எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், டிச.13 - அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘பாரின் பாலிஸி’ பத்திரிகையின் 2013-ம் ஆண்டின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சமூக ஆர்வலர்கள் ஊர்வசி புட்டாலியா, கவிதா கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
‘பாரின் பாலிஸி’ பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தங்களின் கருத்துகள் மற்றும் செயல்பாடுகளால் சமூகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் 100 பேரை அடையாளம் காட்டும் வகையில் இப்பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்தப் பட்டியலில் 32-வது நபராக அரவிந்த் கெஜ்ரிவால் (45) இடம்பெற்றுள்ளார்.
ஊழ லுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்துச்சென்றவர்; குடிமக்களின் தேவை அறிந்து அரசு பணியாற்ற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியவர்; குறிப்பாக டெல்லியில் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கெஜ்ரிவால் ஈடுபட்டவர்; முக்கிய அரசியல் தலைவர்களின் ஊழலை எந்தவிதமான அச்சமும் இல்லாமல் பகிரங்கப்படுத்தியவர்; காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நில பேர முறைகேடு குறித்து வெளிப்படையாக தெரிவித்தவர் என்று கெஜ்ரிவாலை அந்த பத்தி ரிகை புகழ்ந்துள்ளது.
ஊர்வசி புட்டாலியா, கவிதா கிருஷ்ணன் ஆகியோர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை கண்டித்து குரல் கொடுத்ததிலும், போராட்டம் நடத்தியதிலும் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மேலும் சில இந்தியர்கள் விவரம்:
மக்களின் உடல் நலத்துக்கான உரிமை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஐ.நா.வால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு பிரதிநிதி ஆனந்த் குரோவர், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாகி ரோகித் வான்சூ, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டாக்டர் சஞ்சய் பாசு, ஏஞ்சல் லிஸ்ட் முதலீட்டு நிறுவன உரிமையாளர் நவல் ரவிகான்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எட்வர்ட் ஸ்னோடென்
பல்வேறு நாடுகளின் தலைவர் களையும், முக்கிய நபர்களையும் அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. கண்காணித்து வருகிறது. அவர்கள் பயன்படுத்தும் செல்போன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களை ஒட்டுக் கேட்கும் பணியிலும், இணையம் மூலம் மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்களை திருடி தகவல் சேகரிக்கும் பணியிலும் என்.எஸ்.ஏ. ஈடுபடுவதாக தகவல் வெளியானது. இந்த தகவல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்ட என்.எஸ்.ஏ.வின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென், இந்த பட்டியிலில் முதலிடம் பெற்றுள்ளார்.
உலகத் தலைவர்கள்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரோவ், ஜப்பான் பிரதமர் ஷென்ஜோ அபே, ஈரான் அதிபர் ஹசன் ருஹானி, போப்பாண்டவர் பிரான்சிஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை, சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்படுவது தொடர்பாக ஆய்வுப் பணியில் ஈடுபட்ட உலக நாடுகள் குழுவை வழிநடத்திய ராஜேந்திர பச்சோரி, பாகிஸ்தானில் பெண் கல்வி உரிமைக்காக போராடிய மலாலா யூசஃப்சாய் ஆகியோரும் ‘பாரின் பாலிசி’ வெளி யிட்டுள்ள உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
எவ்வித கட்டணமுமின்றி கொலை செய்யப்பட்ட பீகாரை சேர்ந்த 3 பேரின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
03 Feb 2026சென்னை, வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களால் கடந்த சில நாட்களுக்கு கொலை செய்யப்பட்ட பீகாரை சேர்ந்த 3 பேரின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும
-
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: மேக் இன் இந்தியா திட்ட பணியை வலுப்படுத்தும்: மத்திய அமைச்சர்
03 Feb 2026புதுடெல்லி, இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்படும் என்று தெரிவித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நாட
-
41 பேரை காப்பாற்ற முடியாதவர் 7 கோடி மக்களை எப்படி காப்பாற்றுவார்? விஜய்க்கு அமைச்சர் பெரியசாமி கேள்வி
03 Feb 2026திண்டுக்கல், திண்டுக்கல்லில் பேரறிஞர் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார் கொலம்பியாவின் அதிபர் அதிபர் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை
03 Feb 2026நியூயார்க், அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்ற கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை நேரில் சந்தித்து முக்கிய பேச
-
39 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்: தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு
