முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்ட காட்டு யானை சிக்கியது

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Elephant 2022-08-17

Source: provided

கோவை : தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்ட காட்டு யானையை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். காயத்தால் அவதியுறும் அந்த காட்டு யானைக்கு அவர்கள் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் 50-க்கும் அதிகமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழக-கேரள எல்லையில் உள்ள கொடுங்கையாற்றின் நடுவே 8 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இந்த யானை மிகவும் சோர்வான நிலையில் காணப்பட்டது. இதனை பார்த்த பட்டிசாலை பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காயத்தால் அவதியுற்ற அந்த காட்டு யானையை தமிழக மற்றும் கேரள வனத்துறையினர் கண்காணிக்க தொடங்கினர்.

அப்போது யாணை வாயில் காயத்துடன் எதுவும் சாப்பிட முடியாமலும், தண்ணீர் குடிக்க முடியாமலும் சுற்றி திரிவது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழக, கேரள வனத்துறையினர் இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டது.

இந்த நிலையில், தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்டு வந்த யானையை கோவை, தோலம்பாளையம் அடுத்த செங்குட்டை வனப்பகுதியில் வனத்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் யானைக்கு சிகிச்சை அளிக்க தமிழக, கேரள வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து