எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வகங்கள், குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற நிகழ்விடத்திலேயே குற்றப் புலனாய்வாளர்களுக்கு அறிவியல்சார் சேவைகளை வழங்கி வருகின்றன. இதற்கென ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் குற்ற நிகழ்விடங்களை ஆய்வு மேற்கொண்டு தடயங்களை கண்டறியவும், தடய பொருட்களை ஆராய்ந்து குற்றம் எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என குற்றப் புலனாய்வாளர்களுக்கு அறிக்கை வழங்கவும், ஒரு உதவி இயக்குநர் பணிபுரிந்து வருகிறார்.
குற்ற நிகழ்விடத்திலேயே ஆரம்பகட்ட ஆய்வு மேற்கொள்ள ஏதுவாக ரூ. 3,92,70,000/- செலவில் 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இரத்தக்கறை, வெடிபொருள், போதைப் பொருள், துப்பாக்கிச்சூட்டின் படிமங்கள் ஆகியவைகளை குற்ற நிகழ்விடத்திலேயே அடையாளம் காணுவதற்கான கருவிகளை கையாளுவதற்கும், எந்தவித வெளிப்புற மாசுபடுதலுக்கும் தடய பொருட்கள் உட்படாதவாறு ஆய்வு மேற்கொள்வதற்குரிய உட்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாகனங்கள் சென்னை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி மற்றும் திருப்பூர் மாநகர ஆணையரகங்கள், வேலூர், தர்மபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம், இராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய காவல் மாவட்டங்களின் தடய அறிவியல் ஆய்வக பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்படும்.
தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் சென்னையிலும், வட்டார தடய அறிவியல் ஆய்வகங்கள் கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், வேலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம் மற்றும் தர்மபுரி ஆகிய 10 இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள தலைமை ஆய்வகம் மானுடவியல், துப்பாக்கியியல், உயிரியல், வேதியியல், கணினி தடயவியல், மரபணுவியல், ஆவணம், வெடிபொருள், கலால் (மதுபானங்கள் தர ஆய்வு), போதைப்பொருள், இயற்பியல், மதுவிலக்கு, குருதிவடிநீரியல் மற்றும் நஞ்சியியல் ஆகிய 14 பிரத்யேக ஆய்வுப் பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.
தர சான்றிதழ்
இப்பிரிவுகளின் ஆய்வுகள் சர்வதேச தரத்திற்கு இணையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாத காலமாக இத்துறையின் தலைமை ஆய்வகத்தில் உள்ள அறிவியல்சார் மனிதவளம், உட்கட்டமைப்பு மற்றும் ஆய்வகத்தின் பல்வேறு தர ஆவணங்களை பிற மாநில தடய அறிவியல் வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்து தேசிய பரிசோதனை மற்றும் அளவு ஒப்புகை ஆய்வகங்களின் தர அங்கீகார அமைப்பு (National Accreditation Board for Testing, and Calibration of Laboratories) தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகத்திற்கு ISO/IEC 17025:2017 சர்வதேச தரச் சான்றிதழை வழங்கியுள்ளது. தமிழக முதல்வரிடம் இச்சர்வதேச தரச் சான்றிதழை தமிழ்நாடு தடய அறிவியல் துறை இயக்குநர் (பொறுப்பு) முனைவர் திருநாவுக்கரசு காண்பித்து வாழ்த்துப் பெற்றார். இதன்மூலம், 14 பல்வேறு அறிவியல் ஆய்வு பிரிவுகளுக்கும் ஒருசேர சர்வதேச தரச் சான்றிதழ் பெற்றுள்ள ஒரே ஆய்வகம், தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என்.நேரு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திரரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம்: நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
01 Jul 2025மதுரை : திருப்புவனம் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் கந்தர்லால் சுரேஷ் தலைமையில், நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்
-
மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு
01 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவிக்கு வரும் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவி
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
01 Jul 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 1) பவுனுக்கு ரூ.840 என அதிரடி ஏற்றம் கண்டு விற்பனையானது.
-
வீடு, வீடாக சென்று பிரசாரம் ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Jul 2025சென்னை, டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
-
ராமநாதபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
01 Jul 2025புதுடில்லி : மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 87-ஐ ராமநாதபுரம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
தமிழகத்தில் பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்வு : அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
01 Jul 2025சென்னை : பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல், மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர்&n
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.58 குறைப்பு
01 Jul 2025புதுடில்லி : வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது.
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை: இ.பி.எஸ்.
01 Jul 2025சென்னை, “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க.
-
சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை : ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்
01 Jul 2025சென்னை : அஜித்குமார் 'கஸ்டடி' மரணம் தொடர்பான வழக்கை, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நில
-
த.வெ.க. கொடி பயன்படுத்த தடை விதிக்க கோரி வழக்கு: ஜூலை 3-ம் தேதி தீர்ப்பு
01 Jul 2025சென்னை : த.வெ.க.
-
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்காக வெற்றி நிச்சயம் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார் : ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு
01 Jul 2025சென்னை : சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்
-
10-வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; அதிகாரமளித்தலின் புதிய சகாப்தம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
01 Jul 2025புதுடில்லி : டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், அதிகாரமளித்தலின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்த ஒரு பயணத்திற்கு நாம் சாட்சியாக நி
-
சீதை பிறந்த இடத்தின் வளர்ச்சிக்கு ரூ.883 கோடி: பீகார் அமைச்சரவை ஒப்புதல்
01 Jul 2025பாட்னா : பீகார் மாநிலத்தில், சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள புனித தலங்களின் மேம்பாட்டிற்காக ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களு
-
இ.பி.எஸ். வீட்டிற்கு செல்வீர்களா? - முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்
01 Jul 2025சென்னை : இ.பி.எஸ். வீட்டிற்குச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த பதிலளித்துள்ளார்.
-
அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணம் உயர்வு: அரசாணை
01 Jul 2025சென்னை : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் உயர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
நான் முதல்வன் திட்டம்: ஊக்கத்தொகை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
01 Jul 2025சென்னை : யு.பி.எஸ்.சி. மெயின்ஸ் தேர்வுக்கான ரூ. 25 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் தொடங்கி உள்ளது.
-
இளைஞர் மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை: அமைச்சர்
01 Jul 2025புதுக்கோட்டை : திருப்புவனம் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
-
கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்
01 Jul 2025சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
காவலாளி அஜித்குமார் வழக்கில் போலீசாரின் உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
01 Jul 2025திருப்புவனம், போலீஸார் விசாரணையில் கோயில் காவலாளி உயிரிழந்த வழக்கில் 5 காவலர்கள் குடும்பத்தினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
-
கோவில் காவலாளி உயிரிழந்த சம்பவம்: மானாமதுரை டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்; எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
01 Jul 2025சிவகங்கை : போலீஸ் விசாரணையில் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை டி.எஸ்.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
தெலங்கானா ரசாயன ஆலை விபத்து உயிரிழப்பு 44 ஆனது : ரூ.1 கோடி இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு
01 Jul 2025ஐதராபாத் : தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.&nb
-
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
01 Jul 2025சென்னை, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4
-
சிவகாசி கோட்டாட்சியராக பாலாஜி பொறுப்பேற்ப்பு
01 Jul 2025விருதுநகர், சிகாசி கோட்டாட்சியராக மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பாலாஜி பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.