எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் ஆக்கி அணி மற்றும் துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகள் டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றிருந்தனர். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக வெளிநாட்டில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), பி.வி.சிந்து (பேட்மிண்டன்), நிஜாத் ஜரீன் (குத்துச்சண்டை) ஆகியோர் ஆன்லைன் மூலம் பிரதமருடன் உரையாடினார்கள்.
இதில் இந்திய தடகள அணியின் தலைவர் நீரஜ் சோப்ரா ஆன்-லைன் மூலம் உரையாடுகையில் 'டோக்கியோ ஒலிம்பிக் போட்டியே எனது முதல் ஒலிம்பிக் ஆகும். அதில் எனக்கு தித்திப்பான முடிவே கிடைத்தது. நான் நாட்டுக்காக தங்கம் வென்றேன். அப்போது என் மனதில் எந்த பயமும் இல்லை. எனக்கு தன்னம்பிக்கை அதிகம் இருந்தது. ஏனெனில் நான் நன்றாக பயிற்சி எடுத்திருந்தேன். நான் அனைத்து வீரர்களுக்கும் சொல்வது என்னவென்றால் யாரை கண்டும், எதனை நினைத்தும் பயப்படாதீர்கள். நாம் அனைவரும் நீண்ட காலமாக வீட்டை மறந்து கடினமாக பயற்சி எடுத்து வருகிறோம். அதனால் நம்மால் முடியாதது என்று எதுவும் கிடையாது' என்று வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
___________________________________________________________________________________
காலிறுதியில் லோரென்சோ
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி, பிரான்சின் ஜியோவானி எம்பெட்ஷி பெரிகார்ட் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த லோரென்சோ முசெட்டி, ஆட்டத்தின் அடுத்தடுத்த செட்களை 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் இந்த ஆட்டத்தில் லோரென்சோ முசெட்டி 4-6, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜியோவானி எம்பெட்ஷி பெரிகார்ட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
___________________________________________________________________________________
அபிஷேக் சர்மாவுக்கு வாழ்த்து
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 234 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா 100 ரன்னும், கெய்க்வாட் 77 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 235 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்போட்டி முடிந்த கையோடு அபிஷேக் சர்மா, தனது ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான யுவராஜ் சிங்குடன் வீடியோ கால் வாயிலாக உரையாடினார். அப்போது சதம் அடித்து அசத்திய அபிஷேக் சர்மாவிற்கு யுவராஜ் சிங் வாழ்த்து கூறினார். அபிஷேக் சர்மாவிடம் யுவராஜ் சிங் கூறியதாவது, "உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் அதற்கு தகுதியானவர். இது வெறும் ஆரம்பம் மட்டும் தான். இன்னும் பல வர உள்ளன" என கூறினார்.
___________________________________________________________________________________
ரோகித், கோலிக்கு எவ்வளவு?
பிசிசிஐ அறிவித்த ரூ.125 கோடியில் யார் யாருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்ற விவரம் வெளியாகியிருக்கிறது. இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கும் தலா 5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதன்படி, கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோருக்கும் இதே பரிசுத்தொகைதான் கிடைக்கும்.
அதேபோல் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2.5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. அதேபோல் உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று மற்றவர்களுக்கு தலா 2 கோடியும், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ.1 கோடியும், ரிசர்வ் வீரர்களாகப் பயணித்த 4 பேருக்கும் தலா ரூ.1 கோடியும் வழங்கப்படவுள்ளது.
___________________________________________________________________________________
தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும். எனவே இந்த தொடர் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான மார்கோ யான்செனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெட்டிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி எங்கிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், கைல் வெர்ரின்னே.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லுமா? இன்று கட்டாக்கில் 2-வது போட்டி
08 Feb 2025கட்டாக்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லுமா? என்ற ஆவல் ரசிகர்கள் இடையே மேலோங்கும் நிலையல் இன்று கட்டாக்கில் 2-வது போட்டி நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-02-2025.
