இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை.அக்.1 - சமையல் எரிவாயு சிலிண்டர்களுக் கான மானியத்தை பணமாக நுகர்வோருக்கு வழங்கும் திட்டத்தை முற்றிலுமாக மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் மன்மோகன்சிங்கை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்..
இந்த திட்டம் மாநில அரசின் உரிமைகளை மீறுவதாகும் என்றும் முதலமைச்சர், பிரதமருக்கு தாம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர நேற்று எழுதியுள்ள நேர்முக கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசு திட்டங்களின் மானிய பணத்தை மக்களுக்கு நேரடியாக வழங்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும ,மானியத்திற்கு பதில் நேரடி பணப்பரிமாற்றம் (டிபிடி) திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டதற்கும,எனது கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்து ஏப்ரல் 27ம் தேதி நான் தங்களுக்கு கடிதம் எழுதியதை நினைவு கூற விரும்புகிறேன்.?
தமிழ்நாட்டில் இதுபோன்ற நேரடி பணம் வழங்கும் திட்டத்தை மாநில அரசு சில வகைகளுக்கு மட்டும் அமல்படுத்தி வருகிறது. கல்வி உதவித் தொகை, பேறு கால உதவி, சமூக பாதுகாப்பு உதவித் தொகை போன்றவற்றிற்கு இவற்றை செயல்படுத்தி வருகிறோம். இதற்காக மாநில அரசு அனைத்து வகை முன்ஏற்பாடு களையும் செய்து முறையாக இந்த திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது. அவை முழுமையாக கண்காணிக் கப்படுகிறது.
ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது போல அனைத்து திட்ட மானியங்களையும் மக்களுக்கு நேரடியாக வழங்குவது என்பது இயலாத காரியம். வங்கிகள் போதுமான ஊழியர்களை நியமனம் செய்து மக்களுக்கு வழங்கும் வசதி செய்யப்படவில்லை. எனவே இதை செயல்படுத்துவது எளிதானது அல்ல.
நேரடி பண மாற்றம் திட்டம் குறித்து நான் ஏற்கனவே 2 வித எதிர்ப்புகளை தெரிவித்தேன். இந்த திட்டத்தை பொது வினி யோகம், உர மானியம், மண்எண்ணை மானியம் போன்றவற்றிக்கு பயன்படுத்த கூடாது என்று கூறியிருந்தேன்.
ஏன் என்றால் இந்த திட்டம் வழங்கப்படும் பொருட்கள் குறிப்பிட்ட காலத்தில் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டிய முக்கியமானது ஆகும். இதில் நேரடி மானிய திட்டம் சரியாக இருக்காது. மேலும், மத்திய அரசு மாநில அரசு மூலம் இதை செயல்படுத்தாமல், வங்கி மூலமாக நேரடியாக வழங்கு வது மாநில அரசுகளை மீறி தனி வழியில் செல்வதாகும். இது இந்தியாவின் ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், மத்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றிக்கு எதிரானது.அரசியல் சட்டத்தை மீறு வதாக இது அமைந்துள்ளது.
இந்த நிலையில் நேரடி மானிய திட்டத்தை முதல் கட்டமாக அமல் படுத்து வதற்கு அரியலூர், புதுக் கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களை மத்திய அரசு தேர்வு செய்தது. இப்போது மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தமிழக அரசுக்கு 7.9.2013_ல் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.அதில் 2_வது கட்டமாக சமையல் கியாஸ், நேரடி மானிய திட்டத்தை இந்தியா முழுவதும் 235 மாவட்டங் களில் அமல்படுத்தப் போவ தாகவும், அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 28 மாவட்டங்கள் சேர்க்கப் பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் 1.1.2014 முதல் அமலுக்கு வரப்போவ தாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு நான் எனது கடுமையான எதிர்ப்நிப தெரிவித்துக் கொள்கிறேன். சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்துக்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். சமையல் கியாஸ் மிகவும் அத்தியாவசியமான பொருளாகும். இது தேவையான நேரத்தில் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும். நேரடி பண மாற்றம் மூலம் உரிய நேரத்தில் உதவி கிடைக்காது.
மேலும், சமையல் கியாஸ் நேரடி மானியம் ஆதார் எண் பெற்றவர்களுக்கு தான் வழங்கப்படும். ஆனால் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ஆதார் எண் வழங்கப்படும் பணி மிகவும் மந்தமான நிலையில் நடக்கிறது. இதில் ஏராளமான குழப்பங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் ஆதார் அட்டை பெற தகுதியுடைய 6 கோடியே 74 லட்சம் பேர் உள்ளனர். ஆனால் இதுவரை 2 கோடியே 52 லட்சம் பேருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது.இப்படி இருக்க இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும். இதில் குழப்பமும், பொது மக்களுக்கு தொல்லையும் தான் ஏற்படும். இந்த திட்டத்தை அமல் படுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்கி இருக்கிறார்கள். 3 மாதத்திற்குள் ஆதார் எண்ணை பெறாதவர்கள் எப்படி கியாஸ் நேரடி மானியத்தை பெற முடியும்.
