எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே.18 - நடப்பு ஐபிஎல் 6-வது தொடரில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் 10 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி 6 பேரை கைது செய்துள்ளனர். 3 புக்கிகள் தலைமறைவாகிவிட்டனர்.
ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங்சில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் புக்கிகள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடெங்கும் பல நூறு கோடி ரூபாயை முதலீடு செய்யும் அளவுக்கு விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிய வந்தது.
இதையடுத்து முக்கிய நகரங்களில் உள்ள கிரிக்கெட் சூதாட்டக்காரர்களைப் பிடிக்க அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. ஸ்ரீசாந்த், கைது தகவல் பரபரப்பாக வெளியானதால் பல நகரங்களில் சூதாட்டக்காரர்கள் தலைமறைவாகி விட்டனர். இதுவரை நடந்துள்ள விசாரணைகளில் இந்தியா முழுவதும் கிரிக்கெட் சுதைாட்டம் பெரிய அளவில் நடப்பது தெரிய வந்துள்ளது. அந்த சூதாட்டக்காரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னையிலும் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் ஜரூராக நடப்பது தெரிய வந்தது. சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்ற இடங்கள் குறித்து டெல்லி போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
கூடுதல் டிஜிபி நரேந்திர பால்சிங் உத்தரவின்பேரில், ஐ.ஜி.மஞ்சுநாத் மேற்பார்வையில் எஸ்.பி.பெருமாள் தலைமையில், எஸ்.பி.ராஜேஸ்வரி உள்ளிட்ட தனிப்படை போலீசார் சூதாட்டம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து சென்னையில் நேற்று முன்தினம் இரவு பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சென்னையில் 8 பேர் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தை ஓசையின்றி நடத்தி வருவது கண்டு பிடிக்கப்பட்டது. சைதாப்பேட்டை, அயனாவரம், மற்றும் வட சென்னைபகுதிகளில் அவர்கள் தனி அறைகள் ஏற்படுத்தி செயல்படுவதையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிந்தனர். சென்னையில் மயிலாப்பூர், புரசைவாக்கம் , வடசென்னை உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.15 லட்சம் சிக்கியுள்ளது. மேலும் 10 லேப்டாப், 4 கம்ப்யூட்டர், 5 ஒயர்லெஸ் கருவிகளும், 24 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் என அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 6 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். கைதான 7 சூதாட்டக்காரர்களில் ராஜா அண்ணாமலைபுரத்தில் கைதான வேதாச்சலம் (வயது 62) என்பவர் முக்கியமானவர் ஆவார். இவர் சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்துக்காகவே தனி ஆபீஸ் வைத்திருந்தார். அந்த அலுவலலகத்தில் போலீசார் சோதனையிட்டனர். அந்த அறை நவீன தொலை தொடர்பு சாதனங்களால் இணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பந்தும் வீசப்படும் சமயத்தில் ஸ்பாட் பிக்சிங் செய்வதற்கு வசதியாக 2 கம்ப்யூட்டர்கள், 5 லேப் டாப்கள், 5 வயர்லஸ் போன்கள், மற்றும் ஆவணங்கள் அங்கு இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பணம் கட்டியவர்கள் விபரம் அடங்கிய ஆவணங்கள் தனியாக இருந்தன. அங்கு சோதனையிட்ட போது கிரிக்கெட் சூதாட்டத்தில் திரட்டப்பட்ட ரூ.15 லட்சம் ரொக்கப் பணத்தை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
கைதானவர்களில், புரசைவாக்கத்தை சேர்ந்த லக்கி என்ற நத்பத், செளகார்பேட்டையைச் சேர்ந்த நவீன்குமார் என்ற பாபு கவு தம், கீழ்பாக்கத்தைச் சேர்ந்த தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகியோரும் அடங்குவர். கைதான 7 பேரில் 5 பேர் வடமாநிலத்தினர். இன்னும் 2 பேர் பெயரை போலீசார் வெளியிடவில்லை.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களுார், ஐதராபாத் உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள சூதாட்டக்காரர்களுக்கும் சென்னையில் பிடிபட்ட 5 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்கள் அனைவருக்கும் தலைவனாக டெல்லியில் உள்ள சூதாட்டக்காரர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவரது வழி காட்டுதலின் பேரில் சென்னையில் உள்ள 8 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களும் ஒரு வருடன் ஒருவர் ஒருங்கிணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சூதாட்டக் காரர்கள் 10 பேரும் பெரும்பாலும் வேதாச்சலத்தின் அலுவலகத்தில் சந்தித்து பேசுவது வழக்கம். மற்ற நேரங்களில் அவர்கள் அண்ணா சாலையில் உள்ள காப்பி ஷாப்பில் சந்தித்து பேசி முடிவுகள் எடுப்பதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.
இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சூதாட்டம் மூலம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை சம்பாதித்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். சென்னையில் அடையாளம் காணப்பட்ட 10 சூதாட்டக்காரர்களில் 7 பேர் பிடிபட்ட நிலையில் 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அந்த 3 பேரில் ஒருவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். மற்றொருவர் அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த் ஆவார். இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் கட்டு பவர்களிடம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வசூலித்தது தெரிய வந்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் பணம் சம்பாதிக்கும் ஆசையுடன் பணம் கட்டியவர்களில் பெரும்பாலானவர்கள் வட சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களில் 90 சதவீதம் பேர் தொழில் செய்து வருபவர்கள். இவர்கள் ஐ.பி.எல். ஆட்டத்தில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடுவதோடு வழக்கமாகவே இந்தியா விளையாடும் போட்டிகளில் வெற்றி - தோல்வி பற்றி சூதாட்டத்தில் ஈடுபடுவது உண்டு என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் தொடர்பான ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கியுள்ளது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மஞ்சுநாதா கூறியதாவது:-
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் பற்றி தெரிய வந்ததும் சென்னையில் 7 இடங்களில் நாங்கள் சோதனை நடத்தினோம். அப்போது 6 பேர் பிடிபட்டனர். அவர்களில் ஒருவரிடம் ரூ.10 லட்சமும், மற்றொருவரிடம் ரூ.5 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் விருத்தாசலம் என்ற வேதாசலம் உட்பட 5 புக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதர 3 பேர் தப்பி தலைமறைவாகிவிட்டனர். இவர்களில் ஒருவர் தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளார். விருத்தாசலத்தின் மேற்கு ஜோன்ஸ் சாலை அலுவலகம்தான் பெட்டிங்கில் ஈடுபட்டோர் சந்திக்கும் இடமாக இருந்திருக்கிறது. இதேபோல் அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல காபி ஷாப்பும் பெட்டிங்கில் ்டுபடுவோர் கூடும் இடமாக இருந்திருக்கிறது.
தப்பி ஓடி தலைமறைவானவர்களில் பிரசாந்த் என்பவரை முக்கிய புக்கியாக போலீசார் கருதுகின்றனர். அவரது அயனாவரம் தர்ஷன் ரெசிடென்ஸியிலும் போலீசார் சோதனை நடத்தி இருக்கின்றனர். இவர்தான் அண்ணாசாலை காபி ஷாப்பை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார் சென்னையில் தொடர்ந்தும் பல இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
சூதாட்டத்துக்காக அவர்கள் பயன்படுத்திய போன்கள், லேப்டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைதான 5 பேரிடமும் கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடந்தது. நேற்று காலையிலும் அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்ததும் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறு ஐ.ஜி. மஞ்சுநாதா கூறினார்.
