எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கோவை, தமிழகத்தில் புதுமை பெண் திட்டம் மூலம் 7 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், மகளிருக்கு சுயமரியாதை தந்தது உரிமைத்தொகை என்றும், 1.30 கோடி மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்குகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஆட்சிக்கு....
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று நடைபெற்ற தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மேற்கு மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாட்டில் கூடியுள்ள மகளிரைப் பார்க்கும் போது, தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகத் தெரிகிறது. எப்போதுமே தி.மு.க. தேர்தல் அறிக்கையே ஹீரோ. வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெறப் போகிறோம். அது உறுதி. பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்; பெண்களின் வெற்றியே நாட்டின் வெற்றி. திரண்டுள்ள மகளிர் அணியைப் பார்க்கும் போதே பவர் ஃபுல்லாக இருக்கிறது.
பெண்கள் முக்கிய பங்கு....
நிறைய இளம்பெண்கள் கூட்டத்தில் பங்கேற்றதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. கூட்டம் பவர் ஃபுல்லாக மட்டும் இல்லை; உமன் பவரால் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்வதாக உள்ளது. தொடக்கம் முதலே திராவிட இயக்கத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றார்கள். பெண்கள் படிக்கக் கூடாது, அடுப்படி தாண்டக் கூடாது என்று கூறி அடிமைப்படுத்தப்பட்டனர். அதையெல்லாம் உடைத்தெறிந்தது திராவிட இயக்கம்தான்.
இடஒதுக்கீடு வழங்க....
பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்; பெண்களின் வெற்றியே நாட்டின் வெற்றி. பெரியார் கட்டியெழுப்பிய தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. திராவிட இயக்கத்தால் பெண்கள் அடைந்த வளர்ச்சியை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும்.உள்ளாட்சியில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. தான். உள்ளாட்சி அமைப்புகள் போல, சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பெண்களுக்கு இடம் கிடைப்பதை பா.ஜ.க. விரும்பவில்லை.
1.30 கோடி மகளிருக்கு...
உரிமைத்தொகை திட்டம் நிறைய பெண்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது. 1.30 கோடி மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதுவரை 28 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளோம். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. பெண்களின் கல்வி உரிமை மற்றும் சம உரிமைக்காக பாடுபடுவது திராவிட இயக்கம். புதுமை பெண் திட்டம் மூலம் 7 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் செல்போன்களை அசெம்பிள் செய்வதே பெண்கள்தான். தமிழ்நாட்டில்தான் பெண் மேயர்கள் அதிகமாக உள்ளனர்.தேவையே இல்லாத நிபந்தனைகளுடன் 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை பாராளுமன்றத்தில் பா.ஜ.க. அரசு நிறைவேற்றியது.
காலை உணவுத் திட்டம்...
முதல்வரானதும் எனது முதல் கையெழுத்து ‘விடியல்’ பயணத் திட்டத்துக்குத்தான். புதிய வாய்ப்புகளைத் தேடி பெண்கள் ஏராளமானோர் விடியல் பயணம் மேற்கொள்கிறார்கள்.பெண்கள் வேலைக்கு சென்றாலும், நடைமுறையில் இருக்கும் பெரிய சிறை சமையல் அறைதான். மகளிர் சுமையை குறைக்கும் திட்டமாக காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 100 வேலை திட்டத்தை 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியதாக பச்சைபொய்யை எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். சங்கிகளே வெட்கப்படும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கொடுக்கிறார். கமலாலய அறிக்கையை அதி.மு.க. லெட்டர் பேடில் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்” இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
அன்புமணி புதிய கட்சி தொடங்கட்டும்: பா.ம.க.வின் செயல் தலைவர் பேச்சு
29 Dec 2025சேலம், அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சி தொடங்கட்டும் என்று ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்தார்.
-
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு
29 Dec 2025சபரிமலை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சமரிமலையில் இன்று முதல் நடை திறக்கப்படுகிறது.
-
வார தொடக்கத்தில் தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
29 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று பொருளாதார நிபுணர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
29 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
-
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
29 Dec 2025திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை கனிமொழி எம்.பி. திட்டவட்டம்
29 Dec 2025சென்னை, இண்டியா கூட்டணி உடையும் என்று நயினார் நாகேந்திரன் கனவு காண்கிறார் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., நிச்சயமாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை என்பதை
-
அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் - ராமதாஸ்
29 Dec 2025சேலம், அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் என்று ராமதாஸ் கூறினார்.
-
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரளாக உற்சாக வரவேற்பு
29 Dec 2025கோவை, தி.மு.க. மகளிர் மாநாட்டுக்காக நேற்று கோவை வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
3 மீனவர்கள் கைது எதிரொலி: மண்டபத்தில் மீனவர்கள் திடீர் போராட்டம்
29 Dec 2025ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமைப்பேன்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
29 Dec 2025சேலம், வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
4-வது நாளாக தொடர்ந்த போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் கைது
29 Dec 2025சென்னை, சென்னையில் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடை நிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-12-2025.
29 Dec 2025 -
வெல்லும் தமிழ் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
29 Dec 2025திருப்பூர், வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் தி.மு.க. மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகிறார்: 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
29 Dec 2025ராமேசுவரம், துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க. தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்று கொள்பவர்களுடன்தான் கூட்டணி : செங்கோட்டையன் திட்டவட்டம்
29 Dec 2025கோவை, த.வெ.க தலைவரை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள த.வெ.க.
-
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்..!
29 Dec 2025சேலம், சேலத்தில் நேற்று நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பற்றி பேசியபோது ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆரவல்லி மலைத்தொடர் விவகாரம்: முந்தைய தீர்ப்பை நிறுத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்..!
29 Dec 2025புதுடெல்லி, ஆரவல்லி மலைத்தொடர் விவகாரத்தில் முந்தைய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜர்
29 Dec 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ . அலுவலகத்தில் த.வெ.க. துணை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூ ஆஜராகினர்.
-
வரும் ஜனவரியில் கேரளா வருகிறார் பிரதமர் மோடி: பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கிறார்
29 Dec 2025திருவனந்தபுரம், வரும் ஜனவரி மாதம் கேரளா வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி - பலர் காயம்
29 Dec 2025மணிலா, இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



