எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, 9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக தமிழகம்தான் இருக்கிறது என்றும், இந்தியாவிற்கே தமிழ்நாடுதான் தலைமையாக திகழ்கிறது என்றும் சென்னை தரமணியில் உலகளாவிய வணிக மையத் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
1971-ம் ஆண்டு முதல்...
சென்னை, தரமணியில் உலக வங்கியின் உலகளாவிய வணிக மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 10) திறந்துவைத்தார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “உலக வங்கியுடன் நம்முடைய பார்ட்னர்ஷிப் 1971-ம் ஆண்டு தமிழ்நாடு விவசாயக் கடன் திட்டத்தில் தொடங்கியது. அப்போது இருந்து, தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற வளர்ச்சி போன்ற பலதரப்பட்ட துறைகளில் உலக வங்கி நமக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. குறிப்பாக, 2022-ம் ஆண்டில், புதுடெல்லிக்கு வெளியே தன்னுடைய முதல் மண்டல அலுவலகத்தை உலக வங்கி சென்னையில்தான் அமைத்தார்கள்.
நீண்ட நெடிய உறவு...
செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களுக்கு உதவி செய்து, வேகமான மற்றும் வலுவான ஒருங்கிணைப்புக்கும் வழி ஏற்படுத்தி, தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவுடனான உலக வங்கியின் உறவை இந்த அலுவலகம் மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.உலக வங்கியுடனான நம்முடைய இந்த நீண்ட நெடிய உறவு பல்வேறு துறைகளில் பல நற்பலன்களை வழங்கியிருக்கிறது. முக்கியமான சிலவற்றை மட்டும் நான் பட்டியிலிட விரும்புகிறேன்.
இரண்டு துறைகளில்...
1980-ம் ஆண்டு மற்றும் 1990-ம் ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ‘தமிழ்நாடு ஊட்டச்சத்து திட்டம்’ மற்றும் 2004-ம் ஆண்டிலும் 2010-ம் ஆண்டிலும் செயல்பாட்டில் இருந்த தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம். இந்த இரண்டும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன்களில் முன்னேற்றம் காண சிறந்த முன்னெடுப்பாக அமைந்தது. இன்றைக்கு தமிழ்நாடு இந்தத் துறைகளில் இந்தியாவிற்கே லீடர் என்று சொல்லக்கூடிய இடத்தை அடைந்திருக்கிறது.
‘வாழ்ந்து காட்டுவோம்’...
அடுத்து, வறுமையை ஒழித்து ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு செயல்படுத்தப்பட்ட ‘வாழ்ந்து காட்டுவோம்’ எனும் முன்மாதிரி திட்டம், 20 லட்சம் ஏழை குடும்பங்கள் இதனால் முன்னேறி இருக்கிறார்கள். பெண்களுக்கான அதிகாரத்தை வழங்கியது மட்டுமல்லாமல், உழவர்களுக்கு நிலைத்த சமுதாயக் கட்டமைப்புகளையும் இந்தத் திட்டம் உருவாக்கி தந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சுய உதவிக் குழுக்களை ஊக்கப்படுத்தி பெண்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக ஒரு தரவை நான் சொல்ல விரும்புகிறேன்.
புதிய வேலைவாய்ப்புகள்...
பெண்கள் தலைமையேற்று நடத்தக்கூடிய 8 ஆயிரத்து 400 நிறுவனங்களுக்கு 2022-ஆம் ஆண்டிலிருந்து 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை 267 கோடி ரூபாய்க்கு இந்தத் திட்டம் மூலம் கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஊரகப் பகுதிகளில், 1 லட்சம் பேர் புதிய தொழில்கள் தொடங்கவும், 53 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தத் திட்டம் சாதனை படைத்திருக்கிறது. அதேபோன்று, பணிபுரியும் பெண்களுக்காக தமிழ்நாடு முழுவதும் நாம் தொடங்கி வரும் தோழி விடுதிகள் திட்டத்திலும் உலக வங்கியின் பங்கு இருக்கிறது. கூடிய விரைவில், சென்னையில் தாழ்தள எலெக்ட்ரிக் பேருந்துகள் இயங்கப்போகிறது. அதற்கான திட்டத்திலும் உலக வங்கி நமக்காக உதவியிருக்கிறார்கள்.
பெரும்பங்கு...
