எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : என்னை ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கவைக்க சதி நடப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றச்சாட்டியுள்ளார். ஆனால் மல்யுத்த சம்மேளனம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
போராட்டம்...
இந்திய முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர்.
கடும் எதிர்ப்பு...
இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து அவர் மல்யுத்த சம்மேளன பொறுப்பில் இருந்தும் ஒதுங்கினார்.மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். பிரிஜ் பூஷனின் கூட்டாளியான இவருக்கும் சில வீரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
சிக்கவைக்க சதி...
இந்த நிலையில் முன்னணி மல்யுத்த வீராங்கனை 29 வயதான வினேஷ் போகத், தன்னை ஊக்கமருந்து வலையில் சிக்கவைக்க சதி நடப்பதாக பரபரப்பான புகார் ஒன்றை கூறியுள்ளார். வினேஷ் போகத், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றவர். 50 கிலோ எடைப்பிரிவில் ஒலிம்பிக் இடத்தை உறுதி செய்யும் இலக்குடன் அடுத்த வாரம் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெறும் ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்க உள்ளார். வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கலந்து கொடுக்க...
பிரிஜ் பூஷனும், அவரது விசுவாசியான சஞ்சய் சிங்கும் இணைந்து நான் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை தடுக்க எல்லா வழியிலும் முயற்சிக்கிறார்கள். அணியில் நியமிக்கப்பட்டுள்ள எல்லா பயிற்சியாளர்களும் அவர்களது ஆதரவாளர்கள். எனவே எனக்குரிய போட்டியின்போது அவர்கள் நான் குடிக்கும் தண்ணீரில் ஏதாவது கலந்து கொடுக்க வாய்ப்புள்ளது.
வர முடியாது...
என் மீது ஊக்கமருந்து மோசடி பேர்வழி என்ற முத்திரை குத்துவதற்கு சதிவேலை நடக்கிறது. கடந்த ஒரு மாத காலமாக எனது பயிற்சியாளர் மற்றும் பிசியோவுக்கு அங்கீகார அட்டை வழங்கும்படி இந்திய விளையாட்டு ஆணையத்திடம் (சாய்) முறையிட்டு வருகிறேன். அங்கீகார அட்டை இல்லாவிட்டால் அவர்களால் என்னுடன் போட்டி நடக்கும் இடத்திற்கு வர முடியாது. பல முறை கேட்டும் அவர்களிடம் இருந்து எனக்கு முறையான பதில் வரவில்லை.
யாரும் இல்லை...
உதவி செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் இப்படி தான் விளையாடுவதா?. போட்டிக்கு முன்பாக எங்களை மனரீதியாக துன்புறுத்துகிறார்கள். தவறுக்கு எதிராக குரல் கொடுத்தால் நம் நாட்டில் இதுதான் தண்டனையா? தேசத்துக்காக விளையாட செல்லும் முன்பு எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.
சம்மேளனம் மறுப்பு...
இதற்கிடையே வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டை இந்திய மல்யுத்த சம்மேளனம் மறுத்துள்ளது. பெயர் வெளியிட விரும்பாத மல்யுத்த சம்மேளன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தனது தனிப்பட்ட பயிற்சியாளர் மற்றும் பிசியோவுக்கு அங்கீகார அனுமதி அட்டை கேட்டு கடந்த மார்ச் 18-ந்தேதி வினேஷ் போகத் இ-மெயில் அனுப்பினார்.
முடியவில்லை....
ஆனால் அதற்கு முன்பாகவே (மார்ச் 11) உலக மல்யுத்த சம்மேளனத்திற்கு அனுப்புவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. அவர் தாமதமாக விண்ணப்பித்ததால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏற்கனவே 9 பயிற்சியாளர்கள் அணியினருடன் செல்லும் நிலையில் கூடுதல் பயிற்சியாளர் தேவையா?, வினேஷ் போகத் தனிப்பட்ட பயிற்சியாளர் வேண்டும் என்று நினைத்தால், உலக மல்யுத்த சம்மேளனத்தை அணுகி முயற்சித்து பார்க்கலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
பாக்., ஏவியது ஷாஹீன் ஏவுகணை: இந்திய ராணுவம் ஆய்வில் தகவல்
19 May 2025புதுடில்லி : ஷாஹீன் ஏவுகணை பாகிஸ்தான் ஏவியது இந்திய ராணுவம் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
