எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றிருப்பது அரசு பயணமா? என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.
பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஒரு மாநில முதல்-அமைச்சர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணப்படுவது சாதாரணமே. ஆனால், இதற்கு முன்பு துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுக்குச் சென்றதாகச் சொல்கிறார்கள். இதில், மார்ச் 2022 துபாய் பயணத்தில் மட்டும் 6,100 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனதாகச் சொல்கிறார்கள்.
இதில் இதுவரை முதலீடுகள் தமிழகத்துக்கு எதுவும் வரவில்லை. அதேபோல், சிங்கப்பூர் - ஜப்பான் பயணத்தின் போது ரூ.1,342 கோடி, ஸ்பெயின் பயணத்தின் போது ரூ.3,440 கோடி, அமெரிக்கப் பயணத்தின் போது ரூ.7,616 கோடி ரூபாய் முதலீடுகள் வந்ததாக வெறும் வாய் கணக்கு போட்டு பேசுகிறார்கள். இந்தப் பயணத்தின் மூலம் தமிழகத்துக்கு ஈர்த்துவரப்பட்ட முதலீடுகள் என்ன என்ற வெளிப்படை தகவல்கள் எதுவுமே இல்லை. ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனதாகச் சொல்லப்பட்ட நிறுவனங்களில் ஒரு சில நிறுவனங்களைத் தவிர வேறெந்த நிறுவனங்களையும் தமிழகம் அழைத்து வந்து தொழில் தொடங்க வைக்க முழுமையாகத் தவறிவிட்டது திமுக அரசு. திமுக ஆட்சியில் ரூ.10.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துவிட்டோம். இதன் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று கானல் நீர் கணக்கு பேசும் அவர்கள் இதுவரை அதில் உறுதியாக கொண்டுவரப்பட்ட முதலீடுகளைக் கேட்டால் வாய் திறக்க மாட்டார்கள். காரணம் அதில் பத்து சதவிகித முதலீடுகள் கூட இங்கே வரவில்லை என்பதே எதார்த்தம்.
மீண்டும் ஐந்தாவது முறையாக வெளிநாடு பயணம் சென்றுள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தப் பத்து நாள் பயணத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே தொழில் முனைவோர்களைச் சந்திக்கத் திட்டம். மீதமுள்ள அனைத்து தினங்களிலும் தனது மருமகன் சபரீசன் முதல்-அமைச்சரின் தந்தை பெயரில் உருவாக்கிய இருக்கை தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஈ.வெ.ராமசாமி பெயரில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். ஜெர்மனியில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, லண்டனில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு. அங்கே அவர்களின் கட்சி கொள்கை தலைவர்களின் விழாக்களில் பங்கேற்பது என்று மக்களின் வரிப்பணத்தில் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்கிறார் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்களின் வரிப்பணத்தில் அரசு பயணம் செய்வதா இல்லை இன்ப சுற்றுலா செல்வதா? இல்லை இதற்கு முன்பு அப்படி ஒன்று செலவாகவில்லை என்று சொல்லும் கும்பலுக்காகவே ஒரு பட்டியலை சொல்கிறேன்.
சிங்கப்பூர் பயணம்: ரூ.26.84 லட்சம், ஜப்பான் பயணம்: ரூ.88.06 லட்சம், ஸ்பெயின் பயணம்: ரூ.3.98 கோடி, அமெரிக்கா பயணம் ரூ.1.99 கோடி என மொத்தம் ரூ.7.12 கோடி ரூபாய் செலவியிருக்கிறது. இதில் குடும்பத்துடன் சென்ற துபாய் பயணத்தைச் சேர்த்தால் செலவு பத்து கோடியை தாண்டும். இன்னும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தொடங்கி மற்ற தி.மு.க. அமைச்சரவை கும்பலின் வெளிநாட்டு பயண வரவு செலவை கணக்கிடல் அது ரூ.50 கோடி ரூபாயை தாண்டும். அரசு ஊழியர்கள் தொடங்கி மக்கள் அனைவரும் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை என்று காரணம் சொல்லும் முதலீடுகளை ஈர்த்துவர வக்கற்ற அரசு மக்களின் வரிப்பணத்தில் இன்ப சுற்றுலா செல்வது சரியா?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 4 days ago |
