எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,ஜூலை 3 - என்.எல்.சி பங்குகளை விற்க முயற்சிக்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். என்.எல்.சி யின் 5 சதவீத பங்குகளை விற்க முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,பங்குகளை விற்றால் அதை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் என்.எல்.சிபங்குகளை விற்க முயற்சிக்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.இதைத் தொடர்ந்து நேற்று (2-ம் தேதி) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் மதுரை மாநகர்,புறநகர் மாவட்ட கழகம் சார்பில் ஸ்காட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட அவைத் தலைவர் புதூர் கே.துரைப்பாண்டியன்,புறநகர் மாவட்ட அவைத் தலைவர் சி.துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, புறநகர் மாவட்ட செயலாளர் எம்.முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ க்கள் ஏ.கே.போஸ்,மேலூர் ஆர்.சாமி, கே.தமிழரசன்,எம்.வி.கருப்பையா ஆகியோர் வரவேற்று பேசினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க மாநில சிறு பான்மையினர் நல பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ் கலந்து கொண்டு தலைமை வகித்து பேசினார்.அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் முதல்வர் அம்மா பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.ஆனால் மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட சட்ட ரீதியாக போராடி வெற்றி கண்டு வருகிறார் முதல்வர் அம்மா.ஆனால் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்திற்கு அனைத்து தரப்பிலும் எதிராகவே செயல்படுகிறது.நெய்வேலி சுரங்க விவகாரத்தில் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது.அப்படி விற்பதாக இருந்தால் இதனை தமிழக அரசு வாங்கி கொள்ள தயாராக இருக்கிறது என்று முதல்வர் அம்மா அறிவித்த பிறகும் மத்திய அரசு மவுனம் காட்டி வருகிறது. மத்திய அரசு உடனடியாக தனது மவுனத்தை கலைத்து முதல்வர் அம்மாவின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசிடம் 5 சதவீத பங்குகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராடி வரும் அம்மாவிற்கு தமிழக மக்கள் துணை நின்று 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அமோக வெற்றியை தேடித் தர வேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஜாதி,மதம், பார்க்காமல் அனைவரும் ஒன்று பட்டு முதல்வர் அம்மாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதனை தொடர்ந்து மேயர் ராஜன்செல்லப்பா ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்ப அதனை அ.தி.மு.க வினர் திரும்ப சொல்லி முழங்கிய கோஷங்கள் வின்னை முட்டியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் அ.மா.பரமசிவம், வளர்மதி ஜெபராஜ், முன்னாள் எம்.பி.முத்துமணி, முன்னாள் எம்.எல்.ஏ வி.ஆர்.ராஜாங்கம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, கே.ஜெயவேல்,கே.ராஜாபாண்டியன், அணி செயலாளர்கள் எஸ்.டி.ஜெயபாலன்,கா.டேவிட் அண்ணாத்துரை,ஷ.ராஜலிங்கம்,பெ.இந்திராணி,ஏ,ராஜீவ்காந்தி,தமிழ்செல்வன், டி.வினோத்குமார், புதூர் சுந்தரா, தொகுதி கழக செயலாளர்கள் மா,இளங்கோவன்,கோ.பாரி, எஸ்.முருகேசன், எம்.ரவிச்சந்திரன், பகுதி கழக செயலாளர்கள் எம்.என்.முருகன், வி.கே.எஸ். மாரிச்சாமி, முத்திருளாண்டி,எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் வி.கே.சாமி, மாநில பொதுக் குழு உறுப்பினர்கள்அண்ணாநகர் முனியசாமி, சண்முகவள்ளி, எல்லீஸ் நகர் ஏ.இந்திரா, கவுன்சிலர்கள் புதூர் ஐ.அபுதாகீர், பூமிபாலகன், எம்.கேசவபாண்டியம்மாள், கு.திரவியம், முத்துக்கருப்பன், கார்னர் பாஸ்கர், வீரணன், கண்ணகி பாஸ்கரன், ராணி போஸ்,குமுதா, பாகச் செயலாளர்கள் யுகா ராஜா, பாஸ்கரன், கோட்டைச்சாமி, மற்றும் வழக்கறிஞர் ரமேஷ்,நிலையூர் முருகன், மின்வாரியம் கெளதமன்,மிசா செந்தில், ஆட்டோ விஜயன், பார்த்திபன், விசுவலிங்கம், மகளிரணி தெய்வம் கணபதி, தேனம்மாள், எம்.கல்யாணி, புஷ்பா, எல்டா பாஸ்டின், சுகுணா, பாண்டியம்மாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 13 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Sep 2025- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- பிரான்மலை சேக்
-
இன்றைய ராசிபலன்
14 Sep 2025 -
இன்றைய நாள் எப்படி?
14 Sep 2025