எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.- 7 -2011-12-ம் ஆண்டுக்கான தமிழக திட்டங்களுக்கு ரூ.23 ஆயிரத்து 535 கோடியை மத்திய திட் டக்குழு ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டக்குழுவுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட ரூ.3 ஆயிரத்து 467 கோடி அதிகமாகும். இந்தநிதி ஒதுக்கீடு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய திட்டக்குழு நிதி ஒதுக்கீடு செய்யும். நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அந்தந்த மாநிலங்களின் திட்டங்களுக்கு தகுந்தவாறு மத்திய திட்டக்கமிஷன் நிதி ஒதுக்கீடு செய்யும். மாநிலங்களுக்கு திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாக நேற்று மத்திய திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டக் சிங் அலுவாலியா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாண்டெக் சிங் அலுவாலியா அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் புதுடெல்லி சென்றார். டெல்லி சென்ற அவரை முன்னதாக தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுடன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் சாரங்கி மற்றும் உயரதிகாரிகள் சென்றனர். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி, நாடாளுமன்ற அ.தி.மு.க. குழு தலைவர் தம்பித்துறை மற்றும் கட்சியின் எம்.பி.க்கள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஜெயலலிதா நேராக தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அங்கு ஜெயலலிதாவுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். அதனையடுத்து மத்திய திட்டக்குழு கூட்டத்திற்கு சென்றார். கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு ஜெயலலிதா சென்றதும் அவருக்கு மாண்டக் சிங் அலுவாலியா பூச்செண்டு கொடுத்து அன்புடன் வரவேற்றார். மாண்டெக் சிங் அலுவாலியாவுடன் ஜெயலலிதா சிறிது நேரம் பேசினார். இந்த பேச்சுக்கு பின்னர் மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் மாண்டக் சிங் அலுவாலியா மற்றும் அவரது துறையை சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கும் ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுவிட்தாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் குக்கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து கொடுத்தல், மாநிலத்தில் சுகாதார வசதிகளை பெருக்கவும், வறுமையை ஒழிக்கவும் தமிழகத்திற்கு ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார். ஜெயலலிதா கூறிய நியாயமான திட்டங்களை ஆய்வு செய்த திட்டக்கமிஷன் ஜெயலலிதா கேட்டதை விட ரூ.535 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கியது. அதாவது 2011-12-ம் ஆண்டுக்கான மொத்த திட்ட நிதி ரூ.23 ஆயிரத்து 535 கோடியை திட்டக்கமிஷன் ஒதுக்கீடு செய்தது. இந்த நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு தமிழகத்திற்கு திட்டக்கமிஷன் ஒதுக்கீடு செய்த தொகையை விட ரூ. 3 ஆயிரத்து 535 கோடி அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டுகளில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. இடம்பெற்றிருந்த போதிலும் கருணாநிதியால் தமிழக திட்டங்களுக்கு இவ்வளவு அதிகமாக நிதியை கேட்டு பெற முடியவில்லை. ஆனால் அ.தி.மு.க. கட்சியானது காங்கிரஸ் கூட்டணியில் இல்லாததோடு மத்திய அரசிலும் இடம்பெறவில்லை. அப்படி இருந்தும் ஜெயலலிதா தனது நிர்வாக திறமையால் கூடுதல் நிதி பெற்றுள்ளார்.
கூட்டம் முடிந்ததும் ஜெயலிலாதவை மாண்டெக் சிங் அலுவாலியா வாசல்படி வரை வந்து மரியாதையுடன் வழியனுப்பி வைத்தார். வெளியே வந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா திட்டக்குழுவின் நிதி ஒதுக்கீடு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இந்த நிதி ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்பார்த்ததுதான். தமிழக அரசின் கடன் ரூ. ஒரு லட்சம் கோடியாக உள்ளது. மேலும் 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பில் இருக்கிறது. இதை சமாளிக்க தமிழகத்திற்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று திட்டக்குழுவை நான் கேட்டுக்கொண்டேன். தமிழக அரசின் சில கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. தமிழக மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன் என்று ஜெயலலிதா மேலும் கூறினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாண்டக்சிங் அலுவாலியாவிடம் தமிழகத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த மாண்டக் சிங் அலுவாலியா, இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2025.
15 Nov 2025 -
பொங்கல் பண்டிகை: சில நிமிடங்களில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்
15 Nov 2025சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
-
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: டி.டி.வி.தினகரன்
15 Nov 2025சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையேதான் போட்டி என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
-
பீகார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி 23 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம்
15 Nov 2025பாட்னா : பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
15 Nov 2025சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.
-
திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பக்தர்கள் அவதி
15 Nov 2025புதுச்சேரி : திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
-
இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
15 Nov 2025சென்னை, இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
-
ரஜினியின் 173-ம் படத்தில் இருந்து இயக்கனர் சுந்தர் சி விலகல் ஏன்..? கமல்ஹாசன் பதில்
15 Nov 2025சென்னை, ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் கதை கேட்டுக்கொண்டே இருப்போம் என அவரது 173-வது திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
நைஜீரியாவில் தொடக்கப் பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து
15 Nov 2025அபுஜா, நைஜீரியாவில் தொடக்க பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
15 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரம்: பெலாரஸ் எல்லையை மூடிய லித்துவேனியா
15 Nov 2025வில்னியஸ், தங்கள் எல்லைக்குள் மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரத்தை அடுத்து பெலாரஸ் எல்லையை மூடியது லித்துவேனியா.
-
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது
15 Nov 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வின் 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது.
-
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவானது: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை
15 Nov 2025சென்னை, வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
-
டெல்லியில் காற்று மாசு; சுப்ரீம் கோர்ட் கவலை
15 Nov 2025புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசு குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ள நிலையில், காற்று மாசு வழக்கில் வழக்கறிஞர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராக அறிவுறுத்தியுள்ளது
-
ஐ.நா. பொதுச்செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
15 Nov 2025வாஷிங்டன், ஐ.நா. பொதுச்செயலாளரை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
-
காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு
15 Nov 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர்
-
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவுத்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
15 Nov 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத்திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் முதல் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி,
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டங்களுக்கு த.வெ.க.வையும் அழைக்க வேண்டும்;: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
15 Nov 2025சென்னை : தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழு
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது: ராகுல்
15 Nov 2025பாட்னா, பீகார் தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
-
4 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
15 Nov 2025காபுல், ஆப்கானிஸ்தானில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
-
இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் : அமெரிக்க அதிகாரி தகவல்
15 Nov 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம்; அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்தார்.
-
பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறி: நடவடிக்கை எடுக்க வி.எச்.பி. வலியுறுத்தல்
15 Nov 2025சென்னை : தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறியாக உள்ளதையடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வி.எச்.பி. வலியுத்தினார்.
-
1 கோடி பேர் நோயால் பாதிப்பு: தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
15 Nov 2025சென்னை, தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
15 Nov 2025சென்னை, பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இது அனைவருக்குமான பாடம் என்
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: பா.ஜ.க.வுக்கு முதல்வர் பதவி
15 Nov 2025பாட்னா, தேசிய ஜனநாயக கூட்டணி அசுர பலத்துடன் காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை தக்கவைத்துள்ளது.



