Idhayam Matrimony

தேசிய தேர்வு முகமையை மேம்படுத்த குழு அமைப்பு : 7 பேர் குழு 2 மாதங்களில் பரிந்துரையை வழங்கும்

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      இந்தியா
Neet 2023-04-13

Source: provided

புதுடெல்லி : தேசிய தேர்வு முகமையை மேம்படுத்தவும், வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் தேர்வுகள் நடைபெறுவதை உறுதி செய்யவும் மத்திய கல்வி அமைச்சகம், 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழு தனது பரிந்துரையை 2 மாதங்களுக்குள் மத்திய கல்வி அமைச்சகத்திடம் வழங்கவுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி) நடத்தப்படும் ஆட்சேர்ப்புத் தேர்வுகள், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட், ஜேஇஇ, கியூஇடி, நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முறைகேடுகளைத் தடுக்க "பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பான மசோதா கடந்த பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது இந்த சட்டத்தை அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் படி நீட் தேர்வு உள்ளிட்டவைகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு குறைந்தபட்சம் ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வுகளைக் கண்காணிக்க உயர்மட்டக் குழுவை அமைத்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் ராமமூர்த்தி, டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் ரன்தீப் குலேரியா உள்ளிட்டோர் இந்த குழுவில் உறுப்பினராக இடம்பெற்றுள்ளனர்.

வெளிப்படையான, சுமூகமான மற்றும் நியாயமான முறையில் தேர்வுகள் நடைபெறுவதை உறுதி செய்யவும், தேர்வு செயல்முறையில் சீர்திருத்தம், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு ஆகியவற்றில் இந்த உயர்மட்ட குழு பரிந்துரை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான அறிக்கையை 2 மாதங்களுக்குள் இந்த குழு, மத்திய கல்வி அமைச்சகத்திடம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து