எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பத்திரமாக அழைத்து வர தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடும் கண்டனம்...
தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.23) பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (நேற்று முன்தினம்) நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற, பயங்கரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் இப்பேரவையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடும் அதிர்ச்சி, துயரம்...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் மிகக் கொடூரமான ஒரு தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இதில் இதுவரை 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட தகவல் நமக்கெல்லாம் கடும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமான பஹல்காமுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல; உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள்.
கொடூரமான தாக்குதல்...
அங்கு பைசாரன் என்ற மலைப்பகுதியில் இருந்து திடீரென நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது இரக்கமற்ற வகையில் கொடூரமான தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்று அம்மாநில முதல்ர் உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
இரும்புக்கரம் கொண்டு...
இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. அங்கு எத்தகைய மோசமான, கொடூரமான, பயங்கரமான சூழல் நிலவுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு ஆகும். பயங்கரவாத - தீவிரவாத அமைப்புகள் எத்தகைய எண்ணம் கொண்டவையாக இருந்தாலும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்தத் தாக்குதலில் இதுவரை மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
தமிழர்கள் பாதிப்பு...
இந்தத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற தகவல் எனக்குக் கிடைத்தவுடன் உடனடியாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி மையம் தொடங்குவதற்கு உத்தரவிட்டேன். இச்சம்பவம் குறித்து பொது மக்கள் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிய உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300, 9289516712 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உரிய உதவிகளை...
மேலும், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையரை இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவிட்டேன். காஷ்மீர் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உரிய உதவியைச் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் கூடுதல் ஆட்சியரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அப்தாப் ரசூலை நேரடியாக ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
பத்திரமாக அழைத்து....
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பத்திரமாக அழைத்து வர தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. காஷ்மீரில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் நம் அனைவரது மனச்சாட்சியையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. 2017-ம் ஆண்டு குல்காமில் அமர்நாத் பயணம் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
2 நிமி மவுன அஞ்சலி...
மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்களின் மீதான இது போன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய மண்ணில் குறிப்பாக, நமது இந்திய ஜனநாயகத்தில் அறவே இடமில்லை. இதனைக் கண்டிப்பதோடு நமது கடமை முடிந்துவிடவில்லை. இது போன்ற செயல்கள் நடப்பதை அறவே தடுத்தாக வேண்டும். கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அனைவரும் எழுந்து இரண்டு நிமிட மவுன அஞ்சலியைச் செலுத்த கோருகிறேன், என்றார். முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைத்துக் கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து உரையாற்றினர்.
நிகழாமல் தடுத்திட...
பின்னர் மீண்டும் பேசிய முதல்வர் ஸ்டாலின், “காஷ்மீரில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து இந்த அவையில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களுடைய வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள். நமது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடிய இந்தக் கொடூரமான சம்பவத்திலே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டுமென்று இந்த அவையின் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய அனைத்து நடவடிக்கைகளை எடுக்கிற நேரத்தில் தமிழ்நாடும், தமிழ் மக்களும் என்றும் துணை நிற்பார்கள் என்று உறுதியை உங்கள் அனைவரின் சார்பிலும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
பார்லி., கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு ஆலோசனை
20 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவ
-
2 நாட்கள் பயணமாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
20 Jul 2025சென்னை : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 22, 23-ம் தேதிகளில் 2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முக்கிய முடிவை எடுத்த முகமது ஷமி
20 Jul 2025மும்பை : இந்திய அணியில் வாய்ப்பை இழந்த முகமது ஷமி மீண்டும் கம்பேக் கொடுக்க, உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளார்.
-
நீலகிரி, தென்காசி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Jul 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி,தென்காசி, தேனி கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமன்: 2-வது போட்டியில் இங்கி., வெற்றி
20 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.
-
பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோல்வி
20 Jul 2025உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
-
விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன்; மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு 10,997 கோடி ரூபாய் கடன் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
20 Jul 2025சென்னை : பயிர்க் கடன்களை உரிய கெடு தேதிக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ள
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
மீண்டும் வருகிறது: சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடருக்கு ஐ.சி.சி. அனுமதி..?
20 Jul 2025சென்னை : சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்டும் நடத்த ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைகால தொடர் இன்று ஆரம்பம் : 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டம்
20 Jul 2025புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைகால தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்து தொடரில் 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தி.மு.க.
-
விராட் கோலி இருந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்: ஸ்டீவ் ஹார்மிசன்
20 Jul 2025லண்டன் : லார்ட்ஸ் டெஸ்ட்டில் விராட் கோலி இருந்திருந்தால் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் தெரிவித்துள்ள
-
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய மூத்த வீரர்கள் மறுப்பு: லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ரத்து
20 Jul 2025மும்பை : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மூத்த வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ஆட்டம் ரத்தாகியுள்ளது.
-
சட்டமும், நீதியும் விமர்சனம்
21 Jul 2025சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார். அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி க
-
சென்ட்ரல் திரை விமர்சனம்
21 Jul 2025நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலை
-
டிரெண்டிங் திரை விமர்சனம்
21 Jul 2025யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
-
யாதும் அறியான் திரை விமர்சனம்
21 Jul 2025காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
-
பிளாக் மெயில் படம் பேசப்படும் - ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை
21 Jul 2025ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பிளாக்மெயில்’.
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
தலைமைச்செயலாளருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
21 Jul 2025சென்னை, தலைமைச்செயலாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
21 Jul 2025மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்
21 Jul 2025சென்னை, பா.ஜ.க.வுக்கு இலக்கு அ.தி.மு.க.வை அழிப்பது மட்டுமே என அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.