எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.18 - நடப்பு ஐபிஎல் 6-வது தொடரில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் 10 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி 6 பேரை கைது செய்துள்ளனர். 3 புக்கிகள் தலைமறைவாகிவிட்டனர்.
ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங்சில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் புக்கிகள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடெங்கும் பல நூறு கோடி ரூபாயை முதலீடு செய்யும் அளவுக்கு விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிய வந்தது.
இதையடுத்து முக்கிய நகரங்களில் உள்ள கிரிக்கெட் சூதாட்டக்காரர்களைப் பிடிக்க அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. ஸ்ரீசாந்த், கைது தகவல் பரபரப்பாக வெளியானதால் பல நகரங்களில் சூதாட்டக்காரர்கள் தலைமறைவாகி விட்டனர். இதுவரை நடந்துள்ள விசாரணைகளில் இந்தியா முழுவதும் கிரிக்கெட் சுதைாட்டம் பெரிய அளவில் நடப்பது தெரிய வந்துள்ளது. அந்த சூதாட்டக்காரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னையிலும் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் ஜரூராக நடப்பது தெரிய வந்தது. சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்ற இடங்கள் குறித்து டெல்லி போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
கூடுதல் டிஜிபி நரேந்திர பால்சிங் உத்தரவின்பேரில், ஐ.ஜி.மஞ்சுநாத் மேற்பார்வையில் எஸ்.பி.பெருமாள் தலைமையில், எஸ்.பி.ராஜேஸ்வரி உள்ளிட்ட தனிப்படை போலீசார் சூதாட்டம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து சென்னையில் நேற்று முன்தினம் இரவு பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சென்னையில் 8 பேர் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தை ஓசையின்றி நடத்தி வருவது கண்டு பிடிக்கப்பட்டது. சைதாப்பேட்டை, அயனாவரம், மற்றும் வட சென்னைபகுதிகளில் அவர்கள் தனி அறைகள் ஏற்படுத்தி செயல்படுவதையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிந்தனர். சென்னையில் மயிலாப்பூர், புரசைவாக்கம் , வடசென்னை உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.15 லட்சம் சிக்கியுள்ளது. மேலும் 10 லேப்டாப், 4 கம்ப்யூட்டர், 5 ஒயர்லெஸ் கருவிகளும், 24 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் என அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 6 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். கைதான 7 சூதாட்டக்காரர்களில் ராஜா அண்ணாமலைபுரத்தில் கைதான வேதாச்சலம் (வயது 62) என்பவர் முக்கியமானவர் ஆவார். இவர் சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்துக்காகவே தனி ஆபீஸ் வைத்திருந்தார். அந்த அலுவலலகத்தில் போலீசார் சோதனையிட்டனர். அந்த அறை நவீன தொலை தொடர்பு சாதனங்களால் இணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பந்தும் வீசப்படும் சமயத்தில் ஸ்பாட் பிக்சிங் செய்வதற்கு வசதியாக 2 கம்ப்யூட்டர்கள், 5 லேப் டாப்கள், 5 வயர்லஸ் போன்கள், மற்றும் ஆவணங்கள் அங்கு இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பணம் கட்டியவர்கள் விபரம் அடங்கிய ஆவணங்கள் தனியாக இருந்தன. அங்கு சோதனையிட்ட போது கிரிக்கெட் சூதாட்டத்தில் திரட்டப்பட்ட ரூ.15 லட்சம் ரொக்கப் பணத்தை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
கைதானவர்களில், புரசைவாக்கத்தை சேர்ந்த லக்கி என்ற நத்பத், செளகார்பேட்டையைச் சேர்ந்த நவீன்குமார் என்ற பாபு கவு தம், கீழ்பாக்கத்தைச் சேர்ந்த தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகியோரும் அடங்குவர். கைதான 7 பேரில் 5 பேர் வடமாநிலத்தினர். இன்னும் 2 பேர் பெயரை போலீசார் வெளியிடவில்லை.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களுார், ஐதராபாத் உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள சூதாட்டக்காரர்களுக்கும் சென்னையில் பிடிபட்ட 5 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்கள் அனைவருக்கும் தலைவனாக டெல்லியில் உள்ள சூதாட்டக்காரர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவரது வழி காட்டுதலின் பேரில் சென்னையில் உள்ள 8 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களும் ஒரு வருடன் ஒருவர் ஒருங்கிணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சூதாட்டக் காரர்கள் 10 பேரும் பெரும்பாலும் வேதாச்சலத்தின் அலுவலகத்தில் சந்தித்து பேசுவது வழக்கம். மற்ற நேரங்களில் அவர்கள் அண்ணா சாலையில் உள்ள காப்பி ஷாப்பில் சந்தித்து பேசி முடிவுகள் எடுப்பதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.
இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சூதாட்டம் மூலம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை சம்பாதித்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். சென்னையில் அடையாளம் காணப்பட்ட 10 சூதாட்டக்காரர்களில் 7 பேர் பிடிபட்ட நிலையில் 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அந்த 3 பேரில் ஒருவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். மற்றொருவர் அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த் ஆவார். இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் கட்டு பவர்களிடம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வசூலித்தது தெரிய வந்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் பணம் சம்பாதிக்கும் ஆசையுடன் பணம் கட்டியவர்களில் பெரும்பாலானவர்கள் வட சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களில் 90 சதவீதம் பேர் தொழில் செய்து வருபவர்கள். இவர்கள் ஐ.பி.எல். ஆட்டத்தில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடுவதோடு வழக்கமாகவே இந்தியா விளையாடும் போட்டிகளில் வெற்றி - தோல்வி பற்றி சூதாட்டத்தில் ஈடுபடுவது உண்டு என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் தொடர்பான ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கியுள்ளது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மஞ்சுநாதா கூறியதாவது:-
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் பற்றி தெரிய வந்ததும் சென்னையில் 7 இடங்களில் நாங்கள் சோதனை நடத்தினோம். அப்போது 6 பேர் பிடிபட்டனர். அவர்களில் ஒருவரிடம் ரூ.10 லட்சமும், மற்றொருவரிடம் ரூ.5 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் விருத்தாசலம் என்ற வேதாசலம் உட்பட 5 புக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதர 3 பேர் தப்பி தலைமறைவாகிவிட்டனர். இவர்களில் ஒருவர் தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளார். விருத்தாசலத்தின் மேற்கு ஜோன்ஸ் சாலை அலுவலகம்தான் பெட்டிங்கில் ஈடுபட்டோர் சந்திக்கும் இடமாக இருந்திருக்கிறது. இதேபோல் அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல காபி ஷாப்பும் பெட்டிங்கில் ்டுபடுவோர் கூடும் இடமாக இருந்திருக்கிறது.
தப்பி ஓடி தலைமறைவானவர்களில் பிரசாந்த் என்பவரை முக்கிய புக்கியாக போலீசார் கருதுகின்றனர். அவரது அயனாவரம் தர்ஷன் ரெசிடென்ஸியிலும் போலீசார் சோதனை நடத்தி இருக்கின்றனர். இவர்தான் அண்ணாசாலை காபி ஷாப்பை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார் சென்னையில் தொடர்ந்தும் பல இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
சூதாட்டத்துக்காக அவர்கள் பயன்படுத்திய போன்கள், லேப்டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைதான 5 பேரிடமும் கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடந்தது. நேற்று காலையிலும் அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்ததும் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறு ஐ.ஜி. மஞ்சுநாதா கூறினார்.
சென்னையில் கைதாகி உள்ள 6 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே தொடர்பு ஏதேனும் இருந்ததா என்று தெரிய வில்லை. இதை உறுதிபடுத்த 8 சூதாட்டக்காரர்களின் செல்போன் உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது தவிர கிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் பண பரிமாற்றமும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இது தொடர்பான விசாரணைகள் முடிய சுமார் ஒரு மாதம் ஆகும் என்று சி.பி.சி.ஐ.டி,. போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தனஅதன் மூலமே இவர்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் தொடர்பு இருந்ததா என்பது தெரிய வரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.