இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கையில் எலும்புமுறிவு ஏற்பட்டபோதும் இடக்கையால் ஒருமுறை அல்ல, இருமுறை பேட்டிங் செய்து அனைவருடைய பாராட்டுகளையும் மீண்டும் பெற்றுள்ளார் விஹாரி. இந்தூரில் ஆந்திரா - மத்தியப் பிரதேசம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதல் நாளன்று விஹாரி பேட்டிங் செய்தபோது அவேஷ் கானின் பவுன்சர் பந்தால் அவருடைய இடக்கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் 16 ரன்களில் இருந்தபோது காயம் காரணமாக ஓய்வறைக்குத் திரும்பினார் விஹாரி. 2-வது நாளன்று அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தபோது அனைவரும் ஆச்சர்யப்படும் விதத்தில் இடக்கை பேட்டராக மாறியிருந்தார். இடக்கை மணிக்கட்டில் மேலும் காயம் ஏற்படாமல் தடுப்பதற்காக இப்படி விளையாடினார்.
முதல் இன்னிங்ஸில் 328/4 என்கிற நிலையில் இருந்த ஆந்திர அணி, 353/9 எனத் தடுமாறியபோது பேட்டிங் செய்ய களமிறங்கினார் விஹாரி. அணியின் நலனுக்காக வழக்கத்துக்கு மாறாக இடக்கையில் பேட்டிங் செய்தார். வழக்கமான வலக்கை பேட்டராக விளையாடினால் இடக்கை மணிக்கட்டில் மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் இடக்கை பேட்டராக விளையாட முடிவெடுத்தார். எனினும் மீண்டும் பேட்டிங் செய்தபோது வலக்கையைத்தான் பெரிதும் பயன்படுத்தினார். கிட்டத்தட்ட ஒரு கையால் பேட்டிங் செய்தார் என்றுதான் சொல்லவேண்டும். விஹாரின் இந்தச் செயலுக்குச் சமூகவலைத்தளங்களில் அதிக பாராட்டுகள் கிடைத்தன. பிரபல வீரர்களும் விஹாரியைப் பாராட்டினார்கள்.
________________
போலீஸ் ‘அவதார’ எடுத்த
டோனி போட்டோ வைரல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, போலீஸ் சீருடையில் மிடுக்கோடு நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக வலம் வந்து கொண்டுள்ளது. அந்தப் படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ‘இவர்தான் அசல் சிங்கம்’, ‘இது சூப்பர் சிங்கம்’, ‘சூப்பர் போலீஸ்’ என்றெல்லாம் சொல்லி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.அது போல இந்த முறை டோனி, போலீஸ் வேடத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம்தான் இப்போது வைரலாகி உள்ளது. டோனி, இந்திய பிராந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த உள்ளார் டோனி. அதற்காக அவர் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் அவர் பயிற்சி எடுத்து வருகிறார் என அனைவரும் அறிவோம். ராஞ்சியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான டி20 போட்டியின் போது அவர் இந்திய வீரர்களை சந்தித்திருந்தார். போட்டியையும் நேரில் பார்த்து ரசித்திருந்தார்.
________________
மத்திய பட்ஜெட்டில் ரூ.3,397 கோடி
விளையாட்டு துறைக்கு ஒதுக்கீடு
ஆசிய விளையாட்டு போட்டி, பாரீஸ் ஒலிம்பிக் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 2023-24-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,397.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.723.97 கோடி அதிகமாகும். 2022-23-ம் நிதியாண்டில் முதலில் அறிவிக்கப்பட்ட ரூ.3,062.60 கோடி நிதி பின்னர் ரூ.2,673.35 கோடியாக குறைக்கப்பட்டது. சீனாவில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
விளையாட்டு மேம்பாட்டுக்கான தேசியத் திட்டமான ‘கேலோ இந்தியா’ இம்முறையும் மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டமாக தொடர்கிறது. இந்த திட்டத்திற்கு கடந்த நிதியாண்டில் ரூ. 606 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,045 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இது ரூ.439 கோடி அதிகமாகும். உலகளாவிய விளையாட்டு போட்டிகளான ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க சிறந்த வீரர்களை உருவாக்குவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
________________
எஸ்ஏ20 லீக் தொடரில்
பங்கேற்கிறார் பவுமா
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமாவுக்கு எஸ்ஏ20 லீக் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற எஸ்ஏ20 ஏலத்தில் பவுமாவை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. தென்னாப்பிரிக்க வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டனாக இருந்தும் ஏலத்தில் யாரும் தன்னைச் சீந்தாததால் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். தற்போது, அவர் என்ன நினைத்தோரோ அது நடந்துள்ளது.
சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரில் ஒரு சதம் உள்பட 180 ரன்கள் எடுத்தார். 23 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடித்தார். ஸ்டிரைக் ரேட் - 114.64. ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, டாம் அபெலுக்குப் பதிலாக பவுமாவைத் தேர்வு செய்துள்ளது. ஜனவரி 10 அன்று தொடங்கிய எஸ்ஏ20 போட்டி, பிப்ரவரி 11 அன்று நிறைவுபெறுகிறது. 8 ஆட்டங்களில் 4 வெற்றிகளைப் பெற்று 17 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது சன்ரைசர்ஸ் அணி.
