எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.15 - நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் தினேஷ்திரிவேதி தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட், இந்திய ரயில்வே தற்போது சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கவோ அல்லது ஏதாவது ஒரு இலக்கை அளிக்கவோ முயற்சிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஓரிருநாட்களுக்கு முன்பு அளிக்கப்பட்டுள்ள இந்த ரயில்வே பட்ஜெட்டில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவிற்கு சராசரியாக 25 சதவீதத்திற்கு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும். இதேபோல பயணிகள் கட்டணத்தையும் அவர் உயர்த்தி உள்ளார். கிலோ மீட்டருக்கு 2 பைசாவிலிருந்து 30 பைசா அளவிற்கு இந்த உயர்வு உள்ளது. சரக்கு கட்டணம் அளவிற்கு பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டவில்லை என்று வாதம் முன் வைக்கப்பட்டாலும், விலை வாசி உயர்வால் ஏற்கனவே துன்பப்படும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வரி உயர்வு பெரும் சுமையாக அமையும். கட்டண விதத்தை நேர் செய்வதற்காக 5 ரூபாயாக உயர்த்தப்படுவதும் கண்டிக்கத்தக்கதாகும். பிளாட்பாரம் டிக்கட்கூட ரூ.5-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நிபுணர்கள் அடங்கிய சுயேட்சையான ரயில்வே கட்டண ஒழுங்கு முறை ஆணையத்தை அமைப்பது என்ற அரசின் முடிவானது வருங்காலத்தில் ரயில்வே பட்ஜெட் அனைத்திலும் கட்டண உயர்வுகளை அதிகப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
பொதுவாக கடந்த பல ஆண்டுகளாக ரயில்வேயின் உபரி வருவாய் வீணாக்கப்பட்டு வருகின்றன. அணில் ககோகட்கர் குழு சமீபத்தில் அளித்த அறிக்கையில் ரயில்வேயின் நிதி நிலைமை சீர்கெட்டு இருப்பதாக கூறி, அதை தீர்க்க சில பரிந்துரைகளை அது அளித்துள்ளது. ரயில்வே பாதுகாப்புக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவை என்று கூறியுள்ளது. ரயில்வே அமைச்சர் ரயில்வே பாதுகாப்பு சரியாக இல்லை கூறியுள்ளபோதிலும், அந்த பாதுகாப்பை எப்படி உருவாக்குவது, எப்படி செயல்படுத்துவது என்பதில் அக்கறை செலுத்தவில்லை. அதற்காகன முதலீடுகளையும் அவர் ஒழுங்கு படுத்தவில்லை. பொதுத்துறை, தனியார்துறை ஆகியவற்றுடன் கூட்டுச்சேர்ந்து ரயில்வேயை நவீனமயப்படுத்துதல் திட்டமானது சந்தேகத்திற்கு உரியதாகவே அமைந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்து பேசப்பட்டபோதிலும், இதுவரையில் எதுவும் நடக்கவில்லை.
இதேபோல, ஆளில்லாத லெவல் கிராசிங்ற்கு பதிலாக மேம்பாலங்கள், சுரங்கப்பாலங்களை கட்டுவது ஆகியவை குறித்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் ரயில்வே அமைச்சகம் இதற்கு போதுமான நிதி ஒதுக்காததால் இப்பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதேபோலதான், ரயில்வே சிக்னல் முறைகளிலும் நிதி வசதி இல்லாததால் மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் போதுமானதாக இல்லை.
