எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒட்டன்சத்திரம், ஆக.- 15 - திண்டுக்கல், கரூர் மாவட்டங்களின் விவசாய விளை நிலங்களுக்கும் குறிப்பாக ஒட்டன்சத்திரம் நகர மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது பரப்பலாறு அணையாகும். மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் மலைப்பகுதியின் வடகிழக்கில் அமைந்துள்ள பாச்சலூர் மலைப்பகுதியில் ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராமத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வடகாடு கிராமம் பாச்சலூர் மலைப்பகுதியில் பரப்பலாறு நதியாக தோன்றி பழனிக்குச் செல்லும் வழியில் உள்ள விருப்பாச்சிக்கு அருகில் தலைகுத்து என்ற தலையூத்துக்கு கீழாக நங்காச்சி ஆறு எனப் பெயர் பெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் இந்த ஆறு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒட்டனைக்கட்டு வரை சென்று விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன் தருகிறது. இந்துக்களின் புனித தலமாக வடக்கே காசியின் தெய்வீகத்தையும் மகத்துவமும் இருப்பதால் பக்தர்கள் இதை ''நல்காசி ஆறு'' என்றே இன்னமும் அழைக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் மட்டும் அல்லாது தமிழகத்தில் பல கோவில்களுக்கு இங்கு வந்து தீர்த்தம் எடுத்துச் சென்று தங்கள் குலதெய்வம் உள்ளிட்ட இதர தெய்வங்களுக்கும் தீர்த்தாபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். நல்காசி ஆறு எனப்படும் நங்காஞ்சியாறு காவேரி நதியின் கிளை நதியான அமராவதி ஆற்றின் உபநதியாகும். பரப்பலாற்றின் குறுக்கே தலையூத்துக்கு மேலே நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் ஒட்டன்சத்திரம் பாச்சலூர் மலைப்பாதையில் அமைந்துள்ளது. நங்காஞ்சி ஆற்றினால் பயன்பெற்று வந்த 1373 ஏக்கர் பழைய ஆயக்கட்டு நிலங்களுக்கு உறுதியான பாசன நீர் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் கூடுதலாக 1000 ஏக்கர் பாசன நிலங்களை கூடுதல் பயன் பெறுவதற்கும் பரப்பலாறு நீர்த்தேக்கத் திட்டம் 1971ம் ஆண்டு தொடங்கப்பட்டு ரூ.10.40 லட்சம் மதிப்பிலான தொகை செலவு செய்யப்பட்டு 1974ம் ஆண்டு நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டது.
பரப்பலாறு நீர்த்தேக்கம் முற்றிலும் கற்களால் கட்டப்பட்டுள்ளது அணையின் சிறப்பு அம்சமாகும். அணையின் மொத்த நீளம் 81.08 மீட்டர் ஆகும். ஆற்றின் ஒரு மடையின் அளவு அதாவது ஒரு கண் அளவு 1.52 மீட்டர் ஞ் 1.83 மீட்டர் அளவில் உருவாக்கி அமைக்கப்பட்டுள்ளது. நீர் வெளியேற்றப்படும் அணைப்பகுதியில் 3 கண்கள் 9.75 மீட்டர் ஞ் 4.57 மீட்டர் என்கிற அளவுகளில் வளைவு கதவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்று மடையின் அடித்தளம் மட்டம் 527.305 மீட்டர். அணையின் நிறை நீர் மட்டம் 554.780 மீட்டர். உச்சநீர் மட்டம் 555.65 மீட்டராகும். அணையின் கரை மேல் மட்டம் 557.780 மீட்டராகும். அணைக்கட்டின் கொள்ளளவு உயரம் 27.44 மீட்டராகும். இந்த அணையின் நீர் வழிந்தோடி உலகின் பிரபலமான அணைக்கட்டுகள் அமைந்துள்ள பிலிப் பக்கெட் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது அணைக்கு கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகும்.
பரப்பலாறு அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மி.கன அடியாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து போதிய நீர் வரத்து கிடைக்கப் பெறும் அணையின் வண்டல் மண்படிந்து நீரின் கொள்ளளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் நீரியல் ஆய்வகம் 2002ம் ஆண்டில் விரிவான ஆய்வு மேற்கொண்டு அணையின் கொள்ளளவு குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. 2002ல் நீரியல் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் 197.95 மி.கன அடி உள்ள பரப்பலாறு அணையின் நீர் மட்டம் 4.021852 மி.க. மீட்டர் குறைந்துள்ளதாகரும் 1.58409 மி.கன மீட்டர் வண்டல் மண் படிந்துள்ளது எனவும் அறக்கை சமர்பிக்கப்பட்டது. நீரியல் ஆய்வக அறிக்கை எண் 1/2003 மதிப்பிட்டுள்ள 1584090 கன மீட்டர் வண்டல் மண்ணை அப்புறப்படுத்த 12.55 லட்சம் தொகைக்கான மதிப்பீடு தயாரித்து திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 1974ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பரப்பலாறு அணையின் மூலமாக 1504 டன் கூடுதல் உணவு உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த அணைக்கட்டின் நீர் ஆதாரத்தின் மூலமாக ஒரு டன் உணவு உற்பத்திக்கு ரூ.6300 மட்டுமே செலவாகும் என விவசாயத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு ஏக்கருக்கு மொத்த செலவு ரூ.4480 மட்டுமே எனவும் விவசாய வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பரப்பலாறு அணைக்கட்டின் நீர்வள ஆதாரத்தின் மூலமாக திண்டுக்கல், கரூர் ஆகிய இரு மாவட்டங்களில் 9 அணைக்கட்டுகளும் திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமாள்குளம் அணைக்கட்டு, சடையகுளம் அணைக்கட்டு, ராமசமுத்திரம் அணைக்கட்டு, ஜவ்வாதுபட்டி பெரியகுளம் அணைக்கட்டு, ஜவ்வாதுபட்டி அணைக்கட்டு, வரதாகன் அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுகள் மூலமாக சுமார் 1278 ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பயனடைந்து வருகிறது. பரப்பலாறு அணையின் மூலமாக கரூர் மாவட்டத்தில் உள்ள கோறையூத்து அணைக்கட்டு ஒட்டனை அணைக்கட்டு, அரவக்குறிச்சி அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுகள் மூலமாக சுமார் 1323 ஏக்கர் நிலம் பாசனப்பயன்பாடு பெற்று வருகிறது. தற்சமயம் உலக வங்கியின் நிதி ஆதாரம் மூலமாக பரப்பலாறு அணை மராமத்து செய்யப்பட்டு தூர்வாரப்பட்டு உள்ளது. கடந்த முறை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நிலத்தடி நீரை சேமிக்க கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்கியதால் இன்றைக்கு குடிநீர் ஆதாரம் வெகுவாக காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது. மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நீர்வளத்தை காப்பதற்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை வகுத்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு பொதுப்பணித்துறையின் மூலமாக குளங்கள் முதல் அணைக்கட்டுகள் வரை மராமத்து பணிகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே நீர்வள ஆதாரம் பெருக அணைக்கட்டுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் தமிழக முதல்வரை விவசாயிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பல்வேறு சிறப்புத்தகுதி படைத்த பரப்பலாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள அணைக்கட்டு பகுதியை சுற்றுலாத்தளமாக அறிவிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 5 days ago |