03 Feb 2026புதுடெல்லி, பல்வேறு தேர்தல் வெற்றிகளால் திருப்தி அடைந்து விடக்கூடாது என்ற தே.ஜ.
-
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சியடையும்: விவசாயத்துறை செயலர்
03 Feb 2026நியூயார்க். புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்கு அதிகப்படியான அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும்.
-
மகளிர் உரிமைத்தொகையால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகமாகியுள்ளது: அமைச்சர்
03 Feb 2026சேலம், கிராமங்களில் லட்சக்கணக்கில் பணம் புழங்குவதற்கு அடிப்படை காரணம் தமிழ்நாடு முதல்வர் வழங்கும் ரூ.
-
சர்வதேச நிச்சயமற்ற சூழ்நிலையால் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம்? மத்திய நிதி அமைச்சர் விளக்கம்
03 Feb 2026புதுடெல்லி, தங்கம் விலை ஏற்ற, இறக்கம் ஆவது ஏன் என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
-
தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள்: மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 12-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்: 12 முக்கிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
03 Feb 2026சென்னை, தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
-
தி.மு.க.வை விஜய் விமர்சிப்பது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
03 Feb 2026திருச்சி, த.வெ.க. தொண்டர்களை உற்சாகப்படுத்தவே தி.மு.க.வை விமர்சனம் செய்து விஜய் பேசியுள்ளார் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
-
234 சட்டசபை தொகுதிகளில் விஜய்யால் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா..? அண்ணாமலை கேள்வி
03 Feb 2026சென்னை, விஜய்யை நான் தேவையில்லாமல் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எங்களிடம் டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜினே இல்லை.
-
கனடாவில் துப்பாக்கிச்சூடு: இந்தியர்கள் 3 பேர் கைது
03 Feb 2026ஓஸ்லோ, கனடா நாட்டில், தனி நபர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இந்தியர்களை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
ரஷ்யாவில் ஒரு அரிய நிகழ்வு: வானில் தோன்றிய 4 நிலவுகள்:
03 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், இரவு வானத்தில் 4 நிலவுகள் பிரகாசிப்பது போன்ற ஒரு காட்சியை கண்டு மக்கள் திகைத்துப் போனார்கள்.
-
திருப்பூரில் விபத்து: 2 பேர் பலி
03 Feb 2026திருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
-
நாட்டை விற்றுவிட்டார்: பிரதமர் மீது ராகுல் விமர்சனம்
03 Feb 2026புதுடெல்லி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
-
தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகினார் அண்ணாமலை..!
03 Feb 2026கோவை, பா.ஜ.க. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஈரான் அதிபர் பெசாஸ்கியன்
03 Feb 2026தெக்ரான், அமெரிக்கா உடன் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஈரான் அதிபர் பெசாஸ்கியன் வலியுறுத்தியுள்ளார்.
-
விஜய்யைப் பார்த்து எங்களுக்கு பயமில்லை: நிர்மலா சீதாராமன்
03 Feb 2026புதுடெல்லி, விஜய்யைப் பார்த்து தி.மு.க.தான் பயப்பட வேண்டும் என்றும் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
இந்திய நாட்டின் சட்டங்களை பின்பற்றப்படாவிட்டால் உடனே நாட்டை விட்டு வெளியேறலாம்: மெட்டா நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
03 Feb 2026புதுடெல்லி, தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்றும் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படாவிட்டால் நீங்கள் வெளியேறலாம் என்றும் மெட்டா நிறு


