எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பத்தூர், ஆம்பூர் கலவரம் தொடர்பாக பதிவான வழக்குகளில் இருந்து 161 பேரை விடுதலை செய்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார். 7 கட்டமாக பதியப்பட்ட வழக்குகளில் 6 கட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 161 (இறப்பு உட்பட) பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா (வயது 25). இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 24-ந் தேதி மாயமானார். இதுதொடர்பாக பழனி கொடுத்த புகாரின்பேரில் அந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஷமீல்அகமது (26) என்பவரை பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த மார்ட்டின் பிரேம்ராஜ் விசாரணைக்காக அழைத்துச்சென்றார்.
அப்போது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷமீல்அகமது சிகிச்சை பலனின்றி ஜூன் 26-ந் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆம்பூரில் அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஜூன் 27-ந் தேதி இரவு 7 மணியளவில் ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஷமில்அகமது மரணத்துக்கு காரணமான போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பயங்கர கலவரம் வெடித்தது.
இதில் 15 பெண் போலீசார் உள்பட 91 பேர் படுகாயமடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், 7 போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 4 மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. தமிழகத்தையே உலுக்கிய இந்த கலவரத்தில் தொடர்புடைய 191 பேர் மீது போலீசார் 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேலூர், கடலூர், சேலம் ஆகிய சிறைகளில் அடைத்தனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி பகல் 12 மணியளவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஆம்பூர் கலவரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு 28-ந் தேதி (அதாவது நேற்று) வழங்கப்படும் என நீதிபதி மீனாகுமாரி கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
அதன்படி, நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் ஆம்பூர் கலவரம் தொடர்பாக பதிவான வழக்குகளில் இருந்து 161 பேரை விடுதலை செய்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார். 7 கட்டமாக பதியப்பட்ட வழக்குகளில் 6 கட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 161 (இறப்பு உட்பட) பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முதல் பிரிவில் 26 பேர், 2-வது பிரிவில் 35 பேர், 3-வது பிரிவில் 34 பேர் உட்பட 161 விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கலவரத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. அஸ்லாம் பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து நஷ்டத்தை ஈடுசெய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-08-2025.
28 Aug 2025 -
அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை: திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம் தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Aug 2025சென்னை, தமிழகம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் தொழில்துறை வேலைவாய்ப்பிலும் முன்னணியில் உள்ளது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்
-
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள்-பணியாளர்களை காக்க நிவாரணம் மற்றும் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேணடும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
28 Aug 2025சென்னை, இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க வரி உயர்வால் திருப்பூரில் பாதிப்பு பிரதமருக்கு முதல்வர் மீண்டும் வலி்யுறுத்தல்
28 Aug 2025சென்னை, அமெரிக்கா உயர்த்தியுள்ள வரியால் திருப்பூர் பின்னலாடை தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
-
புதுச்சேரி ஜிப்மருக்கு புதிய தலைவர் நியமனம்
28 Aug 2025புதுச்சேரி, புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மருக்கு புதிய தலைவராக டாக்டர் சித்ரா சர்கார் நியமனம் செய்யப்பட்டார
-
அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
28 Aug 2025மதுரை, அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
-
முதல்வர் ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து
28 Aug 2025சென்னை, தி.மு.க. தலைவராக எழு ஆண்டுகள் நிறைவு செய்யும் முதல்வர் ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றக்குழு தி.மு.க.
-
தமிழகத்தை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை
28 Aug 2025திருப்பத்தூர், ஆம்பூர் கலவரம் தொடர்பாக பதிவான வழக்குகளில் இருந்து 161 பேரை விடுதலை செய்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.
-
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்யலாம்: ஐகோர்ட்
28 Aug 2025சென்னை, பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என நீதிபத
-
2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் - டி.டி.வி. தினகரன்
28 Aug 2025தஞ்சாவூர், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
-
மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கவர்னர்கள் நிலுவையில் வைப்பதை நியாயப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட்
28 Aug 2025புது தில்லி, மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு கவர்னர்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட்
-
விநாயகர் சதுர்த்தி விழா: நீலகிரி தெப்பக்காடு முகாமில் விநாயகரை வழிபட்ட யானைகள்
28 Aug 2025நீலகிரி, நீலகிரி தெப்பக்காடு முகாமில் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகரை வழிபட்ட யானைகள்.
-
பீகாரில் தாக்குதல் நடத்த திட்டம்? உளவு தகவல்
28 Aug 2025பாட்னா, பீகாரில் பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக உளவு துறை தகவல் வெளியீடுள்ளது.
-
கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் கொடுக்க மாட்டோம்: இலங்கை அமைச்சர் திட்டவட்டம்
28 Aug 2025சென்னை, இலங்கை அரசாங்கத்தினால் ராஜதந்திர ரீதியாக எவ்வித மாற்றமும் நடைபெறவில்லை. அதனால் இன்றும், நாளையும், என்றும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான தீவுதான்.
-
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
28 Aug 2025புதுடெல்லி, பருத்தி இறக்குமதிக்கு அடுத்த மாதம் 30ம் தேதி வரை தற்காலிக வரி விலக்கு அளிக்கப்படுவதாக, மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்த நிலை
-
நல்லகண்ணு அய்யா விரைந்து நலம்பெற விழைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Aug 2025சென்னை, உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் தேதி வெளியீடு
28 Aug 2025சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. வெங்கட்ராமன் நியமனம்..? இன்று பதவியேற்கிறார்
28 Aug 2025சென்னை, தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. வெங்கட்ராமன் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரஷியா-உக்ரைன் மோதல் மோடியின் போர்; டிரம்பின் உதவியாளர் பரபரப்பு பேச்சு
28 Aug 2025வாஷிங்டன், ரஷியா-உக்ரைன் மோதல் மோடியின் போர் என்று டிரம்பின் உதவியாளர் பேசியுள்ளார்.
-
நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
28 Aug 2025நீலகிரி, நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா
28 Aug 2025நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி மாதா கோவில் இந்த ஆண்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
உரிமை, நலன், வளர்ச்சிக்கான குரலாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் - செல்வப்பெருந்தகை
28 Aug 2025சென்னை: உரிமை, நலன், வளர்ச்சிக்கான குரலாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
அமெரிக்கா வரி விதிப்பு எதிரொலி: தூத்துக்குடியில் நிறுவனங்களில் 50% கடல் உணவு உற்பத்தி நிறுத்தம்
28 Aug 2025தூத்துக்குடி: அமெரிக்கா வரி விதிப்பு காரணமாக
தூத்துக்குடியில் உள்ள நிறுவனங்களில்
-
இந்தியாவுக்கு எதிராக வரி ; அமெரிக்க பொருட்களை ஆன்லைனில் வாங்கக்கூடாது; எச்.ராஜா
28 Aug 2025ஈரோடு: இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்பால் அமெரிக்க பொருட்களை ஆன்லைனில் வாங்கக்கூடாது என்று எச்.ராஜா கூறினார்.
-
வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும்: கெஜ்ரிவால் வலியுறுத்தல்
28 Aug 2025புதுடெல்லி: வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.