3 கட்டமாக செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலமாக, நம்முடைய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதில், உலக வங்கி பெரிய அளவில் உதவியிருப்பதுடன், இந்தியா முழுவதும் செயல்படுத்துவதற்கான மாடலாக தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் வெற்றியடைந்திருக்கிறது என்று பாராட்டியும் இருக்கிறார்கள். தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் 750 கி.மீ. சாலைகளை மேம்படுத்தி, விபத்துத் தடுப்பு பகுதிகள் உட்பட பல்வேறு பராமரிப்பு பணிகளை 2 ஆயிரம் கி.மீ. சாலைகளில் மேற்கொள்ள உதவியிருக்கிறது.
பேரிடர்களால்...
தமிழ்நாடு நீர்வள - நிலவள திட்டமானது நீர்ப்பாசனத் துறையின் நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கு வித்திட்டிருக்கிறது. இதனால், வேளாண்துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது. மிகப்பெரிய கடலோர பரப்பைக் கொண்டிருக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், புயல் உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்படக்கூடிய சூழல் நிலவுகிறது. அதற்கு உதவுகின்ற வகையில், ‘தமிழ்நாடு கடலோர பேரிடர் துயர் தணிப்புத் திட்டம்’ உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு, பேரிடர்களை தாங்கக்கூடிய உட்கட்டமைப்புகளையும், முன்கூட்டியே எச்சரிக்கை தரக்கூடிய அமைப்புகளையும் உருவாக்கி இருக்கிறோம்.
பெண்களின் பங்களிப்பு...
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்றால் அது பெண்களின் பங்களிப்பு இல்லாமல் முடியவே முடியாது. தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பே பெண்கள்தான். விவசாயம் அல்லாத, வளர்ந்து வரும் துறைகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரத்து 185 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கி உதவியுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
பார்ட்னர்ஷிப் தொடர...
இரண்டாவதாக, தமிழ்நாடு கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்துதல் திட்டம். மூன்றாவதாக, தமிழ்நாடு கிராமப்புற புதுவாழ்வுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம். உலக வங்கியுடன் சேர்ந்து இப்படி இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற என்னுடைய அரசு ஆர்வமாக இருக்கிறது. அதற்கு நம்முடைய பார்ட்னர்ஷிப் தொடர வேண்டும்.
வளர்ச்சி இன்ஜினாக...
9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக தமிழ்நாடுதான் இருக்கிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி.பி. 36 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2030-இல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று ஒரு பெரிய இலக்குடன் தமிழ்நாடு பயணிப்பது என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். அந்த இலக்கை அடைவதில் உலக வங்கியுடனான நம்முடைய உறவு வெறும் கடனுதவி சார்ந்தது மட்டுமல்ல. டெக்னாலஜி, கொள்கை உருவாக்கம் மற்றும் அறிவு சார்ந்த ஒரு பார்ட்னர்ஷிப் ஆக தான் இதை நான் பார்க்கிறேன்.
உலக வங்கி உதவும்...
குறிப்பாக, காலநிலை மாற்றம் சார்ந்த நடவடிக்கைகள், எஸ்.டி.ஜி. இலக்குகள், மகளிருக்கான அதிகாரம் வழங்குதல் ஆகிய இலக்குகளை எட்டுவதில் உலக வங்கியின் உதவி இன்றியமையாதது. நம்முடைய இலக்கை அடையச் செய்வதில் இருக்கும் சில சவால்களையும் நாம் யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக, வளர்ச்சி கடன்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 6 முதல் 7 விழுக்காடு என்று அதிக அளவில் இருக்கிறது. வரும் காலங்களில், புதுமையான மாற்றுதலுக்குரிய கடனுதவியை வழங்கி, மக்களுக்கு தேவையான சமூக - பொருளாதார மேம்பாட்டு தேவைகளுக்கான முதலீடுகளுக்கு உலக வங்கி உதவும் என்று எதிர்பார்க்கிறோம்.
இணைந்து செயல்படும்...
