முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறையில்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Tirupati 2023-09-30

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவது வழக்கம். கடந்த 5-ம் தேதி மாலை முதல் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று முன்தினம் காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. 

ஆந்திராவில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். கோடைகால விடுமுறையில் மேலும் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், திருப்பதியில் நேற்றுமுன்தினம் 75,414 பேர் தரிசனம் செய்துள்ளனர். 30,073 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து