சென்னையில் கைதாகி உள்ள 6 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே தொடர்பு ஏதேனும் இருந்ததா என்று தெரிய வில்லை. இதை உறுதிபடுத்த 8 சூதாட்டக்காரர்களின் செல்போன் உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது தவிர கிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் பண பரிமாற்றமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இது தொடர்பான விசாரணைகள் முடிய சுமார் ஒரு மாதம் ஆகும் என்று சி.பி.சி.ஐ.டி,. போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தனஅதன் மூலமே இவர்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் தொடர்பு இருந்ததா என்பது தெரிய வரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம்: நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
01 Jul 2025மதுரை : திருப்புவனம் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் கந்தர்லால் சுரேஷ் தலைமையில், நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்
-
இளைஞர் மரண வழக்கில் கைதான 5 காவலர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
01 Jul 2025சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
-
மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு
01 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவிக்கு வரும் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவி
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
01 Jul 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 1) பவுனுக்கு ரூ.840 என அதிரடி ஏற்றம் கண்டு விற்பனையானது.
-
வீடு, வீடாக சென்று பிரசாரம் ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Jul 2025சென்னை, டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ தகவல்
01 Jul 2025வாஷங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறி
-
அரசின் மானியம் இல்லாவிட்டால்... எலான் மஸ்க்கை எச்சரித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
01 Jul 2025வாஷிங்டன் : அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா சி.இ.ஓ., எலான் மஸ்க், அநேகமாக தென்னாப்பிரிக்கா திரும்பி விடுவார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
-
தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவை இடைநீக்கம் செய்தது நீதிமன்றம்
01 Jul 2025பேங்காக், கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இடைநீக்கம் செய
-
நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம்
01 Jul 2025புதுடில்லி : அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த அடுத்த ஓரிரு நாட்களில் டில்லியில் இருந்து வியன்னா சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டு இருந
-
ராமநாதபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
01 Jul 2025புதுடில்லி : மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 87-ஐ ராமநாதபுரம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
பிறந்தநாளை முன்னிட்டு வெங்கையா நாயுடு, அகிலேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து த
-
தமிழகத்தில் பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்வு : அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
01 Jul 2025சென்னை : பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல், மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர்&n
-
தேசிய மருத்துவர்கள் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : மருத்துவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்று தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை: இ.பி.எஸ்.
01 Jul 2025சென்னை, “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க.
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.58 குறைப்பு
01 Jul 2025புதுடில்லி : வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது.
-
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்காக வெற்றி நிச்சயம் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார் : ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு
01 Jul 2025சென்னை : சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்
-
சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை : ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்
01 Jul 2025சென்னை : அஜித்குமார் 'கஸ்டடி' மரணம் தொடர்பான வழக்கை, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நில
-
தகவல் கிடைத்தவுடன் திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து விட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
01 Jul 2025சென்னை : திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
-
த.வெ.க. கொடி பயன்படுத்த தடை விதிக்க கோரி வழக்கு: ஜூலை 3-ம் தேதி தீர்ப்பு
01 Jul 2025சென்னை : த.வெ.க.
-
எல்லை நிர்ணய விவகாரங்களில் இந்தியாவுடன் பேச தயார்: சீனா
01 Jul 2025பெய்ஜிங் : இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
-
சீதை பிறந்த இடத்தின் வளர்ச்சிக்கு ரூ.883 கோடி: பீகார் அமைச்சரவை ஒப்புதல்
01 Jul 2025பாட்னா : பீகார் மாநிலத்தில், சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள புனித தலங்களின் மேம்பாட்டிற்காக ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களு
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது
01 Jul 2025இராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது தவிர வேறு எந்த விஷயத்திலும் பாக்.குடன் பேச்சு இல்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
01 Jul 2025நியூயார்க் : பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது என்றும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தவிர வேறு எந்த விஷயத்திலும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை ந
-
10-வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; அதிகாரமளித்தலின் புதிய சகாப்தம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
01 Jul 2025புதுடில்லி : டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், அதிகாரமளித்தலின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்த ஒரு பயணத்திற்கு நாம் சாட்சியாக நி
-
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க பயணம்
01 Jul 2025டெல்அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.