முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மகாபாரத கிருஷ்ணரோடு ஸ்டாலினை ஒப்பிட்டு கே.எஸ்.அழகிரி கூறிய உவமை

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      தமிழகம்
KS-Alagiri 2023 02 05

Source: provided

கும்பகோணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தேரை ஓட்டி, மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்தது போல், அவர் எங்களுக்குக் கொடுத்து கொண்டிருக்கின்றார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். 

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொடியேற்றும் விழா மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று, ராகுல்காந்தி மேற்கொண்ட நடைப்பயணம் வெற்றி பெற்றதை வரவேற்கும் வகையில், கும்பகோணம் வட்டம் சந்தனாள்புரத்தில் கொடியேற்று விழாவும், அவரது நடைப்பயணத்தை குறிக்கும் வகையில் கையோடு கைகோர்ப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொது மக்கள் வழங்கினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

ஈரோட்டில் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாபெரும் வெற்றி பெறுவார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலுள்ள எங்களது கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடன் கொள்கை உணர்வோடு இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தேரை ஓட்டி, மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்தது போல், அவர் எங்களுக்குக் கொடுத்து கொண்டிருக்கின்றார்.  இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து