தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, ஜூலை.- 4 - பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதா கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. இதனால் விலைவாசிகள் உயர்ந்து ஏழை,எளிய மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை பாராளுன்றத்தில் கொண்டுவரக்கோரி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காந்தீயவாதி அண்ணா ஹசாரே டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதிலிருந்து சமாளிக்க லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதி அளித்தது. அதன்படி லோக்பால் மசோதாவுக்கான அம்சங்களை தயார் செய்ய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டியில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 5 பேர் அரசு பிரதிநிதிகளும் மீதி 5 பேர் சிவில் பிரதிநிதிகளும் இடம் பெற்றனர். சிவில் பிரதிநிதிகள் அண்ணா ஹசாரே தலைமையில் செயல்பட்டனர். லோக்பால் மசோதாவுக்கு அம்சங்களை அரசு பிரதிநிதிகள் தனியாகவும் சிவில் பிரதிநிதிகள் தனியாகவும் உருவாக்கினர். லோக்பால் மசோதா அதிகாரத்தின்கீழ் பிரதமர், சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர்களையும் கொண்டு வர வேண்டும் என்று சிவில் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அரசு பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அம்சங்கள் உருவாக்குவது தொடர்பாக சிவில் பிரதிநிதிகளும் அரசு பிரதிநிதிகள் 9 தடவை சந்தித்து பேசினர். அப்போதும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்தநிலையில் வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்காவிட்டால் மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதியில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். மேலும் தாம் கூறும் கருத்துக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கொடுக்கும்படி எல்.கே.அத்வானி உள்பட பாரதிய ஜனதா மூத்த தலைவர்கல், அஜீத்சிங், நிதீஷ்குமார் உள்பட பல முக்கிய தலைவர்களை ஹசாரே சந்தித்து பேசினார். சோனியா காந்தியையும் அவர் சந்தித்து பேசினார்.
லோக்பால் மசோதாவில் அம்சங்கள் சேர்ப்பது குறித்து கருத்தொற்றுமையை ஏற்படுத்த நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், எல்.கே. அத்வானி ஆகியோர் உள்பட தலைவர்கள் பேசினர். பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்று உறுதி அளித்தார். இந்த மசோதாவானது இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் ஒரு மசோதாவாக இருக்கும். அரசு அமைப்புகளுடன் இணைக்கமாக செயல்படும் வகையிலும் இருக்கும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பாரதிய ஜனதா தலைவர்கள் பேசுகையில் லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்கு கீழ் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர். மத்தியில் பாரதிய ஜனதா அரசு இருந்தபோது லோக்பால் மசோதாவுக்குள் பிரதமரையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறினர். லோக்பால் மசோதாவுக்குள் பிரதமரை கொண்டுவர காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்பால் மசோதாவுக்குள் பிரதமரை கொண்டுவர தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், பாரதிய ஜனதா தலைவர்கள் எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வலது கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.பி.பரதன், டி.ராஜா, இடது கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரீய ஜனதா தலைவர் லல்லு பிரசாத் யாதவ், அ.தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் தம்பித்துரை, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மற்றும் பல தலைவர்கள் கலந்துகொண்டனர். சிவில் உறுப்பினர் அண்ணாஹசாரேவும் கலந்துகொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 1 day 6 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 5 days 20 min ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 1 day ago |
-
அமெரிக்க கருக்கலைப்பு சட்ட உரிமை ரத்துக்கு எதிர்ப்பு: ஆஸ்திரேலியாவில் பொதுமக்கள் பேரணி
03 Jul 2022மெல்போர்ன் : அமெரிக்க கருக்கலைப்பு சட்ட உரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் சுமார் 15,000 பெண்கள் மற்றும் ஆண்கள் கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.
-
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
03 Jul 2022தூத்துக்குடி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது அலகுகள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மி
-
பெய்து வரும் தொடர் கனமழை: சிட்னியில் வெள்ள நீரில் மூழ்கிய குடியிருப்புகள்
03 Jul 2022சிட்னி : ஆஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சிட்னியில் உள்ள ஆயிரக்கணக்கான பொது
-
தென்கொரியா, ஜப்பானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்: வடகொரியா விமர்சனம்
03 Jul 2022சியோல் : ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சமீபத்திய ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சித்துள்ளது.