ஆதார் அட்டையை எந்த ஒரு சேவை பணிக்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பில் கூறியுள்ளது. அப்படி இருக்க நேரடி மானிய திட்டத்துக்கு அதை பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமாக அமைகிறது.இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்எண்ணை அளவு 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமம் மற்றும் சிறு நகர பகுதிகளில் மக்கள் சமையலுக்கு விறகு மற்றும் மின்சாரத்தை பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.
நான் ஏற்கனவே மத்திய அரசு திட்ட பயனாளிகளை அடையாளம் காணுவதற்கு மாநில அரசின் நிர்வாகத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தேன். ஆனால் கியாஸ் நேரடி மானிய திட்டத்திற்கு அதை மீறி பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த திட்டத்தை பொறுத்தவரையில் மாநில அரசுகளுடன் கலந்து பேசிதான் முடிவு எடுக்க வேண்டும்.
ஆதார் அட்டை இன்னும் வழங்கப்படாத நிலையிலும், பாங்கிகளில் உரிய வசதிகள் செய்து தரப்படாத நிலையிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது சரியாக இருக்காது. மேலும், கோர்ட்டு வழங்கியுள்ள உத்தரவுகளுக்கும் எதிராக இது அமைந்துள்ளது.இதனால் உரிய உத்தரவாதம் அளிக்கும் வரையில் இந்த திட்டத்தை அமல்படுத்தக்கூடாது. இதை முற்றிலும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதுவரை இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 2 days 2 min ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 5 days 4 min ago |
ராகி அடை![]() 1 week 1 day ago |
-
ஒடிசா மாநிலத்தில் நடந்த பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் சுகாதார அமைச்சர் பலி : வெறிச்செயலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை
29 Jan 2023புவனேஸ்வர் : ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்ச
-
வங்க கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
29 Jan 2023சென்னை : தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில
-
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பார்லி.யில் குரல் எழுப்ப வேண்டும் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Jan 2023சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்
-
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
29 Jan 2023சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
-
யு-19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை வென்று சாதனை
29 Jan 2023ஜொகனர்ஸ்பெர்க் : 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது.
-
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
29 Jan 2023அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனுதாக்கல் நாளை துவங்குகிறது : வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதி
29 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்செய்யும் பணி நாளை தொடங்குகிறது.
-
ஆஸ்திரேலிய ஓபன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன்
29 Jan 2023சிட்னி : ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
-
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
29 Jan 2023மதுரை : ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
-
நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: ஹூரியத் அலுவலகத்துக்கு சீல் வைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்
29 Jan 2023ஜம்மு ; டெல்லி கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து ஹூரியத் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்
29 Jan 2023புது டெல்லி : இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவ
-
பழனி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது : பிப்ரவரி 7-ம் தேதி தேரோட்டம்
29 Jan 2023பழனி : முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
ஆஸி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
29 Jan 2023பெர்த் : ஆஸி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
-
கன்னட பட காமெடி நடிகர் மாரடைப்பால் காலமானார்
29 Jan 2023பெங்களூரு : கன்னடத்தில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் மன்தீப் ராய் மாரடைப்பால் காலமானார்.
-
ஆஸ்திரேலிய ஓபன் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
29 Jan 2023மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ஜோகோவிச்.
-
சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி வருகிற 12 -ம் தேதி துவங்குகிறது
29 Jan 2023சென்னை : சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி வருகிற 12 -ம் தேதி துவங்குகிறது. இதில் 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
-
குடியரசு தினத்தின் நிறைவாக டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி
29 Jan 2023புதுடெல்லி : குடியரசு தினத்தின் நிறைவாக, டெல்லியில் நேற்று முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடந்தது.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு
29 Jan 2023சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
-
அண்ணா நினைவு நாள்: வரும் 3-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
29 Jan 2023சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி வரும் 3-ம் தேதி சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடத்தப்படுகிறது.
-
சேலத்தில் எடப்பாடியுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை : அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என பேட்டி
29 Jan 2023சேலம் : சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார். அப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
-
ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் : ம.பி. முதல்வர் அறிவிப்பு
29 Jan 2023போபால் : பொருளாதார ரீதியில் ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-30-01-2023
30 Jan 2023 -
வினாத்தாள் கசிவு: குஜராத்தில் அரசு தேர்வு ஒத்திவைப்பு
29 Jan 2023காந்திநகர் : குஜராத்தில் பஞ்சாயத்து ஜூனியர் கிளார்க் ஆள்சேர்ப்பு தேர்வு வினாத்தாள் வெளியானதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இதுவரை 220.4 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன : மத்திய அரசு தகவல்
29 Jan 2023புதுடெல்லி : நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை மொத்தம் 220.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள
-
இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா: குஜராத்தில் ஒருவர் பலி
29 Jan 2023புது டெல்லி ; இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.