நீண்ட கால இலக்குகளை எட்டுவதில், ஒரு மாடல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க உலக வங்கியுடன் தமிழக அரசு தொடர்ந்து இணைந்து செயல்படும். நம்முடைய இந்தப் பயணம் புதுமை, சமூக பொருளாதார சமநிலை மற்றும் நிலையான வளர்ச்சி என்கிற இலக்கில் நிச்சயம் வெற்றியடையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
11 Jun 2025சேலம் : டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனால் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
-
புதிதாக 324 பேருக்கு பாதிப்பு: நாட்டில் கொரோனா தொற்று 7 ஆயிரத்தை நெருங்குகிறது
11 Jun 2025புதுடில்லி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7000த்தை நெருங்குகிறது. ஒரே நாளில் 324 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
-
தீப்பிடித்த கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு : இந்தியாவுக்கு சீனா நன்றி
11 Jun 2025புதுடில்லி : கேரள மாநிலம் கோழிக்கோடு - கண்ணூர் துறைமுகங்களுக்கு நடுவே நடுக்கடலில் தீப்பற்றிக் கொண்ட சரக்கு கப்பலில் இருந்து சீனாவை சேர்ந்தவர்களை மீட்ட இந்திய கடற்படைக்க
-
இளநிலை நீட் தேர்வு முடிவு வருகிற 14-ம் தேதிவெளியீடு
11 Jun 2025புதுடெல்லி, நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு வருகிற 14-ம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
-
ஆக்சியம்-4 மிஷன்: விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
11 Jun 2025புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு 'பால்கன்-9' ராக்கெட் மூலம் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனி
-
மீண்டும் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
11 Jun 2025சென்னை, தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
-
விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் கேள்வி கேட்போம்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
11 Jun 2025ஈரோடு, ஈரோட்டில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பச்சை துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல, விவசாய
-
விருதுநகர் அருகே வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்
11 Jun 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியா? - பிரேமலதா விளக்கம்
11 Jun 2025சென்னை : அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., தனித்துப் போட்டியிடவும் தயங்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறி உள்ளார்.
-
விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி
11 Jun 2025சென்னை, விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்கியது
11 Jun 2025காசா சிட்டி : இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
-
தொடரும் பதற்றம் எதிரொலி: லாஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு உத்தரவு
11 Jun 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற சோதனைகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நீடிக்கும் வன்முறை போராட்டங்கள், தீ வைப்பு சம்பவங்களுக்
-
சாதி சங்கங்களுக்கு தடை கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jun 2025மதுரை : சாதி சங்களுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள்: ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு
11 Jun 2025மதுரை : கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
ரஷ்யா மீண்டும் டிரோன் தாக்குதல்: உக்ரைனில் 5 பேர் பலி
11 Jun 2025கீவ் : உக்ரைனில் ரஷ்யா மீண்டும் நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1,115 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
11 Jun 2025சென்னை : வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
-
டெல்லி: ஆக்கிரமிப்பு வீடுகள் புல்டோசர் கொண்டு இடிப்பு
11 Jun 2025டெல்லி : தலைநகர் டெல்லியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் நேற்று புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன.
-
தொடரும் ராகிங் சம்பவங்கள்: 89 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு யு.ஜி.சி., நோட்டீஸ்
11 Jun 2025புதுடில்லி : நாடு முழுவதும் ராகிங் விதிமுறைகளை பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
கீழடியில் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை: மத்திய அமைச்சருக்கு வெங்கடேசன் எம்.பி. பதில்
11 Jun 2025மதுரை, கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது.
-
அதிபர் ட்ரம்ப் குறித்த பதிவுகள்: வருத்தம் தெரிவித்த எலான் மஸ்க்
11 Jun 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான தொடர்ச்சியான மோதல் போக்குக்கு மத்தியில் பில்லியனர் எலான் மஸ்க், ட்ரம்ப் குறித்த எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகி
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 Jun 2025சென்னை, தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அதிகரிக்கும் வெப்பநிலையை கட்டுப்படுத்த ஏ.சி. பயன்பாட்டில் விரைவில் புதிய விதிமுறை அமலாகிறது : மத்திய அமைச்சர் தகவல்
11 Jun 2025புதுடெல்லி : அதிகரித்துவரும் வெப்பநிலையை கட்டுப்படுத்த ஏ.சி.
-
சாதி, மதம் இல்லை என சான்றிதழ்: அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
11 Jun 2025சென்னை : சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.
-
பொறியியல் கலந்தாய்வு; ரேண்டம் எண் வெளியீடு
11 Jun 2025சென்னை : பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
-
இங்கி. பார்லிமெண்ட்டில் கெளரவம்: பள்ளி ஆசிரியைக்கு அமைச்சர் வாழ்த்து
11 Jun 2025சென்னை : இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கெளரவிக்கப்படவுள்ள சென்னை ஆசிரியை கனக லட்சுமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்