எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி உஷா, 61, இருக்கிறார். இவர் தடகள வீராங்கனை ஆவர். பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தி உள்ளார். இந்தியா சார்பில் ஆசியப்போட்டிகளில் தங்கம் வென்றவர். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றவர்.கடந்த 41 ஆண்டுக்கு முன், அவரது 20 வயதில் கேரளாவில் மாநில அளவில் பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தங்களில் பி.டி.உஷா சாதனை படைத்தார். அதாவது, 1984ம் ஆண்டில், 100 மீட்டரை 11.40 வினாடிகளிலும், 400 மீட்டரை 52.70 வினாடிகளும் கடந்து சாதனை படைத்து இருந்து இருந்தார். இந்த சாதனையை முந்தி செல்ல கொல்லத்தைச் சேர்ந்த 20 வயதான ஆர்த்ரா முயற்சி செய்தார். ஆனால் அவரால் பி.டி.உஷாவின் சாதனையை முறியடிக்க முடியவில்லை.
20 வயதான ஆர்த்ரா, 100 மீட்டரை 11.87 வினாடிகளில் கடந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், 100 மீட்டரை 11.84 வினாடிகளில் கடந்த ஓட்டப்பந்தய வீரரான ஷில்பி, இந்த முறை, 12.10 வினாடிகளில் கடந்தார். ஆனாலும், 41 ஆண்டுக்கு முன், அதாவது 20 வயதில், பி.டி. உஷா நிர்ணயித்த இலக்கை, திருவனந்தபுரத்தில் நடந்த 69வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் யாரும் முறியடிக்கவில்லை என்று கேரள விளையாட்டுத் துறையினர் கூறி வருகின்றனர்.
____________________________________________________________________________________
விளையாடுவாரா ரிஷப்?
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லண்டன் லார்ட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் பாய்ந்து விழுந்து பந்தை பிடிக்க முயற்சித்தபோது, இடதுகை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அந்த ஆட்டம் முழுவதும் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை. இதனால் துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பர் பணியை கவனித்தார். ஆனால் பண்ட் பேட்டிங் மட்டும் செய்தார்.
மான்செஸ்டரில் இன்று தொடங்கும் 4-வது டெஸ்டிலும் அவர் விக்கெட் கீப்பிங் செய்வது சந்தேகம்தான். இதனால் அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் பல முன்னாள் வீரர்கள் ரிஷப் பண்டை முழுநேர பேட்ஸ்மேனாக ஆட வைக்க கூடாது என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் . மான்செஸ்டரில் ரிஷப் பண்ட் தற்போது பயிற்சியை தொடங்கி உள்ளார் . விக்கெட் கீப்பிங் , பேட்டிங் பயிற்சில் ரிஷப் பண்ட் ஈடுபட்டு வருகிறார் . இதனால் அவர் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
____________________________________________________________________________________
ரொனால்டோ சறுக்கல்
கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை (போர்ச்சுகல்) பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி (அர்ஜென்டினா) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் . பெனால்டி அல்லாமல் மெஸ்ஸி 764 கோல்களும், ரொனால்டோ 763 கோல்களும் அடித்துள்ளனர். குறிப்பாக, ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இன்டர் மியாமி மற்றும் என்.ஒய் ரெட் புல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், மெஸ்ஸி 2 கோல்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளார். மெஸ்ஸி கிளப் போட்டிகளில் இன்டர் மியாமி அணிக்காகவும், ரொனால்டோ அல் நசர் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்.