-
'லெவன்' திரை விமர்சனம்
19 May 2025சென்னையில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கிறது. இறந்தவர்கள் யார்?
-
மீண்டும் 70 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
19 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.70,040க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-05-2025
19 May 2025 -
கனமழை- புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
19 May 2025சென்னை, அதிக கனமழை – புயலை ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் உதவி கேட்டு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்
-
குமரி கண்ணாடி பாலத்தை 1.25 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
19 May 2025கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை 11 நாட்களில் 1.25 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
-
வி.என்.ஜானகி தியாகங்கள் போற்றத்தக்கது: ஓ.பன்னீர்செல்வன் புகழாரம்
19 May 2025சென்னை, எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான வி.என்.ஜானகியின் தியாகங்கள் போற்றத்தக்கது என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அ.த
-
பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: நைஜீரியாவில் 57 பேர் பலி
19 May 2025அபுஜா : நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது: தலைமை நீதிபதி
19 May 2025மும்பை : இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
-
நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: வேகமாக நிரம்பும் ஓசூர் கெலவரப்பள்ளி அணை
19 May 2025ஓசூர் : தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து 904 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
ரூ.211.57 கோடியில் கோவை மத்திய சிறைச்சாலைக்கு புதிய கட்டடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
19 May 2025சென்னை, 457 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகள் மற்றும் 211 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கோயம்புத்தூர் மத்
-
இந்த வாரம் வெளியாகும் ' ஏஸ் '
19 May 20257CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘ஏஸ்' ( ACE).
-
கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
19 May 2025புதுடில்லி : விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசின் கணினி அவசரநிலை கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன் விரைவில் குணமடைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து
19 May 2025வாஷிங்டன் : ஜோ பைடனுக்கு புற்றுநோய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் குணமடைய வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
ஆந்திரப்பிரதேசத்தில் சோகம்: கார் கதவுகள் மூடியதால் மூச்சு திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு
19 May 2025அமராவதி : ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரத்தில் கார் கதவுகள் மூடியதால் மூச்சுத் திணறி 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
-
மே 29-ல் சிக்கிம் செல்கிறார் பிரதமர் மோடி?
19 May 2025ஷில்லாங் : சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்றதன் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 29 அன்று சிக்கிம் செல்ல வாய்ப்புள்ளதாக முதல்வர் பி
-
'படைத்தலைவன்' இசை வெளியீடு
19 May 2025இயக்குநர் யு அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்தின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், “படை தலைவன்”. இப்படம் வரும் மே 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
-
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி காப்பீட்டு சலுகை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வங்கிகள் ஒப்பந்தம்
19 May 2025சென்னை, முதல்வர். மு.க.
-
டிடி நெக்ஸ்ட் லெவல் திரை விமர்சனம்
19 May 2025யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்திற்கு ஒரு திரைப்படத்தின் சிறப்பு திறையிடல் நிகழ்ச்சிக்கான அழைப்பு வருகிறது.
-
தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் குறைந்துள்ளன: டி.ஜி.பி. அறிக்கை
19 May 2025சென்னை : தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் குறைந்துள்ளதாக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
-
ஜோரா கைய தட்டுங்க திரை விமர்சனம்
19 May 2025மேஜிக் கலைஞரின் மகனான யோகி பாபு, தந்தை இறப்புக்குப் பிறகு மேஜிக் கலைஞராகி விடுகிறார். ஆனால், அவரது மேஜிக் பிடிக்காமல் மக்கள் விமர்சிக்கிறார்கள்.
-
’மாமன்’ திரை விமர்சனம்
19 May 2025சூரி, தனது அக்கா சுவாஷிகா மீது அன்பாக இருக்கிறார். திருமணமாகி 10 வருடங்களுக்குப் பிறகு அவரது அக்காவுக்கு குழந்தை பிறக்கிறது.
-
கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
19 May 2025சென்னை, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வரும் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வணிகவரித்துறைக்கு 23 புதிய வாகனங்கள் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
19 May 2025சென்னை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல்
-
சர்வதேச பிரச்சாரம்: அனைத்துக் கட்சி குழுவிலிருந்து திரிணமூல் விலகல்
19 May 2025புதுடெல்லி, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பல கட்சிக் குழுவில் இருந்து விலகுவதாக திரிணமூல் கா