எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமரை தன் கூட்டணியில் தக்கவைக்க பா.ஜ.க. எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் தொடர்ச்சியாக லாலுவின் ராஷ்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் பீகாரில் மெகா கூட்டணி ஆட்சி அமைகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய 'நிதி ஆயோக்' கூட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புறக்கணித்தார். ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு.) கட்சியின் இந்தப் புறக்கணிப்பின் மூலமாக பீகார் அரசியலில் சூடு பறக்கத் தொடங்கியது.
இதனால், பீகாரில் உருவான ஆட்சி மாற்ற சுழலை மாற்றும் நடவடிக்கையாக கடைசி முயற்சியாக டெல்லி மற்றும் பாட்னாவில் பல அதிரடி நடவடிக்கைகளை பா.ஜ.க. எடுத்தது. இதன் ஒருபகுதியாக பீகாரின் முடக்கப்பட்ட மூத்த தலைவர்களான ரவிசங்கர் பிரசாத்தும், ஷா நவாஸ் உசைனும் திங்கள்கிழமை டெல்லிக்கு அழைக்கப்பட்டனர்.
இவர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், முதல்வர் நிதிஷ் குமாரை கூட்டணியில் தக்கவைக்க பா.ஜ.க. வியூகம் அமைத்தது. நிதிஷ் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த பீகாரின் மூத்த தலைவர்கள் நேரில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் பீகாரின் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் டாக்டர். சஞ்சய் ஜெய்ஸ்வால் மற்றும் பொதுச் செயலாளர் சஞ்சீவ் சவுரஸியா எம்எல்ஏ மற்றும் மருத்துவ நலத் துறை அமைச்சர் மங்கள்பாண்டே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களின் பேச்சுவார்த்தைக்கு முதல்வர் நிதிஷ் குமார் செவிசாய்த்ததாகத் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், செவ்வாய்க்கிழமை நிதிஷ் குமாருடன் போனில் பேசியதாகத் தெரிகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில், மத்திய அமைச்சர் அமித் ஷா பல மாற்றங்களைச் செய்ய தானாகவே முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக முதல்வர் நிதிஷ் குமாரின் முக்கிய எதிரியாகக் கருதப்படும் சபாநாயகர் விஜய்குமார் சின்ஹாவையும் கட்சியிலிருந்து நீக்க தயாரானதானதாகவும் தெரிகிறது.
இதனிடையே, பீகாரின் பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அஸ்வின் சவுபே, ‘என்டிஏ அரசை பீகாரில் தக்க வைக்க அனைத்தையும் தியாகம் செய்யத் தயார்’ என அறிக்கைவிடுத்திருந்தார். இதற்கும் முதல்வர் நிதிஷ் குமார் அசரவில்லை.
இந்நிலையில், நேற்று காலை முதல்வரின் அரசு குடியிருப்பில் நடைபெற்ற ஜே.டி.யு.வினர் கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார் தமது கட்சியை ஒழித்துக்கட்ட பா.ஜ.க. சதி செய்ததாகக் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து மாலை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து, தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அடுத்து மெகா கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் அளித்தார்.
இதற்காக, மெகா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், கூட்டணியின் மற்ற உறுப்பினர்களான காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டோர் நிதிஷ் ஆட்சிக்கு ஆதரவளித்து கடிதம் அளித்தனர். தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் கைகோத்துள்ள நிதிஷ் குமார் 161 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவுள்ளார். புதிய அரசில் நிதிஷ் குமார் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இருப்பார் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவை சபாநாயகர் பதவி ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.
எம்எல்ஏக்களின் எண்ணிக்கை:
பீகாரின் 243 மொத்த தொகுதிகளில் கட்சிகளின் தற்போதையை நிலை: ஆர்ஜேடி-79, பா.ஜ.க.-77, ஜே.டி.யு.-45, காங்கிரஸ்-19, இடதுசாரிகள்-16, ஹிந்துஸ்தான் அவாமி சோர்ச்சா-4, ஏஐஎம்ஐஎம்-1, சுயேச்சை-1. ஒரு தொகுதி காலியாக உள்ளது.
பின்னணி என்ன? - கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.க. 74 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 43 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
ஆனால், நிதிஷ் குமாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் பா.ஜ.க.வின் கை ஓங்கி இருந்தது. இதன் காரணமாக ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் போராட்டம் நடந்தபோது மத்திய அரசை, நிதிஷ் கட்சியினர் விமர்சித்தனர்.
பீகார் சட்டப்பேரவையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிறைவு விழா அண்மையில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி தொடர்பான மலரில் முதல்வர் நிதிஷ் குமார் படம் இடம்பெறவில்லை.
கடந்த 22-ம் தேதி குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். இதில் பங்கேற்குமாறு பா.ஜ.க. விடுத்த அழைப்பையும் நிதிஷ் குமார் நிராகரித்தார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்ற விழாவிலும் நிதிஷ் பங்கேற்கவில்லை. இதனிடையே, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அண்மைக்காலமாக நிதிஷ் குமாரை அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இரு கட்சிகளிடையே மீண்டும் நெருக்கம் அதிகரித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி சாஸ்![]() 1 day 18 hours ago |
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 5 days 14 hours ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 1 week 1 day ago |
-
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்பட 10 பா.ஜ.க. எம்.பி.க்கள் ராஜினாமா
07 Dec 2023புதுடெல்லி, சமீபத்தில் நடந்து முடிந்த, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 9 பேரின் ராஜினாமா கடிதங்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 07-12-2023.
