எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு நிதி கிடைக்காவிட்டாலும்; நீதிக்காக போராடுவோம் என்று மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆவடியில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
முதல் மாநிலமாக...
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க., சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:- 2021 சட்டசபை தேர்தலின் போது என் மேல் நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பை வழங்கினார்கள். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக வளர்த்தெடுத்து வருகிறோம். 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்று ஒரு மிகப்பெரிய குறிக்கோளுடன் உழைத்து வருகிறோம்.
சர்வாதிகார போக்கு...
பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. அனைத்து துறைகளில் தமிழகம் வளர்ந்து வருகிறது. மத்திய அரசு மட்டும் ஒத்துழைப்பு கொடுத்தால், இன்னும் வேகமாக தமிழகம் வளர்ந்திருக்கும். மத்தியில் மைனாரிட்டி ஆட்சியை பா.ஜ., அமைத்தாலும், பழைய மாதிரியே சர்வாதிகார போக்கையே கடைபிடிக்கிறது. பேரு தான் மத்திய பட்ஜெட். அந்த பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களின் பெயரும் இடம்பெற்றிருக்கா? அனைத்து தரப்பினரையும் ஏமாற்றும் வகையில் தான் பட்ஜெட் அமைந்திருக்கு. 4 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பே இல்லை. கல்விக்கு 2.3 சதவீதமும், சுகாதாரத்துக்கு 1.8 சதவீதமும் தான் ஒதுக்கியிருக்காங்க.
அக்கறை இல்லை....
பாதுகாப்புக்கு 4.19 லட்சம் கோடியும், உள்துறைக்கு 2.33 லட்சம் கோடியும் கொடுத்துள்ள பா.ஜ., சமூகநலத்துறைக்கு ரூ.60 ஆயிரம் கோடிதான் கொடுத்திருக்கிறார்கள். மக்கள் வளர்ச்சியில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை இதை விட சாட்சி வேண்டுமா? பட்டியல், பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடு குறைவு, புதிய வேலைவாய்ப்புகள் இல்லை, எல்.ஐ.சி.,யை ஒழிக்க முயற்சி, உரம் மற்றும் பெட்ரோலிய மானியம் குறைப்பு தான் இந்தப் பட்ஜெட்டில் இருக்கிறது.
பீகார் மாநில தேர்தல்...
ரூ.12 லட்சம் ஆண்டு வருமானம் இருக்கிறவர்களுக்கு வருமான வரிச்சலுகை என அறிவித்துள்ளார்கள். இந்தியாவில் மக்கள் தொகை 140 கோடி. அதில், 2 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு தான் இந்த சலுகை. இதையே பெரிய சாதனையாக காட்டுகிறார்கள். அனைத்து மாநிலங்களுக்கான மத்திய பட்ஜெட் என்று சொல்லிவிட்டு, பீகார் மாநிலத்தின் பெயரை மட்டும் 6 முறை அறிவிக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏனெனில் அங்கு தான் சட்டசபை தேர்தல் வருகிறது. பீகார், ஆந்திராவுக்கு கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழகத்தை ஏன் புறக்கணிக்கிறீர்கள் என்று தான் கேட்கிறோம்.
வஞ்சிப்பது ஏன்..?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, 'நீங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமையா? இல்லை, தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவது பெருமையா?' உங்களுடைய மனசாட்சிக்கே இந்தக் கேள்வியை விட்டு விடுகிறேன். மாநிலங்களுக்கு நிதி தராத மத்திய அரசு, வட்டியில்லா கடனை கொடுக்கிறது. வடக்கில் நடப்பது ஆட்சியா? இல்லை வட்டிக் கடையா? இதுதான் கூட்டாட்சியா? இந்திய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் தமிழகத்தை வஞ்சிப்பது ஏன்? பா.ஜ.,வுக்கு தமிழகத்தை பிடிக்கலையா? நீங்கள் நிதியைக் கொடுக்காமல் இருக்கலாம். நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம். நீங்கள் வஞ்சிப்பவராக இருக்கலாம். நாங்கள் வாழவைப்பவர்கள்.
கவர்னர் விமர்சிக்கிறார்...