-
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
30 Aug 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-08-2025.
30 Aug 2025 -
ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் ரூ. 2 ஆயிரம் உயர்வு - அமைச்சர் அறிவிப்பு
30 Aug 2025சென்னை : ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் ரூ. 2 ஆயிரதது 500 உயர்ந்துள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
உ.பி.யை விட தமிழக முதல்வர் பின்தங்குகிறார் - நயினார்
30 Aug 2025சென்னை : உ.பியை விட தமிழ முதல்வர் பின் தங்கிகியுள்ளார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி
30 Aug 2025காஷ்மீர் : ஜம்மு - காஷ்மீரின் ரியாசியில் நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
-
கொச்சி: வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்
30 Aug 2025கொச்சி : கேரள மாநிலம் கொச்சியில் வங்கி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
30 Aug 2025பீஜிங், சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
-
தலைவா படத்தை ரிலீஸ் செய்வதற்காக விஜய் காத்திருந்தார்: நடிகர் ரஞ்சித் தாக்கு
30 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடபெற்றது.
-
அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் - சசிகலா
30 Aug 2025சென்னை : அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
-
மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
30 Aug 2025திருவள்ளூா் : தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்
-
கால்நடை பல்கலை. உடன் இணைந்து தேசிய திறந்தநிலை தொழிற்கல்வி படிப்பு அறிமுகம்
30 Aug 2025சென்னை : தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து 4 புதிய தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன.
-
ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும் ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட அரசு
30 Aug 2025டோக்கியோ : ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும் என்று ஏ.ஐ. வீடியோ வெளியிட்டுள்ளது.
-
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் போர்க்கப்பல் மூழ்கியது
30 Aug 2025மாஸ்கோ : உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரைன் வீரர் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர்.
-
ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: சாம்பியன் பட்டத்தை பெற்றது இந்திய அணி
30 Aug 2025திம்பு : 7-வது ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நேற்று தொடங்கியது.
-
2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
30 Aug 2025சென்னை : 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு தகவல்
30 Aug 2025சென்னை, முதல்வரின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 44 ஆயிரத்து 777 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்
-
மூப்பனார் நினைவுநாள்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மரியாதை
30 Aug 2025சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும் தமாகா நிறுவனருமான ஜி.கே.
-
ஏ.ஐ. துறையில் கால் பதிக்கும் முகேஷ் அம்பானி நிறுவனம்
30 Aug 2025புதுடெல்லி : அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ.
-
ஜப்பானில் புல்லெட் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி
30 Aug 2025டோக்கியோ, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஜப்பான் நாட்டுக்கு சென்றார்.
-
தெரு நாய்களை விரட்ட மாணவர்கள் கண்டுபிடித்த 'மந்திரக்கோல்'- தேசிய அங்கீகாரம் கிடைத்தது
30 Aug 2025திருவனந்தபுரம் : கேரளா, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது.
-
அமெரிக்கா 50 சதவீதம் வரியால் பாதிக்கப்படும் ஏற்றுமதி துறைகளை பாதுகாத்திட புதிய கொள்கை வகுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
30 Aug 2025சென்னை, அமெரிக்கா 50 சதவீதம் வரியால் பாதிக்கப்படும் ஏற்றுமதி துறைகளை பாதுகாத்திட புதிய கொள்கை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.
-
திருத்தணி அருகே சீமான் தலைமையில் மரங்களின் மாநாடு
30 Aug 2025திருத்தணி : நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் பேசுவோம் என்ற தலைப்பில் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களி
-
இந்தியாவில் இருந்து நிலக்கடலை இறக்குமதியை இந்தோனேசியா நிறுத்தியது
30 Aug 2025இந்தோனேசியா : இந்தியாவில் இருந்து நிலக்கடலை இறக்குமதியை நிறுத்தியது இந்தோனேசியா நிறுத்தியுள்ளது.
-
ஸ்ரீசாந்தின் விவகாரம் மனைவி ஆவேசம்
30 Aug 2025டெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக உயர்வு
30 Aug 2025தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.