-
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பிரான்சில் முககவசம் அணிய மக்களுக்கு அறிவுரை
03 Jul 2022பாரீஸ் : வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, பிரான்சில் முககவசம் அணிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
11-ல் நடக்கும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொது செயலாளர் பதவி உருவாக்கப்படும் : நத்தம் விஸ்வநாதன் பேட்டி
03 Jul 2022சென்னை : வரும் 11-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க.
-
இன்று சூரியனில் இருந்து தொலை தூர நிலைக்கு பூமி செல்வதால் குளிர் உயரும்
03 Jul 2022புதுடெல்லி : சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
-
11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை : வைத்திலிங்கம் திட்டவட்டம்
03 Jul 2022சென்னை : 11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
-
சென்னை காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை : அலைமோதிய வாடிக்கையாளர்கள்
03 Jul 2022சென்னை : வார விடுமுறை நாளான நேற்று சென்னை, காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியது.
-
நாமக்கல்லில் தி.மு.க. சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
03 Jul 2022நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க.
-
1974-ல் உருவாக்கிய தன்னுடைய 'ரெஸ்யூமை' பகிர்ந்த பில்கேட்ஸ்
03 Jul 2022வாஷிங்டன் : 1974-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தன்னுடைய ரெஸ்யூமை பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.
-
செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னேற்பாடு பணிகள்: தலைமை செயலாளர் இறையன்பு உயர் அலுவலர்களுடன் ஆய்வு
03 Jul 2022சென்னை : 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு
-
உஸ்பெகிஸ்தானில் ஆக. 2 வரை அவசர நிலை பிறப்பிப்பு : அதிபர் மாளிகை தகவல்
03 Jul 2022தாஷ்கண்ட் : கரகல்பக்ஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலைமை ஆகஸ்ட் 2 வரை நீடிக்கும் என்று அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
-
8 பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
03 Jul 2022சென்னை : கோவை, நெல்லை உள்ளிட்ட 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது
03 Jul 2022புதுடெல்லி : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர்கள் எல்லையிலிருந்து பணமும் பெற்றிருப்பது அம்பலமாகி உள்ளது.
-
சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் ரோப் கார் : தமிழக அரசிடம் பரிந்துரை தாக்கல்
03 Jul 2022சென்னை : சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் ரோப் கார் இயக்கும் திட்டத்துக்கு விரிவான பரிந்துரை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ஹாங்காங் அருகே புயலில் சிக்கி மூழ்கும் கப்பல் : ஊழியர்களை மீட்க போராடும் கடலோர காவல்படை
03 Jul 2022ஹாங்காங் : தென் சீனக்கடலில் இயக்கப்படும் என்ஜினீயரிங் கப்பல் ஒன்று, ஹாங்காங் அருகே புயலில் சிக்கி கவிழ்ந்துள்ளது.
-
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது : 11-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
03 Jul 2022நெல்லை : தென் தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலயங்களில் ஒன்று நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில்.
-
தொடர் மழையால் சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகளுக்கு தடை
03 Jul 2022கம்பம் : தொடர் மழையால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீரின் வேகம் அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
-
காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் திருப்பூர், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
03 Jul 2022சென்னை : காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் திருப்பூர் தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெர
-
ஒழுங்கீனம், முறைகேடு அதிகரித்தால் சர்வாதிகாரியாக நடவடிக்கை எடுப்பேன் : நாமக்கல் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
03 Jul 2022நாமக்கல் : ஒழுங்கீனம் மற்றும் முறைகேடு அதிகரித்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
-
பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 10 பேர் பலி
03 Jul 2022பாட்னா : பீகாரில் மின்னல் தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பீகார் முழுவதும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒரே நாளில் மி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-03-07-2022
03 Jul 2022 -
மகாராஷ்டிர சட்டசபையில் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்த ஷிண்டே அணி
03 Jul 2022மும்பை : மகாராஷ்டிர சட்டசபையில் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்த ஷிண்டே அணியினரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கனமழையால் மீட்புபணி பாதிப்பு: மணிப்பூர் நிலச்சரிவிற்கு பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு
03 Jul 2022இம்பால் : மணிப்பூரில் மீண்டும் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலசரிவிற்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.