எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரத்தை இணைப்பது தொடர்பாக உள்துறை செயலாளருடன் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார். வரும் 18-ம் தேதி இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளில் இந்திய தேர்தல் ஆணையம் இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாகத் தெரிகிறது. வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடப்பதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றஞ்சாட்டி வரும் சூழலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அண்மையில் மக்களவையி பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா உட்பட ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கேள்விகளை எழுப்பியுள்ளன” என்று கூறியிருந்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியானது தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. பல்வேறு மாநிலங்களிலும் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் புழக்கத்தில் இருப்பதாகவும், வாக்காளர்கள் பெயர்கள் சேர்ப்பு, நீக்கத்திலும் குளறுபடி இருப்பதாகவும், தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது.
இத்தகைய குற்றச்சாட்டுகளை ஒட்டி, “இந்திய தேர்தல் ஆணையத்தின் பாரம்பரியத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் குற்றச்சாட்டுகள் முன்வருகின்றன. அடுத்த மூன்று மாதங்களில் இந்தச் சிக்கலுக்கு தீர்வு எட்டப்படும்” என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில்தான் தலைமைத் தேர்தல் ஆணையர், உள்துறை செயலர், சட்டப்பேரவை செயலர் மற்றும் யுஐடிஏஐ அமைப்பின் சிஇஓ ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என மத்திய அரசிடம் இந்திய தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. இதனடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்கள் பிரதிநித்துவச் சட்டம் 1950 பிரிவு 23-ன் படி வாக்காளர் பதிவு அலுவலகம் வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண்ணை பெற வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனாலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்படவில்லை. சிலர் தாமாகவே முன்வந்து வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைத்தும் வருகின்றனர். இருப்பினும், அவ்வாறாக வாக்காளர் அடையாள எண்ணுடன் தங்களின் ஆதார் விவரத்தை இணைக்காதவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்பதையும் அரசு தெளிவுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 weeks ago |
-
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் தமிழகம் முழுவதும் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் : 9,000 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளதாக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Apr 2025சென்னை : ஜூன் மாதம் முதல் நான்காம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகைக்கு விடுபட்டவர்களுக்கான பணிகள் தொடங்கும்.
-
அடுத்த தொடரில் காணாமலும் போகலாம்: சூர்யவன்ஷி குறித்து சேவாக்
25 Apr 2025புதுடெல்லி : சூர்யவன்ஷியை அடுத்த ஐ.பி.எல் தொடரில் பார்க்க முடியாமலும் போகலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பியது இந்தியா
25 Apr 2025டெல்லி : சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியது.
-
என் நேர்மை கேள்விக்குள்ளாவது வருத்தம் அளிக்கிறது: நீரஜ் சோப்ரா
25 Apr 2025புதுடெல்லி : எனது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது என்று நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
-
காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி தேர்வு
25 Apr 2025காஞ்சி : காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
போப் ஆண்டவர் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி
25 Apr 2025வாடிகன் சிட்டி : புனித பீட்டர் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள போப் ஆண்டவர் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது: மத்திய அரசு
25 Apr 2025புதுடெல்லி : பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
ஆதார்கள் சேவை மையங்கள் அமைக்கப்படும் அமைச்சர் தகவல்
25 Apr 2025சென்னை : ஆதார்கள் சேவைகளை பெறுவதற்கு கூடுதலாக 50 மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
-
மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறப்பு
25 Apr 2025சென்னை : பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
25 Apr 2025புதுடெல்லி : வக்பு சட்டத்திருத்தம் மத உரிமைகளை பாதிக்காது என்று சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
-
இங்கிலாந்து ஆடுகளங்களில் சிறப்பாக செயல்படுவார்: ஹேசில்வுட் குறித்து ரவி சாஸ்திரி கணிப்பு
25 Apr 2025மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
-
400-வது டி20 போட்டியில் தோனி
25 Apr 2025இந்த ஐபிஎல் சீசனில் ருதுராஜ் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேற எம்.எஸ்.தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க டெல்லி கோர்ட் மறுப்பு
25 Apr 2025புதுடில்லி : நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டவர்களுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க டில்லி நீதிமன்றம் மறுத்துவ
-
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்பு
25 Apr 2025சென்னை : அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.
-
காஷ்மீர் என்கவுன்டரில் லஷ்கர் முக்கிய தளபதி சுட்டுக்கொலை
25 Apr 2025ஸ்ரீநகர் : காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் நடந்த மோதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டான்.
-
கோகுல இந்திராவின் கணவர் காலமானார்: எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
25 Apr 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.
-
3,935 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு தேதி அறிவிப்பு
25 Apr 2025சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் அணிகளை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம்: ஐ.சி.சி.க்கு பி.சி.சி.ஐ திடீர கடிதம்
25 Apr 2025மும்பை, : ஐ.சி.சி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2025
26 Apr 2025 -
சொந்த மைதானத்தில் ஆர்.சி.பி. முதல் வெற்றி
25 Apr 2025பெங்களூரு : விராட் கோலி, ஹேசில்வுட் அபார ஆட்டத்தால் 11 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது ஆர்.சி.பி.
-
மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி முர்மு நேரில் அஞ்சலி
26 Apr 2025வாடிகன், வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ள மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
கோவை உலக புத்தொழில் மாநாட்டுக்கான இலச்சினை, சிறப்பு இணையதளத்தை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
26 Apr 2025சென்னை, கோயம்புத்தூரில் நடைபெற உள்ள “உலக புத்தொழில் மாநாடு - 2025” கான இலச்சினையை வெளியிட்டு, மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு இணையதளத்தினை துணை முதல்வர் உதயநி
-
'ரெங்கா.. கோவிந்தா.. கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
26 Apr 2025திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது; இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "ரெங்கா..
-
உத்தரகண்டில் ராணுவ சீருடை விற்பனைக்கு தற்காலிக தடை
26 Apr 2025பஹல் : உத்தரகண்டில் பாதுகாப்பு காரணங்களினால் அங்குள்ள சந்தைகளில் இந்திய ராணுவத்தினரின் சீருடைகள் விற்கத் தற்காலிகமாக அம்மாநில காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
-
கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
26 Apr 2025சென்னை, கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.