எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வங்காளதேச பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் சிட்டகாங் கிங்ஸ் அணியை வீழ்த்தி பார்ச்சூன் பாரிஷால் சாம்பியன் கோப்பையை கைப்பற்றிது. இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் லீக் தொடரான ஐ.பி.எல். போன்று வங்காளதேசத்தில் 'வங்காளதேச பிரீமியர் லீக்' நடத்தப்படுகிறது. இதன் 11-வது சீசன் தற்போது முடிவடைந்துள்ளது. இதன் இறுதிப்போட்டியில் பார்ச்சூன் பாரிஷால் - சிட்டகாங் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற பார்ச்சூன் பாரிஷால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிட்டகாங் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கவாஜா நபே மற்றும் பர்வேஸ் ஹொசைன் அதிரடியாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் கவாஜா நபே 66 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கிரஹாம் கிளார்க்கும் (44 ரன்கள்) அதிரடியாக விளையாட அணியின் ரன் வேகம் எகிறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சிட்டகாங் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பர்வேஸ் ஹொசைன் 78 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பார்ச்சூன் பாரிஷால் அணியும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் ரன் வேகத்தை குறையாமல் பார்த்துக்கொண்டனர். கேப்டன் தமிம் இக்பால் அரைசதம் அடித்து அணிக்கு வலு சேர்த்தார். அவருடன் தவ்ஹித் ஹாரிடாய் (32 ரன்கள்), கைல் மேயர்ஸ் (46 ரன்கள்) இருவரும் கணிசமான பங்களிப்பை வழங்க பார்ச்சூன் பாரிஷால் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது தமிம் இக்பாலுக்கும், தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசன் மிராசுக்கு வழங்கப்பட்டது.
6-வது இடத்தில் தமிழக அணி
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. அபினவ் சஞ் சீவ், மனீஷ் சுரேஷ் குமாா், நிக்கி பூனச்சா உள்ளிட்டோா் அடங்கிய அணி 2-0 என்ற கணக்கில் கா்நாடகத்தை வீழ்த்தியது. தியா ரமேஷ், லட்சுமி பிரபா ஆகியோா் அடங்கிய தமிழக மகளிா் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.
தமிழ்நாடு 13 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 49 பதக்கம் பெற்று பதக்கப் பட்டியலில் 6-வது இடத்தில் நீடிக்கிறது. சா்வீசஸ் 39 தங்கம், 14 வெள்ளி, 13 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் முதல் இடத்துக்கு முன்னேறியது. கா்நாடகம் 30 தங்கம், 12 வெள்ளி, 16 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், மராட்டியம் 23 தங்கம், 39 வெள்ளி, 45 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
இலங்கை வீரருக்கு மரியாதை
100 போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த கருணரத்னே தனது கடைசி இன்னிங்ஸில் ஆட்டமிழந்து செல்லும்போது ஆஸி. வீரர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வழியனுப்பினார்கள். இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை தனது முதல் இன்னிங்சில் 257 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 414 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்மித் 131 ரன்களும், அலெக்ஸ் கேரி 156 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், 100 போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த கருணரத்னே தனது கடைசி இன்னிங்ஸில் ஆட்டமிழந்து செல்லும்போது ஆஸி. வீரர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வழியனுப்பினார்கள். இந்த விடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. டெஸ்ட்டில் மொத்தமாக 7,222 ரன்களுடன் ஓய்வுபெற்றுள்ளார். 16 சதங்கள், 39 அரைசதங்கள் அடித்துள்ள கருணரத்னே கிட்டதட்ட 40 சராசரியுடன் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தந்தையானார் பேட் கம்மின்ஸ்
பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் (வயது 31). இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றது. பேட் கம்மின்ஸ் தனது நீண்ட நாள் காதலியான பெக்கி பாஸ்டனை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆல்பி என்ற மகன் உள்ளார். இந்நிலையில், பெக்கி பாஸ்டன் 2வது முறையாக கர்ப்பம் அடைந்தார். இவருக்கு இந்த மாதம் குழந்தை பிறக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பேட் கம்மின்ஸ் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த குழந்தைக்கு எடித் மரியா போஸ்டன் கம்மின்ஸ் என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் சரிவு
05 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிவை சந்தித்துள்ளது.
-
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி: வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வு
04 Nov 2025புதுடெல்லி: முதல்முறையாக உலக கோப்பையை இந்திய அணி வென்று வரலாறு படைத்தன் மூலம், இந்திய வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வடைந்து உள்ளது.
-
சின்சினாட்டி மேயர் தேர்தல்: ஜே.டி.வான்ஸ் சகோதரரை தோற்கடித்தார் அஃப்தாப்
05 Nov 2025சின்சினாட்டி, அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.
-
பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்
05 Nov 2025பாட்னா, பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
-
ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முத
-
ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க.வின் புதிய ஆயுதம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய
-
14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை: வெற்றி கோப்பையை அறிமுகம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் நடைபெறும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை தொடருக்கான வெற்றி கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்
-
அரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்: ஆதாரங்களுடன் ராகுல் குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, அரியாணா மாநில வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று
-
கோவை வன்கொடுமை சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவியை போலீசார் மீட்க தாமதம் ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
05 Nov 2025சென்னை, கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்க தாமதம் ஏன்..? என்று கோவை போலீசாருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி பற்றி கவலை வேண்டாம்; தானாகவே நடக்கும்: இ.பி.எஸ். பேச்சு
05 Nov 2025சென்னை, கூட்டணி குறித்து கவலை வேண்டாம், அது தானாகவே நடக்கும் என மாவட்டச் செயலாளர்களிடம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
வேலூரில் ரூ.32 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
05 Nov 2025சென்னை, 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.32 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் மினி டைடல் பூங்காவினை முதல்வர்
-
ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளது: அரியானாவில் போலி வாக்குகள் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி: அரியானாவில் போலி வாக்குகள் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டினார்.
-
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
05 Nov 2025சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கவில்லை என்று என்.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
05 Nov 2025சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
-
கோவாவில் பாக்., ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது
05 Nov 2025பனாஜி: கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
05 Nov 2025சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
-
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
05 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.
-
கோவை வன்கொடுமை சம்பவத்தில் கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம்
05 Nov 2025கோவை, கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாக்கு திருட்டு விவகாரம்: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு பதில்
05 Nov 2025புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல்காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
-
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு
05 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா-அமெரிக்காவின் எதிர்கால உறவுகள் குறித்து டிரம்ப் நம்பிக்கை வெள்ளை மாளிகை தகவல்
05 Nov 2025வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்காவின் எதிர்கால உறவுகள் குறித்து டிரம்ப் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.
-
பிலிப்பின்ஸில் கோர தாண்டவம்: கேல்மெகி புயலுக்கு 66 பேர் பலி
05 Nov 2025மணிலா: மத்திய பிலிப்பின்ஸை தாக்கிய டைபூன் டினோ என்றழைக்கப்படும் கேல்மெகி புயல் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
சாதி, மத அரசியலால் நாட்டுக்கு பெரும் தீங்கு: ராஜ்நாத்சிங் பேச்சு
05 Nov 2025பாட்னா: சாதி, மதம் தொடர்பான அரசியல் நாட்டுக்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தை வைத்து அரசியல


