எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை.அக்.1 - சமையல் எரிவாயு சிலிண்டர்களுக் கான மானியத்தை பணமாக நுகர்வோருக்கு வழங்கும் திட்டத்தை முற்றிலுமாக மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் மன்மோகன்சிங்கை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்..
இந்த திட்டம் மாநில அரசின் உரிமைகளை மீறுவதாகும் என்றும் முதலமைச்சர், பிரதமருக்கு தாம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர நேற்று எழுதியுள்ள நேர்முக கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசு திட்டங்களின் மானிய பணத்தை மக்களுக்கு நேரடியாக வழங்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும ,மானியத்திற்கு பதில் நேரடி பணப்பரிமாற்றம் (டிபிடி) திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டதற்கும,எனது கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்து ஏப்ரல் 27ம் தேதி நான் தங்களுக்கு கடிதம் எழுதியதை நினைவு கூற விரும்புகிறேன்.?
தமிழ்நாட்டில் இதுபோன்ற நேரடி பணம் வழங்கும் திட்டத்தை மாநில அரசு சில வகைகளுக்கு மட்டும் அமல்படுத்தி வருகிறது. கல்வி உதவித் தொகை, பேறு கால உதவி, சமூக பாதுகாப்பு உதவித் தொகை போன்றவற்றிற்கு இவற்றை செயல்படுத்தி வருகிறோம். இதற்காக மாநில அரசு அனைத்து வகை முன்ஏற்பாடு களையும் செய்து முறையாக இந்த திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது. அவை முழுமையாக கண்காணிக் கப்படுகிறது.
ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது போல அனைத்து திட்ட மானியங்களையும் மக்களுக்கு நேரடியாக வழங்குவது என்பது இயலாத காரியம். வங்கிகள் போதுமான ஊழியர்களை நியமனம் செய்து மக்களுக்கு வழங்கும் வசதி செய்யப்படவில்லை. எனவே இதை செயல்படுத்துவது எளிதானது அல்ல.
நேரடி பண மாற்றம் திட்டம் குறித்து நான் ஏற்கனவே 2 வித எதிர்ப்புகளை தெரிவித்தேன். இந்த திட்டத்தை பொது வினி யோகம், உர மானியம், மண்எண்ணை மானியம் போன்றவற்றிக்கு பயன்படுத்த கூடாது என்று கூறியிருந்தேன்.
ஏன் என்றால் இந்த திட்டம் வழங்கப்படும் பொருட்கள் குறிப்பிட்ட காலத்தில் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டிய முக்கியமானது ஆகும். இதில் நேரடி மானிய திட்டம் சரியாக இருக்காது. மேலும், மத்திய அரசு மாநில அரசு மூலம் இதை செயல்படுத்தாமல், வங்கி மூலமாக நேரடியாக வழங்கு வது மாநில அரசுகளை மீறி தனி வழியில் செல்வதாகும். இது இந்தியாவின் ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், மத்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றிக்கு எதிரானது.அரசியல் சட்டத்தை மீறு வதாக இது அமைந்துள்ளது.
இந்த நிலையில் நேரடி மானிய திட்டத்தை முதல் கட்டமாக அமல் படுத்து வதற்கு அரியலூர், புதுக் கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களை மத்திய அரசு தேர்வு செய்தது. இப்போது மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தமிழக அரசுக்கு 7.9.2013_ல் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.அதில் 2_வது கட்டமாக சமையல் கியாஸ், நேரடி மானிய திட்டத்தை இந்தியா முழுவதும் 235 மாவட்டங் களில் அமல்படுத்தப் போவ தாகவும், அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 28 மாவட்டங்கள் சேர்க்கப் பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் 1.1.2014 முதல் அமலுக்கு வரப்போவ தாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு நான் எனது கடுமையான எதிர்ப்நிப தெரிவித்துக் கொள்கிறேன். சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்துக்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். சமையல் கியாஸ் மிகவும் அத்தியாவசியமான பொருளாகும். இது தேவையான நேரத்தில் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும். நேரடி பண மாற்றம் மூலம் உரிய நேரத்தில் உதவி கிடைக்காது.
மேலும், சமையல் கியாஸ் நேரடி மானியம் ஆதார் எண் பெற்றவர்களுக்கு தான் வழங்கப்படும். ஆனால் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ஆதார் எண் வழங்கப்படும் பணி மிகவும் மந்தமான நிலையில் நடக்கிறது. இதில் ஏராளமான குழப்பங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் ஆதார் அட்டை பெற தகுதியுடைய 6 கோடியே 74 லட்சம் பேர் உள்ளனர். ஆனால் இதுவரை 2 கோடியே 52 லட்சம் பேருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது.இப்படி இருக்க இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும். இதில் குழப்பமும், பொது மக்களுக்கு தொல்லையும் தான் ஏற்படும். இந்த திட்டத்தை அமல் படுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்கி இருக்கிறார்கள். 3 மாதத்திற்குள் ஆதார் எண்ணை பெறாதவர்கள் எப்படி கியாஸ் நேரடி மானியத்தை பெற முடியும்.
ஆதார் அட்டையை எந்த ஒரு சேவை பணிக்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பில் கூறியுள்ளது. அப்படி இருக்க நேரடி மானிய திட்டத்துக்கு அதை பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமாக அமைகிறது.இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்எண்ணை அளவு 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமம் மற்றும் சிறு நகர பகுதிகளில் மக்கள் சமையலுக்கு விறகு மற்றும் மின்சாரத்தை பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.
நான் ஏற்கனவே மத்திய அரசு திட்ட பயனாளிகளை அடையாளம் காணுவதற்கு மாநில அரசின் நிர்வாகத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தேன். ஆனால் கியாஸ் நேரடி மானிய திட்டத்திற்கு அதை மீறி பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த திட்டத்தை பொறுத்தவரையில் மாநில அரசுகளுடன் கலந்து பேசிதான் முடிவு எடுக்க வேண்டும்.
ஆதார் அட்டை இன்னும் வழங்கப்படாத நிலையிலும், பாங்கிகளில் உரிய வசதிகள் செய்து தரப்படாத நிலையிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது சரியாக இருக்காது. மேலும், கோர்ட்டு வழங்கியுள்ள உத்தரவுகளுக்கும் எதிராக இது அமைந்துள்ளது.இதனால் உரிய உத்தரவாதம் அளிக்கும் வரையில் இந்த திட்டத்தை அமல்படுத்தக்கூடாது. இதை முற்றிலும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதுவரை இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.