முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டி-20 போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி புதிய சாதனை படைத்தார் மந்தனா

வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
mathana- 2022 08 04

Source: provided

பர்மிங்காம்: டி-20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2,000 ரன்களைக் கடந்த நபர் என்ற சாதனையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

2 ஆயிரம் ரன்கள்...

இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து இன்று மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை டி20 போட்டிகளில்  2000 ரன்களைக் கடந்த இரண்டாவது நபர் என்ற சாதனையப் படைத்துள்ளார்.

பார்படோஸ்... 

அவர் இந்த சாதனையை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் படைத்துள்ளார். பார்படோஸ் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் 7 பந்துகளை எதிர்கொண்ட ஸ்மிருதி மந்தனா 5 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 5 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும்  அவர் புதிய  சாதனை படைத்துள்ளார். 

ரோகித் சர்மா... 

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 79 இன்னிங்ஸில் அவர் 2,004 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 27.45 ஆகும். அதில் 14 அரை சதங்கள் அடங்கும். அவர் அதிகபட்சமாக 86 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 96 இன்னிங்ஸில் 2,973 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 33.03 ஆகும். அதில் 4 சதங்கள் மற்றும் 22 அரை சதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 118 ஆகும். பார்போடாஸ் அணிக்கு எதிராக விளையாடியப் போட்டியில் இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து