எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மே.7 - ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆஜரானார். அப்போது முன் ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்தார். மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா இருந்தபோது விதிமுறைகளை மீறி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டதில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் குறித்து சுப்ரீம்கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பாராளுமன்ற பொதுகணக்குக்குழுவும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்தியது. அதன் வரைவு அறிக்கை பாராளுமன்ற லோக்சபை சபாநாயகர் மீராகுமாரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இதைத்தவிர பாராளுமன்ற கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தியது.
2ஜி ஸ்பெக்டரம் ஊழல் குறித்த சி.பி.ஐ. விசாரணையை சுப்ரீம்கோர்ட்டு கண்காணித்ததோடு மார்ச் 31-ம் தேதிக்குள் விசாரணையை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு காலக்கெடு விதித்தது. சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவின்படி விசாரணையை தீவிரப்படுத்திய சி.பி.ஐ. கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முதல் குற்றப்பத்திரிகையை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அவரது தனிச்செயலாளர் சந்தோலியா, தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெஹூரா சித்தார்த்தா, ஸ்வான் நிறுவன புரமோட்டர் பால்வா ஆகியோர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அதனையடுத்து இரண்டாவது குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் 25-ம் தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்ததது. அதில் தமிழக முதல்வர் கருணாநிதி இரண்டாவது மனைவி தயாளு அம்மாள், 3-வது மனைவி ராஜாத்தி அம்மாளின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி, உள்பட 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 பேரும் இன்று மே-6-ம் தேதி) டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி ஆஜராகுவதற்கு நேற்றுமுன்தினமே கனிமொழி டெல்லி சென்றுவிட்டார். கனிமொழி டெல்லிக்கு செல்லும் முன்பு, தமிழக அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி. உள்பட தி.மு.க.வை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் டெல்லி சென்று கனிமொழியை காப்பாற்றுவதற்கு சட்ட நிபுணர்கள்,முன்னாள் நீதிபதிகள் ஆகியோர்களை சந்தித்து பேசியதாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் டெல்லிக்கு சென்ற கனிமொழி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை சட்டப்பூர்வமாக சந்திப்பேன் என்றார்.
டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ.தனிக்கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவருக்கு வாதாட பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜாராகி வாதாடினார். அப்போது அவர் கூறுகையில் கனிமொழி ஒரு அப்பாவி என்றும் அவருக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறினார். கலைஞர் டி.வி.யின் பங்குதாரராக மட்டுமே கனிமொழி இருக்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளாக அவர் இருப்பதால்தான் கனிமொழி குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் ராம்ஜெத்மலானி மேலும் கூறினார். கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் நேற்று சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜரானார். ஆனால் சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக கனிமொழி சென்றபோது அவருடன் தி.மு.க. வை சேர்ந்த 5 எம்.பி.க்கள் சென்றனர்.
சி.பி.ஐ.தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப்பத்திரிகையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச்சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். மேலும் கலைஞர் டி.வி. செயல்பாட்டில் ஒரு மூளையாக செயல்பட்டு வருகிறார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு 20 சதவீதம் பங்கும், அதன் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்கும் முதல்வர் கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்கும் உள்ளது. 2 ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டி.வி.க்கு ரூ. 200 கோடி சென்றிருக்கிறது என்று சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியுள்ளது. அதாவது டி.பி.ரியாலிட்டி கம்பெனியில் இருந்து குசேகான் ப்ரூட்ஸ் அண்ட் வெஜிடேபிள்ஸ் பிரைவேட் லிமிடெட், டிபி கம்பெனி, சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் மூலம் இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு போய் சேர்ந்துள்ளது. ஸ்வான் தகவல்தொடர்பு பிரைவேட் லிமிடெட்டுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் பல சலுகைகளை செய்ததற்காக இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 2ஜிஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் கனிமொழி கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதனால்தான் நேற்று சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜரானபோது முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கலும் செய்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, சரத்குமார் ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது கனிமொழி, சரத்குமார் சார்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி, இந்த வழக்கில் கனிமொழிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இந்த ஊழலுக்கு முழுப்பொறுப்பும் அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்குத்தான் உண்டு என்றும் ராம்ஜேத்மலானி வாதிட்டார். ஆ.ராசாவும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாத பிரதிவாதங்களைக் கேட்ட நீதிபதி ஷைனி, இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு(இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார். எனவே இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்றும் இதே சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.