கவர்னர் ஆர்.என்.ரவி தமிழை அவமதிப்பதையே வழக்கமாக கொண்டு வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் பேசுகிறார். தமிழகத்தை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பாராட்டுகிறார். ஆனால், கவர்னர் இங்கு விமர்சிக்கிறார். தி.மு.க., ஆட்சி இருக்கும் வரையில் கவர்னர் ரவியும், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து இருக்க வேண்டும். அவர்களே நம்மை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள். தமிழகத்தின் வளர்ச்சியை கவர்னர் மட்டுமல்ல எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
இந்தியர்களை காப்பாற்ற...
ஆன்மிகம் வேறு, அரசியல் வேறு எனும் பகுத்தறிவு உடைய மக்கள் வாழும் மாநிலம் தமிழகம். கும்பமேளாவுக்கு சென்றவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது பா.ஜ., அரசின் கடமையல்லவா? அமெரிக்காவில் இருந்து கைவிலங்கிட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது தான் இந்தியர்களை காப்பாற்றும் முறையா?. அமெரிக்கா அரசுடன் இந்தியர்களின் நிலை குறித்து பேசியிருக்க வேண்டாமா? இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஈரோட்டில் இன்று த.வெ.க. பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு
17 Dec 2025ஈரோடு, விஜய் பிரச்சார கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று நேரில் ஆய்வு நடத்
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: புதிய உச்சத்தில் வெள்ளி விலை
17 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையோ வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
17 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி மறுப்பு
17 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
கனிமொழி எம்.பி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
17 Dec 2025சென்னை, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
17 Dec 2025சென்னை, வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலை
-
பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
17 Dec 2025சென்னை, பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11 விமானங்கள் ரத்து
17 Dec 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவிப்பு
17 Dec 2025அடிலெய்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் குவாஜா, அலெக்ஸ் கேரியின பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் குவித்துள்ளது.
-
சனாதன கும்பலை கண்டித்து டிச. 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் திருமாவளவன் அறிவிப்பு
17 Dec 2025சென்னை, மதவெறி அரசியலைப் பரப்பும் சனாதனக் கும்பலைக் கண்டித்து டிசம்பர் 22 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு: இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை
17 Dec 2025ஜெருசலேம், 2 நாட்கள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
-
குஜராத்: விபத்தில் 3 பேர் பலி
17 Dec 2025காந்தி நகர், குஜராத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு பரிசளித்தார் ஆனந்த் அம்பானி
17 Dec 2025புதுடெல்லி, சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்தார்.
14 ஆண்டுக்கு பிறகு...
-
இனி அன்புமணி ராமதாஸ் அல்ல.... அன்புமணி மட்டுமே: ராமதாஸ்
17 Dec 2025விழுப்புரம், இனி அன்புமணி ராமதாஸ் அல்ல அன்புமணி மட்டுமே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-12-2025.
17 Dec 2025 -
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு: உள்நோக்கத்துடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: ஐகோர்ட் கிளையில் தலைமை செயலாளர் விளக்கம்
17 Dec 2025மதுரை, எந்த உள்நோக்கத்துடனும் நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு தொடர்பாக காணொலி காட்சி மூலம் ஆஜரான தலைமை செயலாளர் ஐக
-
ஜல்லிக்கட்டு போட்டிகான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது
17 Dec 2025சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.&
-
பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகத்திற்கு வழங்கியது ரூ.4,130 கோடி மட்டுமே: மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Dec 2025சென்னை, கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17 சதவீதம் நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது.
-
சென்னை நங்கநல்லூரில் 2-வது ஹஜ் இல்லம் கட்டப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
17 Dec 2025சென்னை, சென்னை சூளையில் ஹஜ் இல்லம் 2-வது இல்லம் எதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய சாதனை: அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி
17 Dec 2025துபாய், ஆடவருக்கான தரவரிசை பட்டியலை சிறிய மாற்றத்துடன் ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
-
எத்தியோப்பியாவின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்
17 Dec 2025அடிஸ் அபாபா, பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா தொகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்ய தி.காங்., திட்டம்
17 Dec 2025கொல்கத்தா, 45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்ப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக தமிழகத்தில் ரூ.11.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
17 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக ரூ.11.40 லட்ச
-
பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: இந்தியாவின் அந்தஸ்து உயர்கிறது: அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
17 Dec 2025புதுடெல்லி, பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கியதுக்கு இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்று அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் டிச. 23-ல் தமிழகம் வருகை: நயினார்
17 Dec 2025சென்னை, தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரும் 23-ம் தேதி தமிழகம் வருகிறார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.


