எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஜூன்.18 - மதுரை மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிக்க லஞ்சம் பெற்றதாக மதுரை தி.மு.க. மேயர்தேன்மொழி ,மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எங்கு பார்த்தாலும் ஊழல், வன்முறை, கொள்ளை, கொலை , அரசு நிலங்கள்,தனியார் நிலங்கள் ஆக்கிரமிப்பு சமூக விரோத செயல்கள் தலைவிரித்தாடியது. உள்ளாட்சிகளில் திமுக வெற்றி இடங்களில் திமுகவினர் கடை ஏலம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தனர். திமுகவின் உச்சக்கட்ட ஊழலான ஸ்பெக்டரம் வழக்கில் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதியின் மகள் கனிமொழி உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன் எதிரொலியாக திமுகவினரின் பல்வேறு ஊழல்களை பாதிக்கப்பட்டவர்கள் புகார் மூலம் வெளி கொண்டுவர துவங்கி உள்ளனர்.
ஏமதுரை மதிச்சியத்தை சேர்ந்தவர் ஜெயராம். இவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, மதுரை மாநகராட்சி 9வது வார்டு மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்திற்கு பின்புறம் உள்ள காலியிடத்தை ஆக்கிரமித்து மதிச்சியத்தில் இருக்கும் சுந்தர்ராஜன் மனைவி ரங்கம்மாள் கட்டிடம் கட்டி வந்தார். இது குறித்து மதுரை மேயர் தேன்மொழி, மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்தேன். அதன்பின் அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுவிட்டதாக எனக்கு பொய்யான தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. நான் தொடர்ந்து முயற்சி செய்ததன் விளைவாக கடந்த ஜனவரி 10 ம் தேதி மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே மேயர் ,கமிஷனர், காண்ட்ராக்டர் மாணிக்கம் பிள்ளை ஆகியோர் கூறியதின் பேரில் சர்வேயர் குருசாமி கட்டிடம் கட்டும் ரங்கம்மாளிடம் லஞ்சமாக பணம் வாங்கினார் என்று தெரியவந்தது. இதற்கிடையே நான் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்த விவரம் தெரிந்த ஆக்கிரமிப்பாளர்கள் என்னுடன் போட்டி போட முடிவு செய்து, ஆக்கிரமித்தது போக மீதமிருந்த இடத்திலும் வீடுகட்டுவோம். அதற்கு தேவையான ஆவணங்களை போலியாக தயார் செய்வோம் என்று கூறினர். எனவே, அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு விதிகளுக்கு முரணாக செயல்படுவதாக கூறி அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யும் படி போலீசாருக்கு உத்தரவிடும் படி ஐகோர்ட் கிளை உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தார். இந்த மனு நீதிபதி ஜேம்ஸ் டேவிட் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் கந்தசாமி ஆஜரானார். முடிவில் மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்கள் குறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு உரிய விசாரணை நடத்தி ஜூலை 15ம் தேதிக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மேயர் தேன்மொழி, கமிஷனர் ஜெபாஸ்டின், நகர அமைப்பு அதிகாரி முருகேசன், உதவிக்கமிஷனர்கள், செயற்பொறியாளர்கள், காண்ட்ராக்டர் உட்பட 13 பேர் மீது 120(பி) கூட்டுச்சதி, 13(1பி), 13(2) ஆகிய லஞ்ச தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திமுக மேயர் தேன்மொழி மற்றும் கமிஷனர் செபாஸ்டினிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி


