எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கொளத்தூர், நேர்மை நகரில் தீயணைப்பு நிலையம், காவல் நிலையம் மற்றும் காவல் உதவி ஆணையர் அலுவலகம் அமைக்கப்படவுள்ள இடத்தினை அமைச்சர் சேகர்பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதல்வர் ஸ்டாலினின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும், மக்கள் நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், உதவி ஆணையர் (குடிமைப் பொருள் வழங்கல்) ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, சென்னை கொளத்தூர், நேர்மை நகரில் தீயணைப்பு நிலையம், காவல் நிலையம் மற்றும் காவல் உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவற்றை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குனர் பா. கணேசன், சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் ஆணையர் (வடக்கு) கே. எஸ். நரேந்திரன் நாயர், சென்னை மேற்கு காவல் துறை இணை ஆணையர் டாக்டர் பி.விஜயகுமார், பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் டாக்டர் இரா. சுகுமார், கொளத்தூர் காவல் துணை ஆணையர் ஆர்.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் கீதா, மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் முருகன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் வடசென்னை ப.பி.லோகநாதன், மண்டல இணை ஆணையர் ஜ. முல்லை, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஸ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


