எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகரிக்க சிறப்புத் தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கான குறுகியகால வேளாண் கடன் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 2025-26 ஆம் ஆண்டில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்,” என்று வேளாண் பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார். தமிழ்நாடு அரசின் 2025-2026ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். வேளாண் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றனர்.
தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம் (மாா்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட்டில் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நேற்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றினார்.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் மூலம், வேளாண் துறைக்கு மொத்தம் ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகளுக்கு, பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் வழங்கப்படும், கடன் 2019-20-ல், 1.83 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2023-24ல் 3.58 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து வணிக வங்கிகள் வழங்கும் பயிர்க் கடனில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 2025-26-ம் ஆண்டில் சுமார் 63 ஆயிரம் மலைவாழ் விவசாயிகள் பயனடையும் வகையில், குறுதானிய சாகுபடி இடுபொருள்கள் விநியோகம், காய்கறிப் பயிர்களில் பரப்பு விரிவாக்கம், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டுதல், நுண்ணீர்ப்பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்றவற்றுக்கு மானியம் வழங்கிட 22.80 கோடி ரூபாய் மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், இப்பயனாளிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அறுவடைக் காலங்களில் வேளாண் விளைபொருட்களின் அதிக வரத்தால், ஏற்படும் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் விதமாக, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வேளாண் விளைபொருட்களை இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் பொருளீட்டுக் கடன் வசதியானது உழவர் உற்பத்தி நிறுவனங்கள் விரிவுபடுத்தப்பட்டு, பத்து லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கான குறுகியகால வேளாண் கடன் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 2025-26 ஆம் ஆண்டில் ரூ.17,000 கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும். கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கான விவசாயிகளின் குறுகியகாலக் கடன் தேவைகளுக்கு 2025-26 ஆம் ஆண்டில் 3,000 கோடி ரூபாய் அளவுக்கு மூலதனக் கடன் வழங்கப்படும்.
கடந்த 2021-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட விவசாய பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தினைச் செயல்படுத்தும் பொருட்டு, மொத்த பயிர்க்கடன் தள்ளுபடியான 12,110 கோடியே 70 லட்சம் ரூபாயில், தற்போதுவரை, தள்ளுபடித் தொகையாக 10,336 கோடியே 40 லட்சம் ரூபாயும், தள்ளுபடித் தொகை மீதான வட்டியாக 90 லட்சம் ரூபாயும் தமிழக அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன. 2025-26 ஆம் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கென 1,477 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன்வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு, மீன்வியாபாரம் போன்ற சுயதொழில்களை மேற்கொள்ள 10,000 மீனவர் மற்றும் மீனவ உழவர்களுக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும். இதன்மூலம் ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திடும்.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகரிக்க சிறப்புத் தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியமாக வழங்கப்படும். 30 லட்சம் உழவர்களுக்கு பயிர்க் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு, இறுதிச் சடங்கு செலவு தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. காவிரி படுகை மாவட்டங்களில் குறுவை சாகுபடியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். உழவர் நல மையங்கள் வாயிலாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
மலைப்பகுதி விவசாயிகள் முன்னேற்றத்துக்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். மானாவரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ரூ.2,000 மானியமாக வழங்கப்படும். தமிழ்நாட்டில் 16.3 லட்சம் ஹெக்டேரில் தோட்டக் கலை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. 2023 - 24ஆம் ஆண்டில் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
"2021-24 வரை 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நீர்ப்பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கரும்பு உற்பத்தியில் தமிழகம் 2 ஆம் இடத்தில் உள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 1,000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவரை 30 லட்சம் உழவர்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. பயிர்க் கடன் ரூ. 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
அமித்ஷா இன்று தமிழகம் வருகை
14 Dec 2025வேலூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
-
ராகுலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை
14 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில
-
ஈரோட்டில் விஜய் மக்கள் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
14 Dec 2025சென்னை, ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயருக்கான பரிந்துரை பட்டியலில் ராஜேஷ், ஸ்ரீலேகா
14 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
-
நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
14 Dec 2025திருவண்ணாமலை, நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத
-
பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் ஊதுகுழலாக உள்ளாா்: அன்புமணி மீது அமைச்சா் விமர்சனம்
14 Dec 2025சிதம்பரம், பா.ம.க. தலைவா் அன்புமணி தற்போது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
14 Dec 2025புதுடெல்லி, அரசு முறைப் பயணமாக ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க. இளைஞர் அணி மட்டும்தான் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
14 Dec 2025சென்னை, நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க.இளைஞர் அணி மட்டும்தான் என்று துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலை துணை ஜனாதிபதி வெளியிட்டார்
14 Dec 2025புதுடெல்லி, தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
-
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு: டிசம்பர் 19-ல் வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்
14 Dec 2025சென்னை, வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
-
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியானவர்களுக்கு ரூ. ஆயிரம் நிச்சயம் கிடைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
14 Dec 2025தருமபுரி, தமிழகத்தில் ஏற்கனவே 1 கோடியே 13 லட்சம் பேருடன் மொத்தமாக 1 கோடியே 30 லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கியுள்ளோம்.
-
கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
14 Dec 2025சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
2025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை வெல்வாரா விராட்கோலி?
14 Dec 20252025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்திய நட்சத்திர வீரர் கோலி வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
விருப்ப மனு பெயரில் பணமோசடி: தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்
14 Dec 2025சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் என்ற பெயரில், அன்புமணி பணமோசடியில் ஈடுபடுவதாக பா.ம.க.
-
த.வெ.க. வேட்பாளர்களை தலைவர் விஜய் அறிவிப்பார்: த.வெ.க. தலைமை கழக்கம் அறிவிப்பு
14 Dec 2025சென்னை, த.வெ.க. வேட்பாளர்களை விஜய் அறிவிப்பார் என த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் அபாரம்: அரியானாவை வீழ்த்தியது மும்பை
14 Dec 2025புனே, சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் அபார ஆட்டத்தால் அரியானாவை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது.
-
த.வெ.க. சார்பில் விருப்பமனு விநியோகம் வழங்கப்படும்..? செங்கோட்டையன் பேட்டி
14 Dec 2025ஈரோடு, தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது என தெரிவித்த செங்கோட்டையன், த.வெ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
15 Dec 2025 -
2026 சட்டசபை தேர்தல் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி
15 Dec 2025தஞ்சாவூர், 2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது.
-
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு முழு ஆதரவு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
15 Dec 2025டெல்லி, ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
யூதர்களை குறிவைத்து ஆஸி.யில் நடந்த துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
15 Dec 2025கான்பரா, யூதர்களை குறிவைத்து ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
15 Dec 2025மேட்டூர், டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
யூத எதிர்ப்புவாதத்தை தூண்டுகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் மீது நெதன்யாகு குற்றச்சாட்டு
15 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை
15 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
-
சர்வதேச அளவில் முதலீடுகள் அதிகரிப்பு: தங்கத்தின் விலை மேலும் உயரும்..!
15 Dec 2025சென்னை, சர்வதேச அளவில் முதலீடுகள் அதிகரிப்பால் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