-
திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா; முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
01 Aug 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-08-2025.
01 Aug 2025 -
ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
01 Aug 2025பென்னாகரம் : ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ பேட்டி
01 Aug 2025சென்னை, “2026 தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” என வைகோ தெரிவித்துள்ளார்.
-
வருகிற 11, 12-ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
01 Aug 2025சென்னை : கள ஆய்விற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் மு.க.
-
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவகவுடா பேரன் குற்றவாளி: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
01 Aug 2025பெங்களூரு, வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்ப
-
டிரம்ப் வரி விதிப்பு விவகாரம்: யு.ஏ.இ., அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
01 Aug 2025புதுடில்லி : டிரம்ப் வரி விதிப்பு விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உடன் பிரதமர் மோடி போனில் ஆலோசனை நடத்தினார்.
-
3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை ஆக. 11-ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்குகிறார் இ.பி.எஸ்.
01 Aug 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
-
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்: மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை இல்லாததால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
01 Aug 2025புதுடெல்லி, பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
-
அரசு நிகழ்வில் பங்கேற்க ஆட்டோவில் சென்ற சந்திரபாபு
01 Aug 2025கடப்பா : ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
-
அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் பெயரை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை
01 Aug 2025சென்னை, அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைபடத்தையோ பயன்படுத்தக் கூடாது என சென
-
10 ஆண்டுகளில் இது முதல்முறை: மெட்ரோ ரயிலில் ஜூலை மாதம் மட்டும் 1.03 கோடி பேர் பயணம்
01 Aug 2025சென்னை : ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 910 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.
-
முதல்வரை சந்திக்க நேரம் கேட்கவில்லை: ராமதாஸ்
01 Aug 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு சென்னை : வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்தது.
01 Aug 2025சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Aug 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் ஆக.7-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,
-
மத்திய அரசிடம் பேசி பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய நடவடிக்கை எடுப்போம்: கோவில்பட்டியில் இ.பி.எஸ். உறுதி
01 Aug 2025கோவில்பட்டி, தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் என அ.தி.மு.க.
-
5 நாட்களுக்கு பிறகு கவின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்
01 Aug 2025திருநெல்வேலி, நெல்லையில் ஆணவக் கொலையான கவின் செல்வகணேஷ் உடலை ஐந்து நாட்களுக்குப் பின்னர் உறவினர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
-
உலகம் முழுவதும் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்கும்? - நாசா விளக்கம்
01 Aug 2025அமெரிக்கா : உலகம் முழுவதும் இன்று 6 நிமிடம் இருளில் மூழ்கும் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இதற்கு நாசா மறுத்துள்ளது.
-
71-வது தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக 'பார்க்கிங்' தேர்வு
01 Aug 2025புதுடில்லி : இந்தியாவின் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு விவகாரம்: இ.பி.எஸ். மனு தள்ளுபடி
01 Aug 2025சென்னை, அ.தி.மு.க.
-
பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்
01 Aug 2025சென்னை : கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார். அவருக்கு வயது 87.
-
கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம் : மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் அறிவிப்பு
01 Aug 2025தூத்துக்குடி : கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சத்திற்கான நிவாரண உதவியை மாநில எஸ்.சி., எஸ்.டி. அணையம் அறிவித்துள்ளது.
-
உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடை மாற்றம்..?
01 Aug 2025லக்னோ : ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரிங்கு சிங் ராஹி, ஷாஜகான்பூரின் துணை கலெக்டராக பொறுப்பேற்ற 36 மணி நேரத்திற்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்
-
பறக்கும் ரயில் - மெட்ரோ ரயில் இணைப்புக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்
01 Aug 2025புதுடெல்லி : சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ ரயில் இணைப்புக்கு கொள்கை அளவில் ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது என மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவி
-
ஓ.பி.எஸ். கேட்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு: நயினார் நாகேந்திரன் உறுதி
01 Aug 2025மதுரை, ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டால் 26-ந்தேதி தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.