முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு 1ம் தேதி தொடங்குகிறது

புதன்கிழமை, 22 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன் - 22 - பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் வருகிற ஆகஸ்டு மாதம் 1 ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 8 ம் தேதிவரை நடைபெற உள்ளது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை வருகிற ஆகஸ்டு 1 ம் தேதிமுதல் செப்டம்பர் 8 ம் தேதிவரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு 1 ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 ம் தேதி முடிவடையும் என்றார்.
ஆகஸ்டு 1 ம் தேதிமுதல் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை கூட்டுமாறு ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு பரிந்துரை செய்வது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தின் இரு சபைகளையும் ஆகஸ்டு 1 ம் தேதி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கூட்டுவார் என்றும் அவர் கூறினார். இந்த மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் தாமதமாக கூட்டப்படுகிறதா என்று கேட்டதற்கு இதற்கு முன்புகூட பாராளுமன்றம் ஆகஸ்டு மாதத்தில் கூட்டப்பட்டுள்ளது என்று பன்சால் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்