 Dec 2025மணிலா, இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மெக்சிகோவில் ரயில் விபத்து: 13 பேர் பலி
29 Dec 2025ஒக்ஸாகா, தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் பலியாகினர்.
-
நேபாளம் பொதுத்தேர்தல்: முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்
29 Dec 2025காத்மாண்டு, நேபாளம் பொதுத்தேர்தலை முன்னிட்டு முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