07 Dec 2023 -
அரசை குறை சொல்ல முடியாது: காரின் மீது அமர்ந்து உதவி கேட்கும் நடிகர் மன்சூர் அலிகானின் வீடியோ
07 Dec 2023சென்னை, நடிகர் மன்சூர் அலிகான் அரும்பாக்கத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக காரின் மேல் அமர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்ற ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
07 Dec 2023ஐதராபாத், தெலுங்கானா மாநில முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்ட ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: 7 ஆயிரம் வி.ஐ.பி.களுக்கு அழைப்பு
07 Dec 2023லக்னோ, ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க 3 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு
-
மிக்ஜாம் புயல் பாதிப்பு: ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
07 Dec 2023சென்னை, மிக்ஜாம் புயலார் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்டார்.
-
கேலோ இந்தியா தேசிய பாரா ஒலிம்பிக் டெபிள் டென்னிஸ் விராங்கனையாக மதுரை மாற்று திறானாளி பெண் தேர்வு
07 Dec 2023திருப்பரங்குன்றம், தேசிய அளவிலான மாற்று திறனாளிகள் பங்கு கொள்ளும் கோலோ இந்தியா பாரா டெபிள் டென்னீஸ் போட்டிக்கு மதுரையை சேர்ந்த மாற்றுதிறனாளி பெண் பாத்திமாபீவி தேர்வு செ
-
தமிழகத்தில் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
07 Dec 2023சென்னை, தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதிய வரி விதிப்பின்றி பட்ஜெட் தாக்கலாகும்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
07 Dec 2023புதுடெல்லி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்.1, 2024-ல் சமர்ப்பிக்கப்படும் நிதிநிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்பும் இருக்காது, மே மாதத்தில் நடைபெறவிருக்கும்
-
21 தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
07 Dec 2023சென்னை, 21 தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,367 கன அடியாக உயர்வு
07 Dec 2023சேலம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3.367 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 67.70 அடியாக உயர்ந்துள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சியின் விவாதத்தில் விவேக் ராமசாமி முன்னிலை
07 Dec 2023வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி அலபாமாவில் நடைபெற்ற குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான நான்காவது விவாத நிகழ்ச்சியில் விவேக் ராமசாமி முன்னிலை பெற்றார். 
-
அமெரிக்க பல்கலைக் கழகத்தில் துப்பாக்கி சூடு: 4 பேர் உயிரிழப்பு
07 Dec 2023நியூயார்க், அமெரிக்க பல்கலைக் கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்: மேடையில் வடகொரிய அதிபர் கண்ணீர்
07 Dec 2023பியாங்கியாங்க், நாட்டில் உள்ள பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனக் கூறி மேடையில் வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் கண்ணீர் விட்டு அழுதார்.
-
பாகிஸ்தானில் மர்ம நபர்களால் லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை
07 Dec 2023கராச்சி, பாகிஸ்தான் கராச்சியில் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ஒருவன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
-
ரூ. 4,000 கோடிக்கு வடிகால் பணிகள்: வெள்ளை அறிக்கை வெளியிட அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்
07 Dec 2023சென்னை, சென்னை மாநகரில் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடந்தாக கூறும் அரசு அது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அ.தி.மு.
-
கோவை, நீலகிரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Dec 2023சென்னை, தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வெள்ள பாதித்த 4 மாவட்டங்களில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு
07 Dec 2023சென்னை, தமிழகத்தில் மிக்ஜம் புயலாம் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில்
-
முதல்கட்டமாக, புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்
07 Dec 2023புதுடெல்லி, வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.
-
புயல் மழையில் நடனமாடிய ஆந்திர அமைச்சர் ரோஜா: வைரலாகும் வீடியோவால் சர்ச்சை
07 Dec 2023திருப்பதி, புயல் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் நடிகையும், ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா, குடையை வைத்தபடி மழையில் நடனமாடியபடி ரசித்தார்.
-
தமிழகத்தில் 2, 858 ஏரிகள் நிரம்பின: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
07 Dec 2023சென்னை, தமிழகத்தில் 2,858 ஏரிகள் நூறு சதவீதம் நிரம்பி உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழக வெள்ள பாதிப்புக்கு ரூ.1,011 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் - முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டாக பேட்டி
07 Dec 2023சென்னை, ‘மிக்ஜம்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியினை விரைவில் விடுவிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கி
-
தெலுங்கானா முதல்வராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி: கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
07 Dec 2023ஐதராபாத், தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நேற்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
-
கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை: அனைத்து சட்ட, தூதரக உதவிகளை விரிவுபடுத்தும் வெளியுறவுத்துறை
07 Dec 2023புதுடெல்லி, கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த விசயத்தில
-
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
07 Dec 2023சென்னை, புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.8) 4 மாவட்டங்