எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (அமுல் நிறுவனம்) இதுநாள்வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழகத்தில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்தது.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் பிரச்சினைகள் எழுகின்றன. எனவே மத்திய உள் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், பிற மாநிலங்களில் திறம்பட செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்களை போலவே, தமிழகத்திலும் ஊரகப் பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக 1981-ம் ஆண்டு முதல், மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு திறம்பட செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் தலைமைக் கூட்டுறவு விற்பனை இணையமாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில், ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ், 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அச்சங்கங்கள் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பாலினை 4.5 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன.
இதன் வாயிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் லாபகரமான மற்றும் சீரான விலை கூட்டுறவு சங்கங்களால் உறுதி செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்தில் ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலைநிறுத்தவும், கால்நடைத் தீவனம், தீவனம், தாது உப்புக் கலவை, கால்நடை சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கால்நடைகளுக்கான இனப்பெருக்க சேவைகளையும், இடுபொருட்களையும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருவதுடன், தரமான பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோருக்கு மிகக்குறைந்த விலையில் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது.
கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நுகர்வோரின் ஊட்டச் சத்தினைப் பூர்த்தி செய்வதிலும் ஆவின் நிறுவனம் முக்கியப் பங்காற்றுகிறது.
இந்தச் சூழ்நிலையில், அமுல் நிறுவனம், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது குறித்தும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவில், மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், வெண்மை புரட்சி என்ற கொள்கைக்கு எதிராக அமைவதுடன் நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில், நுகர்வோர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாக கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும். மேலும் அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கி விடும்.
, மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு அமைப்புகள், பால்வளத் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கி வருவதுடன், பால் உற்பத்தியாளர்களை அத்தொழிலில் ஈடுபடுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் உதவுவதாகவும், தன்னிச்சையான விலை உயர்விலிருந்து நுகர்வோரை பாதுகாக்கிறது.
எனவே, இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்திட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மட்டர் பன்னீர் மசாலா18 hours 1 min ago |
கோபி மஞ்சூரியன்![]() 3 days 17 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 1 week 17 hours ago |
-
திரும்பிய பக்கமெல்லாம் ரத்தம், சடலங்கள்: ஒடிசா ரயில் விபத்து குறித்து உயிர் பிழைத்தவர் வேதனை
03 Jun 2023புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்து குறித்து அந்த விபத்தில் இருந்து தப்பிய நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விபத்து குறித்த வேதனையை பகிர்ந்துள்ளார்.
-
நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடிய உக்ரைன் ராணுவ வீரர்கள்
03 Jun 2023கீவ் : உக்ரைன் ராணுவ வீரர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 03-06-2023
03 Jun 2023 -
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு : மருத்துவத்துறை செயலாளர் பேட்டி
03 Jun 2023சென்னை : ஒடிசா விபத்தில் சிக்கி சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மருத்துவத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள
-
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஒடிசா ரயில் விபத்து: சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார் பிரதமர் : காயமடைந்தோரை சந்தித்தும் ஆறுதல் தெரிவித்தார்
03 Jun 2023பாலசோர் : ஒடிசாவில் ரயில் விபத்து நேரிட்ட பகுதிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
-
ரயில்வே என் குழந்தை போன்றது; ஆலோசனைகளை வழங்கத் தயார் : ஒடிசா ரயில் விபத்து பகுதியில் மம்தா பேட்டி
03 Jun 2023புவனேஸ்வர் : "ரயில்வே என் குழந்தையைப் போன்றது.
-
ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: மத்திய அமைச்சர் பதவி விலக கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
03 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதவி விலக வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.
-
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து: சிறப்பு ரயில்கள் மூலம் இன்று 383 பேர் சென்னை வருகை
03 Jun 2023சென்னை : ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தை தொடர்ந்து சிறப்பு ரயில்கள் மூலம் 383 பேர் இன்று சென்னை வந்தடைகின்றனர்.
-
ஒடிசா ரயில் விபத்து: உலக தலைவர்கள் இரங்கல்
03 Jun 2023டோக்கியோ : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
03 Jun 2023சென்னை : ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
அயர்லாந்துக்கு அணிக்கு எதிராக முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த இங்கி. வீரர் ஒல்லி போப் : 41 ஆண்டுகால சாதனை முறியடிப்பு
03 Jun 2023லார்ட்ஸ் : இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.
-
ஒடிசா ரயில் விபத்து காரணமாக 11 ரயில்கள் ரத்து: ரயில்வே அறிவிப்பு
03 Jun 2023சென்னை : ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து காரணமாக சென்னை, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில்கள் உள்பட 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை அறிவித்துள்
-
பலி எண்ணிக்கை 288: ஒடிசா ரயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவு: சீரமைப்பு பணி தொடக்கம்
03 Jun 2023புவனேஸ்வர் : தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து
-
சென்னை வரும் பயணிகளுக்கு உதவ சென்ட்ரல், விமான நிலையத்தில் காவல் துறை சார்பில் ஏற்பாடுகள்
03 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி, சென்னை வரும் பயணிகளுக்கு உதவவும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவவும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள்
-
ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது : ரஷ்ய அதிபர் புடின் இரங்கல்
03 Jun 2023டோக்கியோ : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தது தி.மு.க.
03 Jun 2023புவனேஷ்வர் : ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தி.மு.க. தலைமை கழகம் நேற்று அறிவித்தது.
-
ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் : மத்திய அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்
03 Jun 2023சென்னை : ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
ஒடிஷா ரயில் விபத்து குறித்து அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவு : குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை: பிரதமர் மோடி
03 Jun 2023புவனேஷ்வர் : ஒடிஷா ரயில் விபத்து குறித்து அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படு
-
'நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி' - கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
03 Jun 2023சென்னை : நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கருணாநிதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசாவில் ஒரே கிழமையில், ஒரே நேரத்தில் 2 முறை விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
03 Jun 2023பாலசோர் : ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரே கிழமையில், ஒரே நேரத்தில், 2 முறை விபத்தில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது.
-
ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது : பாக். பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இரங்கல்
03 Jun 2023இஸ்லாமாபாத் : ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
-
ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வானார் : முதன்மைச்செயலாளராக துரை வைகோ தேர்வு
03 Jun 2023சென்னை : ம.தி.மு.க. பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் வைகோ தேர்வு செய்யப்பட்டார். அக்கட்சியின் முதன்மைச் செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டார்.
-
மீண்டும் இதுபோன்ற விபத்து நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் : ரயில்வே அமைச்சர் அஷ்வினி உறுதி
03 Jun 2023பாலசோர் : மீண்டும் இதுபோன்ற விபத்து நேராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து பயணித்த 1,257 பேர்
03 Jun 2023புவனேஸ்வர் : விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் 2296 பேர் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளதாகவும், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,257 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தத