தொழில் துறையில் மிகவும் முன்னேவரும் தமிழகத்தில் தொழிற்சாலைகளை வளர்ப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஆனால், இதற்கு புதிய ரயில்வே பாதைகள், புதிய ரயில்கள் போன்றவை அவசியமானதாகும். மாநிலத்திற்கு உள்ளும், வெளியிலும் தொழிலகங்களை இணைக்ககூடிய வகையில் 16 புதிய ரயில்கள் தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கான முறையீடும் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடப்பாண்டில் 10 புதிய ரயில்கள்தான் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அவை கூட தமிழகம் கேட்டதில்லை. இதன் மூலம் தமிழக மக்களும், தமிழகமும் கேட்ட குறிப்பிட்ட புதிய ரயில்களை விடக்கூட அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல புதிய ரயில் பாதைகள் சீரமைக்கும் விஷயத்தில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 6 புதிய ரயில் தடங்களையும், விழுப்புரம் காட்பாடிக்கு இடையிலான ரயில்பாதை மின்மயமாக்குதல் போன்றவைகளும் ஏற்கப்படவில்லை. மும்பைக்கு 75 புதிய புறநகர் சேவை ரயில்களும், 44 கூடுதல் சேவைகளும் அளிக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தாவிற்கு 50 புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால், சென்னைக்கோ, தேவைகள் அதிகம் இருப்பினும், 18 கூடுதல் சேவைகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையாக, தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஒரகடத்தை, ஆவடியுடன் இணைக்கும் புதிய ரயில் பாதை திட்டம் குறித்து எதுவும் கூறப்படவில்லை.
இதேபோல விழுப்புரம்-திருச்சிக்கு இடையே இரட்டை வழிபாதை அமைக்கப்பட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்படவில்லை. போதிய நிதி நிலைமை இல்லாததால் 487 திட்டங்கள் முழுமை அடைய முடியாமல் உள்ளது என்பதை ரயில்வே அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோலதான் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் புதிய திட்டங்கள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. அந்த திட்டங்களை விரைவாக்க போதிய நிதிஒதுக்கீடும் இல்லை.
2006-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சென்னையில் சரக்கு தளம் அமைக்கும் திட்டம் குறித்த செயல்பாடும், பட்ஜெட்டில் இல்லை என்பதும் ஏமாற்றம் அளிக்கிறது. ஒட்டு மொத்தமாக இந்தியாவின் சராசரி குடிமகனுக்கு ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. வாய்கிழிய பேசுவது போல திட்டவட்டமான செயல்திட்டம் உள்ள திட்டங்கள் எதுவும் இதில் இல்லை.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
10-வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; அதிகாரமளித்தலின் புதிய சகாப்தம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
01 Jul 2025புதுடில்லி : டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், அதிகாரமளித்தலின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்த ஒரு பயணத்திற்கு நாம் சாட்சியாக நி
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: இமாச்சலப்பிரதேசத்தில் 10 பேர் பலி
02 Jul 2025சிம்லா : இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காண
-
சீமான் மீதான டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
02 Jul 2025மதுரை : சீமான் மீது டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
புதிய வாரிசை அறிவிக்க தலாய் லாமா மறுப்பு? - தேர்ந்தெடுக்க அறக்கட்டளைக்கு அதிகாரம்
02 Jul 2025கான்பெரா : தற்போதைய 14வது தலாய் லாமா, புதிய வாரிசை அறிவிக்க மறுத்துவிட்டார். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க திபெத் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளித்தார்.
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
2 மடங்கு கட்டணம் வசூலிக்க ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய அனுமதி
02 Jul 2025புதுடெல்லி : ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: உயர் நீதிமன்றம்
02 Jul 2025சென்னை : குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனி நபரின் உரையாடலை ஒட்டுக் கேட்பதை அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
-
தமிழகம் முழுவதும் காவல் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு
02 Jul 2025சென்னை : தமிழகம் முழுவதும் மாவட்டம், மாநகரங்களில் செயல்பட்டு வந்த அங்கீகரிக்கப்படாத போலீஸ் தனிப்படைகளை கலைத்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை
02 Jul 2025டாக்கா : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
-
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது 500 சதவீதம் வரி? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
02 Jul 2025வாஷிங்டன் : ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு
-
பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு
02 Jul 2025நாமக்கல் : பெண் சிறப்பு சப்/ இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் இருவர் கைது
02 Jul 2025சென்னை : ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு; அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'பைப் குண்டு' வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வ