முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 மாதங்களில் அமெரிக்க மக்கள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். திட்டம்: ராணுவ அதிகாரி வெளியிட்ட பகீர் தகவல்

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      உலகம்
IS-attack 2023 03 18

அமெரிக்க நாட்டு மக்கள் மீது 6 மாதங்களுக்குள் முன்னறிவிப்பின்றி பயங்கர தாக்குதல் நடத்த ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டு உள்ளது என ராணுவ அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் முற்றிலும் வாபஸ் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து ஆட்சி தலிபான்களின் கைவசம் போனது. எனினும், அவர்களுக்கும், மக்களுக்கும் எதிராக வேறு பயங்கரவாத அமைப்புகள் தாக்குதலில் ஈடுபட்டு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், அமெரிக்காவின் மத்திய ராணுவ படைக்கான ஜெனரல் மைக்கேல் குரில்லா கூறுகையில், 

அமெரிக்கா அல்லது மேற்கத்திய நாடுகள் மீது ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.கே.பி. எனப்படும் பயங்கரவாத அமைப்பு இன்னும் 6 மாதங்களுக்குள் தாக்குதல் நடத்த கூடும். 

இந்த பயங்கரவாத தாக்குதல் குறைந்த அளவில் அறிவித்தோ அல்லது எந்தவித எச்சரிக்கையும் இல்லாமலோ கூட அதிரடியாக நடத்தப்படலாம். அதுவும் சொந்த நாட்டை விட வெளிநாடுகளில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான அமெரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது என அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து