எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசைகள் மற்றும் விவசாய மின் இணைப்பு தாரர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணியானது கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் 2.34 கோடி வீடுகள், 22.87 லட்சம் விவசாய பம்பு செட்டுகள், 9.75 லட்சம் குடிசை வீடுகள் மற்றும் 1.65 லட்சம் விசைத் தறி ஆகிய நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
ஆனாலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காத மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நேற்று முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான முகாம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் 2811 பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம் நடக்கிறது. இந்த ஒவ்வொரு பிரிவு அலுலகத்திலும் தலா ஒரு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் ஊழியர் பொதுமக்களுக்கு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து கொடுக்கிறார். இதற்காக பொது மக்கள் தங்களின் ஆதார் அட்டை, மின்கட்டண அட்டை, செல்போன் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை பதிவு செய்து செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.யை பதிவு செய்தால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும். இதை உறுதி செய்யும் வகையில் வாடிக்கையாளர்களின் செல் போனுக்கு குறுஞ்செய்தியும் வரும்.
வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள் இவர்களில் யார் வேண்டுமானாலும் ஒருவர் ஆதார் எண்ணை இணைக்க முடியும். வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் கட்டண அட்டையுடன் தங்களின் ஆதார் அட்டை, செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்று இணைக்க வேண்டும். சென்னையில் 180-க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கப்படுகிறது.
இந்த நிலையில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் இணைப்புடன் தங்களின் ஆதார் எண்ணை இணைத்த பிறகு வீடு மாறி செல்லும் நிலையில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமோ என்ற குழப்பம் வாடகை தாரர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் வீடு மாறி வேறு வீட்டுக்கு குடியேறும் போது அந்த வீட்டின் மின் இணைப்பு எண்ணுடன் தங்களின் ஆதார் எண்ணை மீண்டும் பதிவு செய்ய முடியும். இதேபோல் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் வீட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
அவர்கள் இந்தியாவில் உள்ள தங்களின் ஆதார் அட்டை மூலம் ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது அந்த வீட்டில் வசிப்பவர்கள் அல்லது உறவினர்களின் ஆதார் எண்ணை இணைத்து மின் கட்டணம் செலுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மின் கட்டணம் செலுத்துவதற்காக வாடகைக்கு குடியிருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைப்பதால் வீட்டு உரிமையாளர்கள் கடும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் வாடகைதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் சொத்து தொடர்பான பிரச்சினை ஏற்படுமோ? வாடகைதாரர்கள் அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடினால் எதிர்காலத்தில் ஏதாவது சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இதனால் வாடகை தாரர்கள் ஆதாரை இணைப்பதற்கு பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். வாடகைதாரர்களின் ஆதார் இணைப்பு மூலம் வீட்டு உரிமையாளர்கள் தங்களின் உரிமைகளை எப்படி பாதுகாக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகளிடையே மீண்டும் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் பொது மக்களுக்கு உள்ளன.
ஆனால் அந்த சந்தேகங்களை யாரிடம் கேட்டு நிவர்த்தி செய்வது என்று அவர்களுக்கு தெரிய வில்லை. முகாம்களில் உள்ள ஊழியர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் சரியாக பதில் சொல்ல தெரிய வில்லை. இதற்கிடையே பொது மக்களின் கேள்விக்கு இணையதளத்தில் பதில் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் கேள்விகளை கேட்டு பதில் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்