________________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைக்கோஸ் வடை![]() 1 day 12 hours ago |
கீரை ஆம்லெட்![]() 4 days 11 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 1 week 1 day ago |
-
மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி : 2ஆவது தங்கம் வென்றது இந்தியா
26 Mar 2023புதுடெல்லி : உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் நிது கங்காசையடுத்து இந்திய வீராங்கனை சவீதி புரா தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-26-03-2023
26 Mar 2023 -
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி?
26 Mar 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இம்ரான்கானுக்கு இன்று வரை ஜாமீன் நீட்டிப்பு
26 Mar 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் ஐகோர்ட்டு ஜாமீனை இன்று திங்கட்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய வம்சாவளி சிறுமி சுட்டுக்கொலை செய்த அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை
26 Mar 2023நியூயார்க் : அமெரிக்காவில் 5 வயது இந்திய வம்சாவளி சிறுமியை சுட்டு கொன்ற அமெரிக்கருக்கு மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
-
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல 2 நூற்றாண்டுகள் தேவை : அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
26 Mar 2023மதுரை : தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
-
தமிழகம் - காசி இடையேயான உறவு: மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
26 Mar 2023புதுடெல்லி : தமிழகம் மற்றும் காசி இடையேயான பழமையான உறவை காசி தமிழ் சங்கமம் கொண்டாடி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தமிழகம், புதுச்சேரியில் 30-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்
26 Mar 2023சென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 30-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பழைய விதிகள் தொடர்ந்தால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டி : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
26 Mar 2023மயிலாடுதுறை : பழைய விதிகள் தொடர்ந்தால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு
26 Mar 2023மதுரை : மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
திருத்தணி முருகன் கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்
26 Mar 2023திருவள்ளூர் : திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
-
குரூப்-4 தேர்வு முடிவு: குளறுபடிகளை சரி செய்ய தேர்வர்கள் கோரிக்கை
26 Mar 2023சென்னை : வெளியிடப்பட்டுள்ள குரூப் - 4 தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்து, சரியான முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கால்பந்து உலகில் பிரேசிலுக்கு எதிராக முதல் வெற்றி : அசாத்திய அணியை அப்செட் செய்த மொராக்கோ
26 Mar 2023டேன்ஜர் : கால்பந்து விளையாட்டு உலகின் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆப்பிரிக்க அணியான மொராக்கோ.
-
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு : ஏப். 1 முதல் நடைமுறைக்கு வருகிறது
26 Mar 2023புதுடெல்லி : 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், புதிய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஏப்ரல
-
தமிழக சட்டசபையில் இன்று இரவு காங். எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டம்
26 Mar 2023சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி: தனது டுவிட்டர் பக்கத்தை மாற்றம் செய்த ராகுல்காந்தி
26 Mar 2023புதுடெல்லி : தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தை மாற்றம் செய்துள்ளார்.
-
ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு
26 Mar 2023ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் பைக்னர் மாவட்டத்தில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
-
இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை: எல்.முருகன்
26 Mar 2023மதுரை : இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
-
36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் எல்.வி.எம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது : இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
26 Mar 2023ஸ்ரீஹரிகோட்டா : எல்.வி.எம்-3' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
-
‘ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் எனது பங்களிப்பு இருக்கும்’ - பயிற்சியாளராகும் விருப்பத்தை தெரிவித்த டிம் பெய்ன்
26 Mar 2023புதுடெல்லி : ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் தனது பங்களிப்பு இருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னள் வீரர் டிம் பெய்ன் தனது பயிற்சியாளராகும் விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
-
நியூயார்க்கில் புகழ்பெற்ற பிளாடிரான் கட்டிடம் ரூ.1,564 கோடிக்கு ஏலம்
26 Mar 2023நியூயார்க் : நியூயார்க்கில் புகழ் பெற்ற 22 மாடிகளை கொண்ட பிளாடிரான் கட்டிடம் ரூ. 1,564 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
-
பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதத்தை நிறுவும் ரஷ்யா : ஐரோப்பிய நாடுகள் கலக்கம்
26 Mar 2023மாஸ்கோ : ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவ உள்ளது.
-
கீழடி அருங்காட்சியகத்தை காண ஏப். 1-ம் தேதி முதல் கட்டணம்
26 Mar 2023சிவகங்கை : கீழடி அருங்காட்சியகத்தை காண வரும் 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசியல் சாசனத்தின்படி கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை: அமித்ஷா
26 Mar 2023பெங்களூரு : அரசியல் சாசனத்தின்படி கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
ராகுலின் எம்.பி. பதவி பறிப்பு எதிரொலி: டெல்லியில் தடையை மீறி காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் : மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா பங்கேற்பு
26 Mar 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நேற்று நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.