____________________________________________________________________________________
அல்காரஸ் திடீர் விலகல்
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்நிலையில், நம்பர் 2 வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார். ஏற்கனவே காயம் காரணமாக நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், நம்பர் 5 வீரரான ஜோகோவிச் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் ஆகியோர் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
____________________________________________________________________________________
லக்சயா சென் தோல்வி
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது .இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின்லீ ஷீபெங் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 21-14 என லக்சயா சென் கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்டு அதிரடியாக ஆடிய சீன வீரர் அடுத்த இரு செட்களை 24-22, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இதனால் இந்தியாவின் லக்சயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
சவரன் ரூ.75,000-ஐ தாண்டி தங்கம் விலை புதிய உச்சம் : கடந்த 5 நாட்களில் ரூ.2,160 உயர்வு
23 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று (புதன்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.75,000-ஐ தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
-
மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ்? : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
23 Jul 2025சென்னை : மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தொடரை வென்றது இந்தியா
23 Jul 2025இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கியது : தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
23 Jul 2025ஜெயங்கொண்டம் : தமிழ்நாடு அரசு சார்பில் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கியது.
-
புதிய துணை ஜனாதிபதி தேர்வு: தேர்தல் பணியை துவங்கிய இந்திய தேர்தல் ஆணையம்
23 Jul 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
-
முதல்வர் வீடு திரும்புவது எப்போது? மு.க.அழகிரி பதில்
23 Jul 2025சென்னை, முதல்வர் நலமுடன் உள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-07-2025.
24 Jul 2025 -
அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Jul 2025ஓரத்தநாடு. அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கக்கோரி பார்லி.யில் எதிர்க்கட்சிகள் 3-வது நாளாக தொடர் அமளி : இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு
23 Jul 2025புதுடெல்லி : எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் 3-வது நாளாக நேற்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
-
பல சாதனைகள் படைத்த ஹர்மன்ப்ரீத்
23 Jul 2025லண்டன் : இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
வரலாற்றுச் சாதனை...
-
மருத்துவமனையில் இருந்தபடியே 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து 3 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்
23 Jul 2025சென்னை : மருத்துவமனையில் இருந்தபடியே நேற்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகள் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டால
-
முதல்வர் வீடு திரும்புவது எப்போது? - மு.க.அழகிரி பதில்
23 Jul 2025சென்னை : முதல்வர் நலமுடன் உள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
-
இங்கி., எதிரான 4-வது டெஸ்ட் : சாதனைகள் படைக்க பும்ராவுக்கு வாய்ப்பு
23 Jul 2025மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் பும்ரா பல்வேறு சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது.
-
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு: ரஸலுக்கு சக வீரர்கள் கவுரவம்
23 Jul 2025கிங்ஸ்டன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெற்றார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளி
-
நீலகிரி, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
23 Jul 2025சென்னை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பொதுத்தேர்வு அட்டவணைகள் ஒருவாரத்தில் வெளியடப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
23 Jul 2025திருச்சி : பள்ளி பொதுத்தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறியது குறித்து ராகுல்காந்தி கேள்வி
23 Jul 2025புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது.
-
இங்கிலாந்தில் 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்தார் கே.எல்.ராகுல்
23 Jul 2025லண்டன் : இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான நேற்று கே.எல்.ராகுல் 59 பந்தில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து மண்ணில்
-
தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் திட்டவட்டம்
23 Jul 2025சென்னை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டன: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
23 Jul 2025புதுடெல்லி, 2027-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
குத்தகை விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீடு செய்யலாம்: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
24 Jul 2025சென்னை, குறுவை சாகுபடியில் நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்யலாம் என்ற நிலையை மாற்றி, குத்தகைதாரர்களும் பயிர்க் காப்பீடு செய்ய தமிழக அரசு தற்ப
-
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு: சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்
24 Jul 2025புதுடெல்லி, இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில
-
சென்னையில் இருந்து தைலாபுரத்திற்கு பா.ம.க. தலைமையகம் மாற்றம்: ராமதாஸ்
24 Jul 2025விழுப்புரம், சென்னையில் இருந்து பா.ம.க. தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
இந்தியா பிரிட்டன் இடையேயான ஒப்பந்தம் பகிரப்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது: பிரதமர் மோடி
24 Jul 2025லண்டன், இந்தியா பிரிட்டன் இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பகிரப்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
ரஷ்யா: பயணிகள் விமானம் விழுந்து விபத்து: 50 பேர் பலி
24 Jul 2025மாஸ்கோ, ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் பாகத்தை, மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சக தரப்பு தெரிவித