08 Feb 2025 -
தட்டச்சர் பணிக்கு கலந்தாய்வு பிப்ரவரி 24 முதல் தொடங்கும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
08 Feb 2025சென்னை: ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வில் தட்டச்சர் பணிக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்
-
டில்லி தேர்தலில் முதல்வர் அதிஷி வெற்றி கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி
08 Feb 2025புதுடில்லி: டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கல்காஜி தொகுதியில் டில்லி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றார்.
-
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் 2026 சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் கருத்து
08 Feb 2025ஈரோடு: “இந்த தேர்தல் முடிவுகள் தான் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில், முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. எனவே, தி.மு.க.
-
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம்: அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
08 Feb 2025சென்னை: தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஒற்றுமையாக டெல்லி தேர்தலை சந்திக்கவில்லை மதுரையில் திருமாளவன் பேட்டி
08 Feb 2025மதுரை: இன்டியா கூட்டணி ஒற்றுமையாக தேர்தலை சந்திக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
டில்லியில் ஆம் ஆத்மி தோல்விக்கு காங்கிரஸ் காரணம்?
08 Feb 2025புது டில்லி: புது டில்லியில் ஆம் ஆத்மி தோல்விக்கு, அக்கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைக்காததே காரணம் என்று கூறப்படுகிறது.
-
அம்மா மருந்தகங்கள் மூடலா? ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
08 Feb 2025சென்னை: தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் ஒருபோதும் மூடப்படாது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடு
-
தங்கம் விலை சற்று உயர்வு
08 Feb 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து உயர்ந்து ரூ.63,560-க்கு விற்பனையானது.
-
அலாஸ்கா விமானம் விழுந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு
08 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உனலக்ளீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208 பி என்ற விமானம் புறப்பட்டது.
-
வள்ளலாரின் நினைவு தினம்: சென்னை 11-ம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு
08 Feb 2025சென்னை: வள்ளலாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
-
கோவை வேளாண்மை பல்கலை.யில் 7-வது மலர் கண்காட்சி தொடக்கம் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
08 Feb 2025கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7-வது மலர் கண்காட்சித் தொடங்கியை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் துவக்கி வைத்தனர்.
-
டெல்லி சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத காங்கிரஸ் கட்சி
08 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.
-
ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கிய ரயில்வே
08 Feb 2025சென்னை: ரெயிலில் பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு தொகையை ரெயில்வே துறை வழங்கியது.
-
அதிபர் புதினை விமர்சித்த ரஷ்யப் பாடகர் மர்ம மரணம்
08 Feb 2025ஊரால்ஸ்:ரஷிய அதிபர் புதினை முட்டாள் என விமர்சித்த அந்நாட்டு பாடகரின் வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
-
டிரம்ப் - ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் சந்திப்பு
08 Feb 2025வாஷிங்டன், பிப். 09-: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அடுத்தவாரம் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் நரேந்திர மோடி கருத்து
08 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இது வளர்ச்சிக்கு, நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர
-
கேரளா ரசிகருடன் நடிகர் விஜய் சந்திப்பு
08 Feb 2025சென்னை: கேரளாவில் இருந்து வந்த ரசிகரை நடிகர் விஜய் சந்தித்து பேசினர்.
-
தமிழ்நாடு வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
08 Feb 2025சென்னை: 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்த தமிழக கிரிக்கெட் வீராங்கனை கமாலினி, கோ-கோ உலகக் கோப்பையை இந்த
-
ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த சிசு பலி
08 Feb 2025வேலூர்: ரெயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு இறந்ததாக தகவல் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்தியவர்: டெல்லி முதல்வராகிறார் பர்வேஷ்
08 Feb 2025புதுடில்லி: புதுடில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
-
நியூயார்க்கில் 2 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறை
08 Feb 2025நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் போதையில் தனது வாகனத்தை அதி வேகமாக ஓட்டி 2 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 25 ஆண்டுக
-
கருணாநிதி வசனம், கவிதை ஒப்பித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பரிசு வழங்கி பாராட்டு
08 Feb 2025சென்னை: கருணாநிதி வசனம், கவிதை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் பரிசு வழங்கினார்
-
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவிப்பு
08 Feb 2025காலே: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவித்துள்ளது.
2-வது டெஸ்ட்...