முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அருகே சோகம்: டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

மதுரை : மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியில் வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு தொங்க விட்ட  டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே டீக்கடை நடத்தி வருபவர் ரஞ்சித் (வயது 35). இவரது கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தவர் பாலகுரு (50). டீக்கடைக்கு வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு தொங்கவிடப்பட்டிருந்தது. நேற்று காலை சீரியல் பல்பு, கடையில் உள்ள இரும்பு கம்பியில் உரசிக் கொண்டிருந்தது.

அப்போது, சீரியல் பல்பு தொங்கிக் கொண்டிருந்த மின் வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதை தற்செயலாக தொட்ட பாலகுரு மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற முயன்ற கடை உரிமையாளர் ரஞ்சித் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துபோயினர். இதுகுறித்து, வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து