எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கையில் எலும்புமுறிவு ஏற்பட்டபோதும் இடக்கையால் ஒருமுறை அல்ல, இருமுறை பேட்டிங் செய்து அனைவருடைய பாராட்டுகளையும் மீண்டும் பெற்றுள்ளார் விஹாரி. இந்தூரில் ஆந்திரா - மத்தியப் பிரதேசம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதல் நாளன்று விஹாரி பேட்டிங் செய்தபோது அவேஷ் கானின் பவுன்சர் பந்தால் அவருடைய இடக்கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் 16 ரன்களில் இருந்தபோது காயம் காரணமாக ஓய்வறைக்குத் திரும்பினார் விஹாரி. 2-வது நாளன்று அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தபோது அனைவரும் ஆச்சர்யப்படும் விதத்தில் இடக்கை பேட்டராக மாறியிருந்தார். இடக்கை மணிக்கட்டில் மேலும் காயம் ஏற்படாமல் தடுப்பதற்காக இப்படி விளையாடினார்.
முதல் இன்னிங்ஸில் 328/4 என்கிற நிலையில் இருந்த ஆந்திர அணி, 353/9 எனத் தடுமாறியபோது பேட்டிங் செய்ய களமிறங்கினார் விஹாரி. அணியின் நலனுக்காக வழக்கத்துக்கு மாறாக இடக்கையில் பேட்டிங் செய்தார். வழக்கமான வலக்கை பேட்டராக விளையாடினால் இடக்கை மணிக்கட்டில் மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் இடக்கை பேட்டராக விளையாட முடிவெடுத்தார். எனினும் மீண்டும் பேட்டிங் செய்தபோது வலக்கையைத்தான் பெரிதும் பயன்படுத்தினார். கிட்டத்தட்ட ஒரு கையால் பேட்டிங் செய்தார் என்றுதான் சொல்லவேண்டும். விஹாரின் இந்தச் செயலுக்குச் சமூகவலைத்தளங்களில் அதிக பாராட்டுகள் கிடைத்தன. பிரபல வீரர்களும் விஹாரியைப் பாராட்டினார்கள்.
________________
போலீஸ் ‘அவதார’ எடுத்த
டோனி போட்டோ வைரல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, போலீஸ் சீருடையில் மிடுக்கோடு நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக வலம் வந்து கொண்டுள்ளது. அந்தப் படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ‘இவர்தான் அசல் சிங்கம்’, ‘இது சூப்பர் சிங்கம்’, ‘சூப்பர் போலீஸ்’ என்றெல்லாம் சொல்லி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.அது போல இந்த முறை டோனி, போலீஸ் வேடத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம்தான் இப்போது வைரலாகி உள்ளது. டோனி, இந்திய பிராந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த உள்ளார் டோனி. அதற்காக அவர் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் அவர் பயிற்சி எடுத்து வருகிறார் என அனைவரும் அறிவோம். ராஞ்சியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான டி20 போட்டியின் போது அவர் இந்திய வீரர்களை சந்தித்திருந்தார். போட்டியையும் நேரில் பார்த்து ரசித்திருந்தார்.
________________
மத்திய பட்ஜெட்டில் ரூ.3,397 கோடி
விளையாட்டு துறைக்கு ஒதுக்கீடு
ஆசிய விளையாட்டு போட்டி, பாரீஸ் ஒலிம்பிக் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 2023-24-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,397.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.723.97 கோடி அதிகமாகும். 2022-23-ம் நிதியாண்டில் முதலில் அறிவிக்கப்பட்ட ரூ.3,062.60 கோடி நிதி பின்னர் ரூ.2,673.35 கோடியாக குறைக்கப்பட்டது. சீனாவில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
விளையாட்டு மேம்பாட்டுக்கான தேசியத் திட்டமான ‘கேலோ இந்தியா’ இம்முறையும் மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டமாக தொடர்கிறது. இந்த திட்டத்திற்கு கடந்த நிதியாண்டில் ரூ. 606 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,045 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இது ரூ.439 கோடி அதிகமாகும். உலகளாவிய விளையாட்டு போட்டிகளான ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க சிறந்த வீரர்களை உருவாக்குவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
________________
எஸ்ஏ20 லீக் தொடரில்
பங்கேற்கிறார் பவுமா
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமாவுக்கு எஸ்ஏ20 லீக் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற எஸ்ஏ20 ஏலத்தில் பவுமாவை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. தென்னாப்பிரிக்க வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டனாக இருந்தும் ஏலத்தில் யாரும் தன்னைச் சீந்தாததால் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். தற்போது, அவர் என்ன நினைத்தோரோ அது நடந்துள்ளது.
சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரில் ஒரு சதம் உள்பட 180 ரன்கள் எடுத்தார். 23 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடித்தார். ஸ்டிரைக் ரேட் - 114.64. ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, டாம் அபெலுக்குப் பதிலாக பவுமாவைத் தேர்வு செய்துள்ளது. ஜனவரி 10 அன்று தொடங்கிய எஸ்ஏ20 போட்டி, பிப்ரவரி 11 அன்று நிறைவுபெறுகிறது. 8 ஆட்டங்களில் 4 வெற்றிகளைப் பெற்று 17 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது சன்ரைசர்ஸ் அணி.
________________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தமிழ்நாட்டில் வரும் 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
12 Oct 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 16 -ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
இஸ்ரேலை சேர்ந்த பிணைக்கைதிகள் 20 பேரை விடுவிக்க ஹமாஸ் முடிவு
12 Oct 2025காசா : இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான உடன்படிக்கையின் படி முதல் கட்டமாக இஸ்ரேலை சேர்ந்த சுமார் 20 பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
-
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாட போராட்டக்குழு முடிவு
12 Oct 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் 15-வது முறையாக பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
-
நெருங்கும் தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் ஜவுளிக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
12 Oct 2025சென்னை : நெருங்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
-
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்: மூத்த வழக்கறிஞர் பராசரனுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் புகழாரம்
12 Oct 2025சென்னை : சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் பராசரன் என சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் புகழாரம் சூட்டினர்.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, மங்களூருக்கு சிறப்பு ரயில்
12 Oct 2025நெல்லை : தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
இந்தியா-ஆப்கான் கூட்டறிக்கை: ஆப்கன் தூதரிடம் பாக்., கண்டனம்
12 Oct 2025இஸ்லாமாபாத் : இந்தியா வந்துள்ள ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முட்டாகி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
12 Oct 2025மதுரை : தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
-
இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்: லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மீண்டும் தாயகம் திரும்புகின்றனர்
12 Oct 2025காசா : காசாவில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆர்வமுடன் தாயகம் திரும்பி வருகின்றனர்.
-
3 கத்தார் தூதர்கள் விபத்தில் பலி
12 Oct 2025எகிப்து : எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில் கத்தார் நாட்டைச் சேர்ந்த மூன்று தூதர்கள் உயிரிழந்தனர்.
-
தீபாவளி பண்டிகை, சட்டமன்ற தேர்தல்: சொந்த ஊர் செல்ல தயாராகும் பீகார் மாநில தொழிலாளர்கள்
12 Oct 2025திருப்பூர் : வருகிற 20-ந்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் பணிபுரியும் பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தம
-
நயினார் நாகேந்திரன் பிரசார வாகனம் மதுரை வந்தது
12 Oct 2025மதுரை : பா.ஜ.க.
-
58 பாக்., வீரர்களை கொன்று 25 ராணுவ முகாம்களை கைப்பற்றியது ஆப்கான்
12 Oct 2025காபூல் : தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிவிப்பில், இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றுவிட்டதாகவும், 25 பாகிஸ்தான் இராணுவ முகாம்
-
அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Oct 2025மிசிசிப்பி : அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
பார்வையாளர்கள் பார்க்காததை வழங்குவோம்: அல்லு அர்ஜுனின் படம் குறித்து இயக்குனர் அட்லி புதிய தகவல்
12 Oct 2025பெங்களூரு : அல்லு அர்ஜுன் படத்தில் பார்வையாளர்கள் பார்க்காததை வழங்கவிருப்பதாக இயக்குநர் அட்லி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித்ஷா கருத்துக்கு காங். கடும் கண்டனம்
12 Oct 2025புதுடெல்லி : முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித்ஷா வெளிப்படுத்திய கருத்துகளை விமர்சித்துள்ள காங்கிரஸ், ‘கடந்த 11 ஆண்டுகளாக அமித்ஷா என்ன செய்து கொண்டிருந்தார்?'
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-10-2025.
13 Oct 2025 -
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு: நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Oct 2025சென்னை, லட்சுமி காந்தன் பாரதியின் வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.