எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்களில் அந்த மாநிலங்களின் மொழிகளை வழக்காடு மொழியாக அறிவிப்பது குறித்து மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் பரிந்துரை வந்திருக்கிறதா, அப்படி பரிந்துரை வந்திருந்தால் மத்திய அரசு அதன் மீது எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் உசேன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, அரசியல் சாசன சட்டம் 348-வது பிரிவு மாநில கவர்னர்கள், ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரில் ஐகோர்ட்களில் இந்தி அல்லது இதர பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் அதே சமயம் 1965 ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, இத்தகைய பரிந்துரைகளின் மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் கருத்துக்களை கேட்பது கட்டாயம் என்பது தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளிடமிருந்து அந்தந்த மாநில ஐகோர்ட்களில் தங்கள் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக அறிவிப்பது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை வந்திருந்தது எனவும் இந்த பரிந்துரை குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் கருத்துக்களை கேட்டபோது, இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டின் முழுமையான அமர்வு முடிவு செய்து இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
ஆனால் தமிழக அரசு மட்டும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தன்னுடைய முடிவை மறு ஆய்வு செய்யுமாறும் தமிழக சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கும்படியும் மீண்டும் ஒரு பரிந்துரை வழங்கியது என்றும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் கருத்து கேட்டபோது, இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டின் முழுமையான அமர்வு முடிவு செய்து இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதிலளித்திருக்கிறார் என்று மத்திய சட்டத்துறை மந்திரி தெரிவித்திருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


